Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரை கொல்ல துணை பாதுகாப்பு அமைச்சர் பதவி கேட்டாராம் சந்திர

Featured Replies

தமிழரை கொல்ல துணை பாதுகாப்பு அமைச்சர் பதவி கேட்டாராம் சந்திரசேகரன். - மீண்டும் சந்திரசேகரனின் வங்குரோத்து அரசியல்.

[சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 01:21 தமிழீழம்] [எஸ்.கே]

மலையக மக்கள் முன்னனியின் தலைவர் பொ.சந்திரசேகரன் இன்று இலங்கை அரசுடன் இனைந்துகொண்டுள்ளார். மலையக மக்களை காக்கவும் வாக்கு போட்ட மக்களை காக்கவும் இவ்வாறு இனைந்துள்ளதாக சந்திரசேகரன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். இதே நேரம் தமிழர் எல்லாரும் ஒன்றினைந்து ஒரு பொது திட்டத்தின் கீழ் வேலை செய்யவேண்டும் என்று வன்னிக்கு சென்று பகிரங்க ஊடகப் பேட்டி கொடுத்து புலிகளுடன் இணைந்து கொள்வேன் என்று மகிந்த ராஜபக்சவுக்கு மிரட்டல் விட்ட ஆறுமுகம் தொண்டமானும் இன்று தன்னை அரசுடன் இணைத்துள்ளார். இருவரும் மலையக மக்களை பாதுகாக்க அரசுடன் இணைந்துள்ளதாக கூறி தப்பி கொள்ள முற்படுவதுடன் தமிழர் தொடர்பான கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இது விடிய விடிய இராமன் கதை என்பது போன்று இருக்கின்றது. சந்திரசேகரனிடமும் தொண்டமானிடமும் சில மயக்கமான விடயங்களுக்கு விளக்கமான பதிலை இலங்கை தமிழர்களான அனைத்து பிரதேச தமிழர்களும் கேட்டு நிற்கின்றார்கள்.

ஜக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் மகேஸ்வரன் அவசரகாலச்சட்டத்திற்கு எதிராக தனது கட்சியின் கொள்கைக்கு மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து வாக்களித்து வருகிறார்.

அப்படியானால் பொ.சந்திரகேரனும் ஆறுமுகம் தொண்டமானும் ஈழத்தமிழர்களை கொல்வதற்காகவும் மலையக தமிழர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் கண்ட இடத்தில் கடத்தி சென்று கற்பளிக்கவும் கொலை செய்யவும் அடிமைகளாக நடாத்தவும் வழிவகுத்துள்ள அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து மலையக தமிழர்களுக்கும் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கும் அழிவை ஏற்படுத்த போகிறீர்களா?

இல்லையேல் நீங்கள் இனைந்துள்ள அரசின் கொள்கைக்கு எதிராக அவசரகாலசட்டத்தில் எதிர்த்து வாக்களிக்கபோகிறீர்களா?

ஸ்ரீலங்கா அரச சாக்கடைக்குள் அமைச்சர் பிச்சை கேட்டு சென்றுள்ள ஆறுமுகம் தொண்டமானும் பொ.சந்திரசேகரனும் தற்போதுள்ள அரசின் பங்காளிக் கட்சியான ஜே.வி.பி தொடர்பாகவும் பௌத்த இனவாதக் கட்சிகள் தொடர்பாகவும் அவர்களுடன் இனைந்து செயற்படுவது தொடர்பாகவும் உள்ள கொள்கை மற்றும் உறவு நிலைப்பாடு என்ன என்பதனை தெரிவிப்பார்களா?

மலையக மக்கள் முன்னனியின் கொழும்பு மாவட்ட இனைப்பாளர் கடத்தபட்டுள்ளார். மக்களை காக்க அமைச்சராகிறோம் என்று கூறிக்கொள்ளும் நீங்கள் உங்கள் கட்சியின் கொழும்பு இனைப்பாளரையே பாதுகாக்க அருகதையற்ற நேரத்தில் எப்படி உங்களுக்கு வாக்கு போட்டவர்களை பாகாக்க போகிறீர்கள் இல்லையேல் உங்கள் கட்சி இனைப்பாளரை விடுதலை செய்த பின்னராதல் இனைந்திருக்கலாம் இவ்வளவு அவசரப்பட்டதன் உள் நோக்கம் என்ன?

மகிந்த ஆட்சிக்கு வந்தபின்னர் பல ஆயிரம் தமிழ் உறவுகள் கொல்லபட்டுள்ளார்கள் நீங்கள் இருவரும் ஆட்சி பொறுப்பை ஏற்கும்போது கொழும்பில் உங்களுக்கு வாக்கு போட்ட 3 பெண்கள் வெள்ளை வான் காரர்களால் கடத்தி செல்லபட்டுள்ளார்கள் இதனையும் நீங்கள் ஒரு கணம் சிந்தித்தீர்களா?

மொத்தத்தில் பொ.சந்திரகேரனின் கதையை கேட்கம் போது உயர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்ற சித்தாந்தத்தில் ஏதோ தவறு இருப்பது போன்று தெரியவில்லையா?

இவற்றிற்கும் அப்பால் தற்போது நீங்கள் அமைச்சர் பதவி எடுத்துள்ளீர்கள்.

இனிமேல்

அமைச்சர் சந்திரசேகரன் வன்னிக்கு செல்வாரா?

வன்னியில் அரசியல் கலந்துரையாடலை மேற்கொள்வாரா?

வன்னி சென்றுவர அமைச்சர் சந்திரசேகரனுக்கு இலங்கை அரசு பாதுகாப்பு கொடுக்குமா?

அல்லது

வன்னி பயனங்களுக்கு பாய் சொல்லிவிட்டாரா சந்திரசேகரன்.?

சந்திரசேகரனின் கடந்தகால செயற்பாடுகளுக்கும் எதிர்கால செயற்பாடுகளுக்கும் இடையே ஆன வேறுபாட்டில் இலங்கை அரசின் பங்களிப்பு எத்தகைய மாற்றத்தை உண்டு பண்ண போகின்றது?

இவற்றிக்கான பதிலை இரண்டு அரசியல் தலைவர்களும் ஊடகங்கள் உடாக பகிரங்க படுத்துவார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.