Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலை முயற்சி நாடகம் நடிகை விஜயலட்சுமி

Featured Replies

தற்கொலை முயற்சி நாடகம் நடிகை விஜயலட்சுமி 4 பேரை காதலித்தார்: படக்குழு பெண் பரபரப்பு தகவல்

டி.வி.நடிகை விஜயலட்சுமி தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றார்.

டைரக்டர் ரமேஷ் திருமணம் செய்து கொள்ளுமாறு தொந் தரவு செய்ததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் மீதும் டைரக்டர் ரமேஷ் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தனிப்படை போலீசார் பெங்களூர் சென்று டைரக்டர் ரமேஷிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது விஜயலட்சுமி தொடர்பாக பல புதிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. நடிகை விஜயலட்சுமிதான் விரட்டி, விரட்டி டைரக்டர் ரமேஷை காதலித்ததும், பிறகு அவராகவே பிரிந்து சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து நடிகை விஜயலட்சுமி யார்-யாருடன் தொடர்பு வைத்திருந்தார்ப அவர் தற்கொலை முயற்சிக்கு உண்மையான காரணம் என்ன என்று விசாரித்தனர். இந்த விசாரணை காரணமாக விஜயலட்சுமி விவகாரத்தில் பல மாறுபட்ட தகவல்கள் கிடைத்துள்ளது.

குறிப்பாக நடிகை விஜய லட்சுமி ஒரு "காதல் பைத்தியம்''என்று போலீசாரிடம் படப்பிடிப்புக்குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதனால் போலீசாரின் சந்தேகப் பார்வை நடிகை விஜயலட்சுமி மீது திரும்பி உள்ளது.

இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி பற்றியும் அவரது நடத்தை குறித்தும் ராடன் டி.வி. நிறுவன நிர்வாகி ஒருவர் "மாலை மலர்'' நிருபரிடம் திடுக்கிடும் வகையில் தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

ராடன் டி.வி. நிறுவனம் தயாரிக்கும் "சூர்யவம்சம்'' தொடர் மற்றும் தங்க வேட்டை கேம்-ஷோ இரண்டிலும் நடிகை விஜயலட்சுமி நடித்து வந்தார். சூர்ய வம்சம் தொடர் 310 எபிசோடு ஒளிபரப்பாகி உள்ளது. இதில் கடந்த 1 ஆண்டுகளாக விஜய லட்சுமி எங்களுடன் பணியாற்றி வந்தார்.

முதலில் அவர் ஒரு நல்ல நடிகையாகத்தான் இருந்தார். எல்லாரிடமும் கலகலப்பாக பேசுவார். அப்படிப்பட்டவர் இன்று மாறி, மாறி பேசுவதை பார்த்தால் எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

எல்லோரிடமும் அவர் பேசுவதை யாருமே தவறாக நினைக்கவில்லை. ஆனால் அவை எல்லாம் அவரது மோசமான நடத்தைகளாக இருப்பது இப்போது தான் எங்களுக்கு புரிந்துள்ளது. அவர் ஒரு காதல் பைத்தியமாகவே இருந்துள்ளார்.

அவரை பற்றி எங்களால் நிறைய விஷயங்களை சொல்ல முடியும். ஆனால் ஒரு பெண் என்பதால் அவர் வாழ்க்கை நாசமாகி விடக்கூடாதே என்ற எண்ணத்தில் இரக்கப்பட்டு சொல்ல மனம் வரவில்லை. என்றாலும் விஜயலட்சுமி கடந்த 1 ஆண்டுகளில் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறார் என்பதை சொல்கிறேன்.

விஜயலட்சுமி வித்தியாச மான குணம் கொண்டவர். படப்பிடிப்பில் பார்க்கும் ஆண்களை எல்லாம் காதலிக்க வேண்டும். கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார். கொஞ்சம் பேசி விட்டால் "ஐ லவ் ï'' சொல்லி விடுவார். அப்படிப்பட்ட ரகம் அவர்.

இதுவரை எங்களுக்கு தெரிந்து அவர் 4 பேரை காதலிப்பதாக சொல்லி தன் ஆசையை வெளிப்படுத்தி உள்ளார். டைரக்டர்கள் ராஜா (சூர்யவம்சம்) ரமேஷ் (தங்கவேட்டை) மற்றும் எங்கள் புரொடக்ஷன் மானேஜர்கள் 2 பேரிடம் அவர் ஐ லவ்ï என்று சொல்லி இருக்கிறார்.

டைரக்டர்கள் ராஜா, ரமேஷ் இருவரும் விஜயலட்சுமி காதலை ஏற்கவில்லை. ஒதுங்கிப் போனார்கள். ஆனால் விஜயலட்சுமி விடாமல் அவர்களை விரட்டி, விரட்டி "டார்ச்சர்'' செய்து என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தி உள்ளார்.

டைரக்டர் ரமேஷ் டார்ச்சர் செய்ததாக போலீசாரிடம் விஜயலட்சுமி கூறியுள்ளார். ஆனால் உண்மையில் இவர்தான் டார்ச்சர் கொடுத்தார். ஒருவரிடம் தன் காதல் எடுபடாவிட்டால் அவரை கழற்றி விட்டு விட்டு அடுத்தவர் பக்கம் தாவி விடுவார்.

சூர்யவம்சம் டைரக்டர் ராஜாவை காதலிப்பதாக உருகி, உருகி எஸ்.எம்.எஸ். அனுப்பினார். எல்லாம் காதல் எஸ்.எம்.எஸ். அந்த எஸ்.எம்.எஸ். எல்லாம் இன்றும் எங்களிடம் ஆதாரங்களாக உள்ளன.

விஜயலட்சுமி அனுப்பிய காதல் எஸ்.எம்.எஸ்களை டைரக்டர் ராஜா பொருட்படுத்தவே இல்லை. ச்சீ... என்று ஒதுக்கி விட்டார். அதன் பிறகுதான் அவரை காதலிப்பதாக டார்ச்சர் செய்வதை விஜயலட்சுமி கைவிட்டார்.

இப்படி 3 பேரை காதலித்து ஏமாற்றி உள்ளார். தங்கவேட்டை முதல் தடவை சூட்டிங்கின் போதே இவர் ரமேஷிடம் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் ரைக்டர் ரமேஷ் அதை கண்டு கொள்ளவில்லை.

2-வது கட்ட தங்கவேட்டை சூட்டிங்கின்போதும் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார். பிறகு ஒருநாள் இரவு ரமேசுக்கு போன் செய்து தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் கூறி இருக்கிறார்.

இதை எல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறாய் என்று டைரக்டர் ரமேஷ் கேட்ட தற்கு, இனிமேல் எனக்கு எல்லாமே நீங்கள்தானே. என்னை திருமணம் செய்து கொள்ளப் போகும் உங்களிடம் சொல்வதில் தவறு இல்லையே என்று கூறி இருக்கிறார். பதறிப்போன ரமேஷ் விஜயலட்சுமியிடம் பேசுவதையே தவிர்த்து இருக்கிறார்.

10 நாட்களுக்கு முன்பு திடீரென அவர், ரமேஷிடம் "உங்களை காதலிப்பதாக நான்தான் முதலில் கூறினேன். இப்போது நானே என் காதலை துண்டித்துக் கொள்கிறேன்'' என்று கூறி இருக்கிறார். அதன் பிறகே அவர் டைரக்டர் ரமேஷிடம் அடிக்கடி மோதி இருக்கிறார்.

விஜயலட்சுமிக்கும் ரமேசுக்கும் `செட்'டில் சண்டை வந்த தினத்தன்று நானும் அங்குதான் இருந்தேன். ரமேஷ் அவரை லட்சுமி என்று அழைப்பது வழக்கம். லட்சுமி என்று முன் அழைத்த போதெல்லாம் அவர் சிரித்து, சிரித்து பேசியதை நானே பார்த்து இருக்கிறேன்.

`லட்சுமி' என்று பெயர் சொல்லி அழைப்பதை விரும்பாவிட்டால் அவர் அன்றே தடுத்து இருப்பார். அப்படி எதுவும் தடுக்கவில்லை.

லட்சுமி என்று அழைப்பது கவுரவ குறைச்சலாக இருந்தால் நடிகை முகம் மாறி இருக்கும். ஆனால் ஒரு தடவை கூட விஜயலட்சுமி முகம் மாறியதில்லை. மாறாக அவர் லட்சுமி என்று அழைத்ததும் சிரித்துக்கொண்டே பதில் சொல்வார். இதற்கெல்லாம் எங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளது.

சம்பவத்தன்று லட்சுமி என்று ரமேஷ் சொன்னதும் மேடம் என்று சொல்லும் படி கோபப்பட்டார். உடனே வெளியேறவும் செய்தார். நாங்கள் அவரை சமரசம் செய்து மீண்டும் தங்கவேட்டை சூட்டிங்கில் பங்கேற்க செய்தோம்.

அவரும் சம்மதித்து இரவு நீண்ட நேரம் சூட்டிங்கில் கலந்து கொண்டார். பிறகு வீட்டுக்கு புறப்பட்டு போகும் போது சாதாரணமாகத்தான் சென்றார். திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.

வரிசையாக தன் காதல் தோல்வி அடைந்ததால் அவருக்குள் விரக்தி ஏற்பட்டு இருக்கலாம். அல்லது தன் தனிப்பட்ட காதல்குட்டு அம்பலமாகி விட்டதே என்று நினைத்து இருக்கலாம். இதையொட்டி அவர் தற்கொலை நாடகம் நடத்தி இருப்பதாக நாங்க்ள சந்தேகிக்கிறோம்.

டைரக்டர் ரமேஷ் கன்னடத்தில் சிறந்த எழுத்தாளர். நல்ல நடிகரும் கூட. அழகாக இருப்பார். அவரை எப்போதும் ரமேஷ்ஜி என்றுதான் விஜய லட்சுமி அழைப்பார்.

தனக்கு ரமேஷ் கிடைக்காத கோபத்தில் நடக்காததை எல்லாம் அவர் சொல்லி உள்ளார்.

ரமேஷை அவர் சுற்றி சுற்றி வந்து சிரித்து பேசியது படப்பிடிப்புகுழுவில் உள்ள எல்லாருக்கும் தெரியும். ஆனால் ரமேஷ் அவரை மதிக் கவே இல்லை. இருந்தாலும் ரமேஷை அவர் விரட்டி விரட்டி காதலித்தார்.

ரமேஷிடம் அவர் எப்படி எப்படி நடந்து கொண்டார் என்பதற்கு எங்களிடம் ஆடியோ ஆதாரங்கள்இருக்கிறது. உருகி, உருகி அவர்பேசிய காதல் வசனங்கள் பதிவு எங்களிடம் இருக்கிறது.

படப்பிடிப்பின் போது ரமேஷ் டார்ச்சர் செய்ததாக விஜயலட்சுமி கூறி இருக்கிறார். படப்பிடிப்புக்கு விஜயலட்சுமி ஒருநாள் கூட தனியாக வந்தது இல்லை. அம்மா, அக்கா ஆகிய இருவருடன் தான் வருவார்.

மேக்கப் அறையில் இவர்கள் 3 பேரும் தான் இருப்பார்கள். யாரும் விஜயலட்சுமி அறை பக்கமே போனதில்லை. அப்படிப்பட்டவர் எப்படி `டார்ச்சர்' செய்தார் என்று சொல்ல முடியும்.

ஒரு தடவை ராதிகாவிடம, உங்கள் தம்பிதான் (ரவிராஜா) ஆல் இன் ஆல். அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூசாமல் நேருக்கு நேர் கேட்டார். இதைக் கேட்டதும் ராதிகா அதிர்ச்சி அடைந்து விட்டார்.

"என் தம்பி திருமணமானவர். அவருக்கு 7 வயதில் மகள் இருக்கிறார்'' என்று அறிவுரை கூறினார்.

அதோடு "நீ நல்ல அழகான நடிகை உனக்கு நல்ல கணவர் கிடைப்பார்'' என்று கூறி வாழ்த்தினார். ஆனால் இன்று அந்த தகவல்கள் வேறு மாதிரி கதை கட்டப்படுகிறது.

பார்க்கும் எல்லாரையும் காதலிக்க நினைக்கும் விஜயலட்சுமி எங்கள் நிறுவனம் மூலம் மாதம் ரூ. 3 லட்சம் சம்பாதித்தார். ஆனால் இன்று தடம் மாறி பேசுகிறார். எனவே தான் அவரை எங்கள் நிறுவனத்தின் எல்லா தயாரிப்புகளில் இருந்தும் நீக்கி விட்டோம்.

அவருக்கு பதில் நடிகை தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தாரா நடத்தும் தங்க வேட்டை சூட்டிங் நாளை தொடங்குகிறது.

சூர்யவம்சம் தொடரில் இருந்தும் விஜய லட்சுமியை நீக்கி விட்டோம். அதில் நடிக்க ஒருவரை தேடிக்கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் சினிமாவிலும் நல்ல ஆர்வம்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.