Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி குடிநீர் வாரியத்தின் 800 அதிகாரிகள் ‘திடீர்’ இடமாற்றம் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை

Featured Replies

aravind%20kejrival%20712014.gif

 

புதுடெல்லி, –

 

டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி குடிநீர் வாரிய தலைவராகவும் இருக்கிறார். அவர் பதவி ஏற்ற அன்றே குடிநீர் வாரிய தலைமை செயல் அதிகாரி தேபஸ்ரீ முகர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், குடிநீர் வாரிய பணிகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அதன் அதிகாரிகள் 800–க்கும் மேற்பட்டோரை இடமாற்றம் செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று இரவு அவர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.

 

மேலும், லஞ்சம் வாங்கிய டெல்லி குடிநீர் வாரிய ஊழியர்கள் வினோத் குமார், பட்வாரி சுனில்குமார், அது பிரகாஷ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் லஞ்சம் வாங்குவதை, தனியார் டெலிவிஷன் சேனல் ரகசியமாக படம் பிடித்து அம்பலப்படுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

http://www.dailythanthi.com/2014-01-07-Arvind-Kejriwal--anti-graft-officers-new

  • தொடங்கியவர்

டெல்லி நீர்வாரிய ஊழல் அதிகாரிகள் சஸ்பெண்ட்: அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி!

 

img1140107015_1_1.jpg

 

ஊழல்வாதிகள் தப்ப முடியாது என்று கூறிக்கொண்டிருந்த அர்விந்த் கெஜ்ரிவால் கடைசியில் செயலில் இறங்கினார். டெல்லி நீர் வினியோக வாரிய ஊழல் அதிகாரிகள் 3 பேரை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.

மேலும் 800 பேருக்கு பணி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களிடம் குடிநீர் வினியோகத்தை சீர் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தலைமை குடிநீர் ஆய்வாளர் வினோத் குமார், பட்வாரி சுனில்குமார் மற்றும் மீட்டர் ரீடராக இருந்த அடுல் பிரகாஷ் ஆகியோர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கட்டிட கட்டுமானத்திற்கான நீர் பயன்படுத்துதல் தொடர்பாக லஞ்சம் கேட்டதாக தொலைக்காட்சி ஸ்டிங் ஆபரேஷன் ஒன்று தெளிவாக அம்பலப்படுத்தியதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

டெல்லி மாநில ஊழல் எதிர்ப்பு அமைப்பு இவர்களை விசாரணை செய்யவுள்ளது. ஆம் ஆத்மி கட்சி பதவியேற்றவுடனேயே டெல்லி நீர்வாரிய தலைமைச் செயல் அதிகாரி தேவஸ்ரீ முகர்ஜீ பணி மாற்றம் செய்யப்பட்டார். அவர் சென்ற 10 நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/national/1401/07/1140107015_1.htm

  • தொடங்கியவர்

டெல்லியில் குடிநீரை சீரமைக்க கெஜ்ரிவால் அதிரடி நடவடிக்கை: லஞ்சம் கேட்ட 3 அதிகாரிகள் நீக்கம்

 

டெல்லி நகர மக்களுக்கு, ஒரு நாளைக்கு 10 லட்சம் கேலனுக்கு மேல் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 8 லட்சம் கேலன் குடிதண்ணீரே கிடைக்கிறது. இதனால் டெல்லியில் பல பகுதிகளில் மக்கள் லாரி மூலம் வரும் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

 

டெல்லி மாநில குடிநீர் தேவையை அருகில் உள்ள அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களின் நீர் ஆதாரங்களே பூர்த்தி செய்து வருகின்றன. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் இந்த குடிநீர் பிரச்சினை பெரும் சர்ச்சையாக எழுந்தது.

 

ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தண்ணீரை விற்கும் மாபியா கும்பலை ஒழிப்போம். தினமும் ஒரு குடும்பத்துக்கு 700 லிட்டர் தண்ணீர் கொடுப்போம்" என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி ஆட்சியில் அமர்ந்ததும் குடும்பத்துக்கு 700 லிட்டர் தண்ணீர் வழங்கும் அரசாணையில் கெஜ்ரிவால் கையெழுத்திட்டார்.

டெல்லி குடிநீர் வாரியத்துக்கு முதல்–மந்திரி கெஜ்ரிவால்தான் தலைவராக உள்ளார். இதனால் அவர் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோக முறையை ஆய்வு செய்து வந்தார். குடி நீர் வினியோகத்தை சீராக செய்ய அவர் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார்.

 

முதல் கட்டமாக லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்பவர்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. லாரி தண்ணீர் தொழிலை பெரும்பாலும் காங்கிரஸ்காரர்களே செய்து வருகிறார்கள். கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் டெல்லி குடிநீர் வாரியத்தின் பணியை சுறுசுறுப்பாக்கும் வகையில் நேற்று ஒரே நாளில் 800 ஊழியர்களை இடமாற்றம் செய்து கெஜ்ரிவால் உத்தரவிட்டார். குடிநீர் வழங்கல் அலுவலகங்களில் 2 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஊழியர்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

இன்று காலை 800 ஊழியர்களுக்கும் இட மாறுதல் வழங்கும் அரசு உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது. டெல்லியில் ஒரே நாளில் இவ்வளவு அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதில்லை. கெஜ்ரிவாலின் அதிரடி உத்தரவால் நடந்து வரும் இந்த இட மாற்றம் டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள், ஊழியர்களிடம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் உடனே தங்கள் பகுதிகளில் குடிநீர் வினியோகத்தை சீர்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

டெல்லி மக்களின் தண்ணீர் தேவையை உபரியாக இருக்கும் வகையில் மாற்ற வேண்டும் என்பதில் கெஜ்ரிவால் தீவிரமாக உள்ளார். இதனால்தான் அவர் கடந்த மாதம் 28–ந்தேதி பதவி ஏற்ற தினத்தன்றே டெல்லி குடிநீர் வாரிய தலைமை செயல் அதிகாரி தெபஸ்ரீ முகர்ஜியை இட மாற்றம் செய்தார்.

 

தனக்கு விசுவாசமான சில அதிகாரிகளை அவர் தற்போது பணியில் அமர்த்தியுள்ளார். அதோடு குடிநீர் வாரியத்தில் ஊழல், லஞ்சம் போன்றவை நடக்கக் கூடாது என்பதிலும் அவர் உறுதியாக உள்ளார்.

 

இந்த நிலையில் டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் வினோத்குமார், பட்வாரி சுனில்குமார், அதுல் பிரகாஷ் ஆகிய மூவரும் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிதண்ணீர் இணைப்பு கொடுக்க லஞ்சம் கேட்டதாக தெரிய வந்தது.

 

தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்று நடத்திய "ஸ்டிங்ஆபரேஷன்" மூலம் அந்த 3 அதிகாரிகளும் லஞ்சம் கேட்டது உறுதிப்படுத்தப்பட்டது. உடனடியாக அவர்கள் 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து கெஜ்ரிவால் உத்தரவிட்டார். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஊழல் தடுப்பு பிரிவினர் அவர்கள் 3 பேரிடமும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றி டெல்லி பொதுப்பணித் துறை மந்திரி மணீஷ் சிசோடியா கூறுகையில், "மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய அதிகாரிகள் லஞ்சம் ஊழலில் ஈடுபடும் காலம் முடிந்து விட்டது என்பதை உணர வேண்டும். நாங்கள் நடத்துவது நல்லாட்சி. இதை அதிகாரிகள் உணரவே அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே எல்லா துறை அதிகாரிகளும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.

 

கெஜ்ரிவாலின் அதிரடி உத்தரவுகள் டெல்லி அரசு ஊழியர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

http://www.maalaimalar.com/2014/01/07115210/Kejriwal-action-to-revamp-drin.html

 

முதல்வன் படம் ஓடுதோ?

அப்பாவி இந்திய மக்களுக்கு உடனடி தேவை இவரை போன்ற அரச அதிகாரிகள்.

  • தொடங்கியவர்

முதல்வன் படம் ஓடுதோ?

அப்பாவி இந்திய மக்களுக்கு உடனடி தேவை இவரை போன்ற அரச அதிகாரிகள்.

 

:D :D

 

இயக்குனர் ஷங்கரின் முதல்வனும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும்

 

சென்னை: இயக்குனர் ஷங்கரின் முதல்வன் படத்தில் வரும் முதல்வருக்கும், ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே சில ஒற்றுமை உள்ளது. இயக்குனர் ஷங்கரின் முதல்வன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக வரும் காட்சிகள் அதிரடியாக இருக்கும். இந்நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஷங்கரின் முதல்வனுக்கும் இடையே உள்ள சில ஒற்றுமைகளை பார்ப்போம்.

 

ஆட்டோ, மெட்ரோ
 
முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக பதவி ஏற்க அர்ஜுன் ஆட்டோவில் வந்து இறங்குவார். கெஜ்ரிவாலோ மெட்ரோ ரயிலில் பதவி ஏற்கும் விழாவுக்கு சென்றார்.
 
ஊழல்
 
ஷங்கரின் ஒரு நாள் முதல்வர் தனது பதவிக்காலம் குறுகிய நேரமே என்று தெரிந்தும் ஊழலுக்கு எதிராக தீவிரமாக போராடுவார். கெஜ்ரிவாலும் தனது பதவிக் காலம் குறைவானதே என்பதை தெரிந்தும் ஊழலுக்கு எதிராக போராடி வருகிறார்.
 
சஸ்பெண்ட்
 
பதவி ஏற்ற சிறிது நேரத்தில் அர்ஜுன் ஆயிரக்கணக்கான ஊழல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வார். இதே போல் கெஜ்ரிவால் பதவியேற்ற 10 நாட்களுக்குள் டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் 3 பேரை சஸ்பெண்ட் செய்ததோடு 800 பேரை டிரான்ஸ்பர் செய்தார்.
 
திடீர் விசிட்
 
முதல்வன் படத்தில் அர்ஜுன் சேரி பகுதிகளுக்கு திடீர் என்று சென்றதுடன், ரேஷன் கடைக்கு சென்று ஊழல் பணியாளர்களை சஸ்பெண்ட் செய்வார். டெல்லி மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ராக்கி பிர்லா வீடு இல்லாதவர்கள் இரவில் தங்கும் இடங்களுக்கு திடீர் என்று சென்றுள்ளார். முதல்வன் சூப்பர் ஹிட்டானது. கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் பலரின் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.