Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங். தலைவர்களுடன் பிரியங்கா திடீர் ஆலோசனை!: பிரதமர் வேட்பாளராகிறார் ராகுல்

Featured Replies

டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தி வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பிரியங்கா காந்தி திடீரென ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. வரும் ஜனவரி 17-ந்தேதியன்று இதற்கான அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் இன்று டெல்லியில் ராகுல் காந்தி வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

 

07-priyanka-gandhi-600-jpg.jpg

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சோனியாவின் அரசியல் செயலரான அகமது படேல், மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மூத்த தலைவர் ஜனார்த்தன் திரிவேதி ஆகியோரும் பங்கேற்றனர். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் லோக்சபா தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் சுற்றுப் பயணம் தொடர்பாகவே இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://tamil.oneindia.in/news/india/priyanka-gandhi-holds-high-level-congress-meet-rahul-set-be-named-190971.html
  • தொடங்கியவர்

பிரியங்கா காந்தி காங். தலைவர்களுடன் திடீர் சந்திப்பு

 

priyanka.jpg

 

பிரியங்கா காந்தி இன்று காங்கிரஸ்  கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ராகுல் காந்தியின் இல்லத்தில் நடைபெற்றது

இதில் அகமது படேல், ஜனார்தன் திரிவேதி மற்றும் காங். பொதுச்செயலாளர்கள் கலந்து கொண்டனர். ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் குராகுல பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் வரும்நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்காபோட்டியிடப்போவதில்லை என்றபோதிலும், பிரசாரத்திற்கு தலைமைஏற்பார் என்று கூறப்படுகிறது. மேலும் சோனியா மற்றும் ராகுல் போட்டியிடும ரேபரலி, அமேதி தொகுதிகளில் பிரியங்கா கூடுதல் கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

http://www.dinamani.com/latest_news/2014/01/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D.-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0/article1987787.ece

 

அட எலெக்சன் சீசன் தொடங்கிட்டுது.

மற்றும்படி காணி களவெடுப்பதும், சுவிஸ் வங்கியில் பதுக்குவதே தொழில்.

இனி ஒருக்கா நளினியை பார்த்து உச்சுகொட்டி ஒரு அரசியல் சீன் வரும்.

நாலு வருடத்திற்கு ஒருக்கால் வேலை செய்தால் போதும்.

  • தொடங்கியவர்

காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரப் பணி ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா காந்தி?

 

காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ள நிலையில், காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரப் பணி ஒருங்கிணைப்பாளராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

img1140107042_1_1.jpg

 

டெல்லியில் ராகுல் காந்தி வீட்டில் கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது படேல், ஜனார்த்தன் திரிவேதி, ஜெய்ராம் ரமேஷ், மதுசூதனன், அஜய்மக்கான் உள்ளிட்டோருடன் பிரியங்காவும், ராகுலும் ஆலோசனை நடத்திய நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.அமேதி அல்லது ரேப்பரேலி தொகுதியில் களமிறங்குவார் என்று கூறப்பட்ட நிலையில், தேர்தலில் பிரியங்கா போட்டியிட வாய்ப்பில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ராகுல் காந்தியை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரப் பணிகளை பிரியங்கா கவனித்து கொள்வார் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

 

பாஜகவினர் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால், ராகுலின் எதிர்காலத்தை வலுப்படுத்த பிரியங்கா அரசியலில் களமிறங்குவார் என்றும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. வலுவான பிரச்சாரக் குழுவை அமைக்க மத்திய அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகியோர் பதிவியிலிருந்து விலகி தேர்தல் பணிகளில் ஈடுபட போவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

img1140107042_2_1.jpg

 

காங்கிரஸ் மேலிடத்தின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் 17 ஆம் தேதி டெல்லி மாநாட்டில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட உள்ளதை உறுதிப்படத்துவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/national/1401/07/1140107042_1.htm

  • தொடங்கியவர்

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா பங்கேற்பு: தீவிர அரசியலுக்கு முன்னோட்டமா?

 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் பிரச்சாரம் செய்து தனது அரசியல் பிரவேசத்தை குறிப்பிட்ட எல்லைக்குள் வைத்திருப்பவர் பிரியங்கா காந்தி. இவர் வரும் மக்களவைத் தேர்தலின்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும் வகையில், முழு நேர அரசியலில் குதிக்க வாய்ப்பு உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று தனது இல்லத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான அகமது பட்டேல், ஜனார்த்தன் திவேதி மற்றும் பிற பொதுச்செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அங்கு வந்த பிரியங்கா காந்தி, சிறிது நேரம் ஆலோசனையில் பங்கேற்றார். இதன்மூலம் பிரியங்கா காந்தி தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் சுற்றுப்பயண திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தி வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதால், அவரது தொகுதியான ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என்றும் கூறப்பட்டது. அதனை கட்சி மேலிடம் மறுத்துள்ளது.

 

http://www.maalaimalar.com/2014/01/07162922/Priyanka-attends-meet-with-Rah.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.