Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேது சமுத்திர திட்ட வழக்கில் இருந்து மத்திய அரசு வக்கீல் திடீர் விலகல் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

Featured Replies

புதுடெல்லி,

 

சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கில் இருந்து மத்திய அரசு வக்கீல் ராஜீவ் தவான் நேற்று திடீரென்று விலகினார். இதனால் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

சேதுசமுத்திர திட்டம்

 

சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு காரணமாக, அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ராமர் பாலத்தை சேதப்படுத்தக்கூடாது என்றும், மாற்றுப்பாதையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு வந்தது.

 

இந்நிலையில், இத்திட்டத்தை மாற்று வழிப்பாதையில் கொண்டு செல்ல சாத்தியமில்லை என்றும், அதே சமயம் தற்போதைய நிலையில் திட்டத்தை செயல்படுத்தினால் எந்த பலனும் இருக்காது என அறிவியலாளர் பச்சோரி குழு பரிந்துரைகளை ஏற்க முடியாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளித்திருந்தது.

 

தமிழக அரசு பதில்

 

ரூ.25 ஆயிரம் கோடி செலவிலான இத்திட்டத்திற்கு ஏற்கனவே ரூ.766 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த சூழலில் இத்திட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்திருந்தது.இதற்கு கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும், ராமர் சேது பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

 

நேற்று விசாரணை

 

மேலும், பச்சோரி குழு அளித்துள்ள பரிந்துரைகளின்படி திட்டத்தை கைவிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மாற்றுப்பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்படுவதோடு, மீனவர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, இத்திட்டம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது பதில் மனுவில் தமிழக அரசு கூறியிருந்தது.இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எச்.எல்.தத்து, தீபக் மிஸ்ரா, எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அரசு வக்கீல் விலகல்

 

அப்போது, இதுநாள் வரை மத்திய அரசு சார்பில் ஆஜராகி வாதாடிவந்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் திடீரென்று இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அவருடைய வேண்டுகோளை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. அவருடைய இடத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞர் பாரஸ் குகாட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.நேற்று அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாரஸ் குகாட் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் விவரங்களை படிக்க தனக்கு போதிய அவகாசம் தேவையென்று வேண்டுகோள் விடுத்தார். அவருடைய வேண்டுகோளை ஏற்று, நீதிபதிகள் இந்த வழக்கை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

 

http://www.dailythanthi.com/2014-01-08-sethusamudram-in-case-of-sudden-deviation-from-the-central-government-lawyer

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.