Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க தடை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Featured Replies

gallerye_023124827_890197.jpg

 

புதுடெல்லி: சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு கூறியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா குமுடிமூலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனடியார் ஆறுமுகசாமி (90). கடந்த 2000ம் ஆண்டில் இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது, கோயில் பொது தீட்சிதர்களால் தாக்கப்பட்டார். சிவனடியார் ஆறுமுகசாமிக்கு ஆதரவாக மனித உரிமை பாதுகாப்பு மையம், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இணைந்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். தமிழக அரசுக்கு மனுக்கள் அனுப்பி கோரிக்கையை தெரிவித்தனர். இதன்பின், 2008ம் ஆண்டு அப்போதைய திமுக அரசின் உத்தரவையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவனடியார் ஆறுமுகசாமி நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் பாடினார். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து, 2008ம் ஆண்டு பிப்ரவரியில் நடராஜர் கோயிலை தமிழக அரசு கையகப்படுத்தி இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைத்தது. செயல் அதிகாரியும் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கோயிலை நிர்வகித்து வந்த  பொதுதீட்சிதர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அரசு தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் வக்கீல் நியமிக்கப்படவில்லை. வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக தற்போதைய அதிமுக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் தமிழக அரசு உடனே சீனியர் வக்கீலை நியமனம் செய்து தீவிரமாக வாதாட வேண்டும், கோயில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது என்று வலியுறுத்தி கடந்த நவம்பர் 2ம் தேதி சிவனடியார் ஆறுமுகசாமி தலைமையில் தமிழ் ஆர்வலர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ‘தமிழ் மக்களின் சொத்தான சிதம்பரம் கோயிலை மீட்க மூத்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். இல்லையெனில் என் உயிர் இருக்கும் வரை
நடராஜர் கோயிலில் தேவாராம், திருவாசகம் பாடியே உயிர் துறப்பேன்’ என சிவனடியார் ஆறுமுகசாமி கூறினார். இந்த பரபரப்பான சூழலில் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் இருதரப்பு வாதங்களும் கடந்த டிசம்பர் 5ம் தேதி முடிவடைந்திருந்தது.  இந்நிலையில், வழக்கில் நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பு கூறியது.

அதில், சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க தடை விதிக்கப்பட்டது. தமிழ் ஆர்வலர்கள் கவலை தீர்ப்பை கேட்டு, சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் பட்டாசு வெடித்தும், பக்தர்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வெங்கடேச தீட்சிதர் கூறும்போது, ‘கோயில் பாரம்பரியமாக தீட்சிதர்கள் வசமே இருந்து வந்துள்ளது. அதனை அப்படியே நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தீட்சிதர்கள் மற்றும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழ் ஆர்வலர்கள் வருத்தம் அடைந்தனர். தமிழக அரசு தரப்பில் சரியாக வாதாட காரணத்தால்தான் வழக்கில் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று மனித உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ கூறினார். நடராஜர் கோயிலில் வழிபாட்டு உரிமையை
நிலைநாட்ட தமிழக சட்டமன்றத்தில் தனி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

 

 

தில்லை வழக்கு: அதிமுக அரசு அலட்சியம் என திமுக குற்றச்சாட்டு

 

131209133655_chidambaramtemplegoldensanc

சிதம்பரம் கோவில்

 

சிதம்பரம் நடராஜர் ஆலயம் தொடர்பான வழக்கில் அஇஅதிமுக அரசு போதிய அக்கறை காட்டாததால்தான் இந்திய உச்சநீதிமன்றம் அந்த ஆலயத்தின் நிர்வாகத்தினை கையகப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளை இரத்து செய்துவிட்டது என திமுக தலைவர் மு கருணாநிதி குறை கூறியிருக்கிறார்.

கடந்த 2009-ல் திமுக ஆட்சி காலத்தின் போது தமிழக அரசால், கோயிலின் பணிகளை மேற்பார்வையிட அதிகாரி ஒருவரை நியமித்து உத்திரவிட்ட ஆணை செல்லாது, ஆனால் தீட்சதர்கள் நிர்வாகத்தின் மீது புகார் கூறப்படும் பட்சத்தில், அந்தப் புகார்களை விசாரிக்க தற்காலிக அதிகாரிகளை நியமிக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு எனவும் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது குறித்து இன்று செவ்வாய் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில் ஆலயத்தை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர உத்திரவு பிறப்பிக்கப்பட்டது என்றாலும், அதற்கு முன்பேயே எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோதே சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க 5–8–1987 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். "கோயிலை நிர்வகிக்கும் பொது தீட்சிதர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாலேயே கோயிலுக்குச் செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டார்" என்று அப்போது அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது என நினைவுகூர்ந்திருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கெதிராக தீட்சதர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் நிலையிலேயே தானும் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணியும் உடனடியாக தமிழக அரசு வீண் கால தாமதம் செய்யாமல், மூத்த வழக்கறிஞர்களை உச்ச நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரியிருந்ததை இன்றைய தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் கருணாநிதி, ஆனால் அஇஅதிமுக அரசு "என்ன காரணத்தாலோ" இந்தப் பிரச்சினையில் அக்கறை காட்டாமல் அலட்சியப்படுத்தியதன் விளைவாகவே நேற்றைய தீர்ப்பு எனக்கூறியிருக்கிறார்.

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.