Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு இராணுவ உதவி இல்லை: வைகோவிடம் இந்தியப் பிரதமர

Featured Replies

சிறிலங்காவுக்கு இராணுவ உதவி இல்லை: வைகோவிடம் இந்தியப் பிரதமர் உறுதி

சிறிலங்கா அரசாங்கத்துக்கு இராணுவ உதவி அளிக்க மாட்டோம் என்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்துள்ளார்.

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து புதுடில்லியில் சிறிலங்கா தூதுவரகம் முன் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார்.

மன்மோகன்சிங்கின் ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பு 20 நிமிட நேரம் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது

- சிறிலங்காவுடன் இந்திய அரசாங்கம் இராணுவ உறவை வலுப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளாது

- இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்

என்று வைகோவிடம் மன்மோகன் உறுதியளித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக தமிழ் மக்களுக்கான நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் மனுவும் மன்மோகன்சிங்கிடம் கையளிக்கப்பட்டது.

- தமிழகத்துக்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்களுக்கானா கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும்

- கடந்த ஓகஸ்ட் 14ஆம் நாளன்று இரு பாகிஸ்தானிய ஆயுதக் கப்பல்கள் சிறிலங்கா சென்றடைந்துள்ளது. சிறிலங்காவில் பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இயங்குகிறது. இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஊறுவிளைவிக்கும் திட்டங்களை ஐ.எஸ்.ஐ. திட்டமிடுகிறது

என்றும் மன்மோகனிடம் கையளிக்கப்பட்ட மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மன்மோகன்சிங்குடனான சந்திப்பின் ஊடகவியலாளர்களிடம் வைகோ கூறியதாவது:

இலங்கைத் தமிழர் பிரச்சனையின் தற்போதைய நிலைமைகள் குறித்து பிரதமரிடம் விரிவாக விளக்கினோம். இந்தச் சந்திப்பு திருப்திகரமாக இருந்தது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதுவித இராணுவ உதவியும் அளிக்கமாட்டோம் என்று பிரதமர் எம்மிடம் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் இராணுவ உதவி வழங்கினால் அது தமிழர்கள் மீதான தாக்குதல் நடத்த நேரடியாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு உதவுவதாக அமையும்.

அப்பாவித் தமிழ் மக்களை சிறிலங்கா அரசாங்கம் கொன்று குவித்து வருகிறது. இலங்கை இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர மீண்டும் பேச்சுக்களைத் தொடங்குவதற்கு நோர்வேக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் வைகோ.

http://www.eelampage.com/?cn=28545

அதுதான் தெரியுமே....! எப்பிடியா..

போனதடவை இலங்கை பொலீசாரை வெளியேற்ற வேண்டும் எண்று சட்டசபை கோரியதுக்கு சொன்ன காரணமும் அதுக்கான அரச நடவடிக்கையும் விளக்கமாக இருக்கு...!

என்ன நடவடிக்கை தல வேறுமாநிலத்தில் பயிர்சி கொடுக்கவிலையா

எழுதப்பட்டது: திங்கள் ஆவணி 28, 2006 5:18 am Post subject: பாகிஸ்தானிடமிருந்து மட்டுமல்ல- இந்தியாவிடமிருந்தும் ஆயுதங்கள

--------------------------------------------------------------------------------

பாகிஸ்தானிடமிருந்து மட்டுமல்ல- இந்தியாவிடமிருந்தும் ஆயுதங்கள் வாங்கியுள்ளோம்: மகிந்த ராஜபக்ச

பாகிஸ்தானிடமிருந்து மட்டுமல்ல இந்தியாவிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கியிருக்கிறோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

"இந்தியா டுடே" வார இதழுக்கு மகிந்த ராஜபக்ச அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். விடுதலைப் புலிகளுடன் போரிட வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். நிர்ப்பந்தங்களுக்கு நாங்கள் பணிந்து விடமாட்டோம்.

இலங்கை இன பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இந்த விடயத்தில் இந்தியாவின் உதவி எங்களுக்கு தேவை.

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் எங்களுடைய முதல் தேர்வு இந்தியாதான். அதன்பிறகுதான் நாங்கள் மற்ற நாடுகளின் உதவியை நாடுவோம். தங்கள் நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்தியா அனுசரித்து செயல்படுகிறது என்பதை நான் அறிவேன்.

இலங்கையில் அமைதி முயற்சியை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தியா என்ன முயற்சிகளை மேற்கொள்கிறது என்பதை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றன.

கடல் பகுதி வழியாக யாழ்ப்பாணத்துக்கும் திரிகோணமலைக்கும் ஆயுதங்கள் கடத்தப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்த எங்களுக்கு இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. இலங்கை தமிழர்களில் ஒரு பிரிவினர் தவறான பாதைக்கு சென்று உள்ளனர். இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஒருங்கிணைந்து செயல்படுமாறு அவர்களை தமிழ்நாட்டு தலைவர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் உதவுமாறு அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

சந்திரிகாவின் மந்திரி சபையில் நான் மந்திரியாக இருந்த போதே இந்திய தலைவர்களுடன் எனக்கு நெருக்கமான தொடர்பு உண்டு. பிரதமர் மன்மோகன்சிங் எனக்கு நல்ல நண்பர். இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய பொருளாதார உறவும் உள்ளது.

நாங்கள் பாகிஸ்தானில் இருந்து மட்டும் ஆயுதங்கள் வாங்கவில்லை. இஸ்ரேல், சீனா, உக்ரைன், ரஸ்யா ஆகிய நாடுகளில் இருந்தும் ஆயுதங்கள் வாங்குகிறோம். சில சமயங்களில் இந்தியாவிடம் இருந்தும் கூட வாங்கி இருக்கிறோம்.

எல்லா நாடுகளுடனும் நாங்கள் நல்ல உறவு வைத்து இருக்கிறோம். இந்தியா-இலங்கை இடையேயான நல்லுறவுதான் தெற்கு ஆசிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அடிப்படை ஆகும்.

இந்திய தொழில் அதிபர்கள் இலங்கையில் கூடுதலாக நேரடி முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கையின் பொருளாதார மேம்பாட்டில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றார் மகிந்த ராஜபக்ச.

http://www.eelampage.com/?cn=28477

_________________

---விகடகவி---

விடுதலை தேடும் கவி -ஈழம்

வென்றிட பாடும் கவி.. தமிழ்த்தாய் மகன் விகடகவி

தாம் இந்தியாவில் இருந்தும் ஆயுதம் வாங்குவதாக மகிந்த சொல்லியிருக்கிறான் பாருங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.