Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பின் ஜனநாயகத்துவம் (POST DEMOCRACTISM)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பின் ஜனநாயகத்துவம் (POST DEMOCRACTISM)

எச்.முஜீப் ரஹ்மான்

1992 ல் கம்யூனிசம் முடிவுக்கு வந்த போது வரலாற்றின் முடிவு என்று பூசியோமோவும், அண்மையில் மறைந்த செக்கொஸ்லவேக்கிய சிந்தனையாளர் வக்லாவ் ஹவெல் கம்யூனிசத்தின் வீழ்ச்சியோடு நவீன நாகரிகம் முழுவதுமாக முடிவுக்கு வந்து விட்டது என்ற சொல்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணங்களில் முதன்மையானது இதுதான்: நவீன நாகரிகத்தின் அடிப்படை நம்பிக்கை, அறிவியலால் உண்மையை அறிய முடியும் என்பதும் அப்படி நாம் அறிவியலைக் கொண்டு அறியும் உண்மை முழுமையானதாகவும் அதைக் கொண்டு உலகில் அனைத்தையும் நம்மால் கட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்ய முடியும் என்பதும்தான். இதன் உச்சம் கம்யூனிச சிந்தனை- ரஷ்யாவின் வீழ்ச்சி, அறிவியல் என்னும் ஒற்றை உண்மையின் குடைக்குள் உலகைக் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையின் தோல்வியை நவீனத்துவத்தின் முடிவாய் ஹவெல் கருதுகிறார்- இனி அரசியல் “நடைமுறை அறமாக இருக்கும் (morality in practice)’ என்று சொல்கிறார் அவர்.எனினும் கம்யூனிசத்தின் வீழ்ச்சியை நான் நவீனத்துவத்தின் வீழ்ச்சியாகவே கருதுகிறேன். சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம் போன்ற சொல்லாடல்கள் நீர்த்து போய்யுள்ளது.நவீனத்துவத்தின் மாபெரும் கண்டுபிடிப்பான மக்களாட்சித்துவம் இன்றைய சூழலில் தோல்வியில் முடிந்துவிட்ட்தாகவே நான் கருதுகிறேன்.முந்தைய மக்களாட்சித்துவம் நவீன வடிவமாக பாராளுமன்ற ஜனநாயகமாக இருந்த்து.

பாராளுமன்ற ஜனநாயகத்துவத்தை கேள்விக்குட்படுத்திக்கொண்டு பின் ஜனநாயகத்துவம் என்ற கோட்பாடை நான் முன்மொழிகிறேன்.மக்களால்,மக்களுக்கு,மக்களே தேர்ந்தெடுக்கும் வாக்கு அடிப்படையிலான தேர்தல் முறை பணத்தால் தோல்வியை கண்டிருக்கிறது.வாக்கினை பணத்தால் வாங்குவது ஜனநாயகத்தின் அடிப்படைக்கு எதிரான ஒன்றாகும்.ஜனநாயகத்தின் அடித்தளத்தில் இருக்கிற அடித்தட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவது ஜனநாயகத்தின் குணாதிசயமாகும்.இந்தியாவின் வெகுஜனத்துவ கோட்பாடுகளான பெரியாரியம்,அம்பேத்காரியம் உள்ளிட்ட பிராந்திய த்த்துவங்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தை எதிர்கின்றன.பாராளுமன்ற ஜனநாயகத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றே சொல்லப்பட்ட்து.ஆனால் 65 வருட்த்துக்கு மேலாக பாராளுமன்ற ஜனநாயகம் இந்த விமர்சன்ங்களை உள்வாங்கிக்கொண்டு வளர்ந்துள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லமுடியும்.

மிக முக்கியமாக இந்துத்துவ சக்திகளால் பெரும்பான்மைவாதம் என்ற செயல்பாட்டுருவாக்கம் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாகவே திகழ்கிறது.பாப்ரி மஜ்ஜித் இடிப்பு பாராளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக ஆக்கியதும் ஒரு சார்பினர்களின் இருப்பு கேள்விக்குரியதாக மாறியதினாலும் பின் ஜனநாயகத்துவம் என்ற கோட்பாட்டின் முக்கியத்துவம் சூழலுக்குந்த்தாக இருக்கிறது.மேலும் நீதிமன்றத்தின் பாப்ரிமஜ்ஜித் குறித்த தீர்ப்பு ஜனநாயகத்து எதிரான ஒன்றாகவே இருக்கிறது.சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மும்பை,குஜராத் மற்றும் பல கலவரங்களால் உருவானது.இது சிறுபான்மையினருக்கு எதிராக அமைந்த்தோடு அல்லாமல் உண்மையான ஜனநாயகவாதிகள் அனைவரையும் ஜனநாயகத்தின் மீது அதிருப்தி நிலவுமாறு அமைந்த்து.ஆக சிறுபான்மையினர் வாழ உகந்த நிலை உருவாக்கப்படவேண்டும் என்பதே பின் ஜனநாயகத்துவத்தின் முக்கிய நிலைபாடாக இருக்கிறது.

வாக்கு அரசியலின் காலம் முடிந்து விட்ட்து.இதனால் எந்த பலனும் ஏற்படபோவதில்லை.வாக்கு அரசியல் ஜனநாயக கேலிக்கூத்தாக அமைந்துவிட்ட்தால் வாக்குசீட்டு அரசியல் மாற்றியமைக்கப்படவேண்டும்.தேர்தலுக்கு பலகோடி செலவு செய்து வாக்கை விலைக்கு வாங்குவதால் அதன் நோக்கம் சிதைந்துவிட்ட்து.மேலும் பெரும்பான்மைவாதம் என்ற வாக்கு அரசியல் ஜனநாயகத்துக்கு விரோதமானதாகவே இருக்கிறது.பின் ஜனநாயகத்துவம் இந்தியாவில் 3000 சமூகங்கள் இருக்கிறதென்றால் அனைத்து சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தை அரசியல்,பொருளாதாரம்,சமூகவியல் என்று அளிக்க கோருகிறது.இன்று சமூக வலைதளங்கள் அனைத்து மக்களுக்குமான கருத்து சுதந்திரத்தை முன்னெடுத்து செல்கையில் அரசியல் கட்சித்தலைவர்கள் இதை தடைசெய்யவேண்டும் என்று சொல்வது ஜனநாயகத்தின் தோல்விக்கு மற்றொரு சான்றாகும்.அது போல அடித்தளமக்களின் கருத்துசுதந்திரம் பாராளுமன்ற ஜனநாயகத்தால் புறக்கணிக்கப்படுகிறது.

ஒழுங்கு, சகிப்புத் தன்மை ஒத்துப்போவது போன்றவை ஜனநாயகத்தின் அடிப்படை தேவைகளாகும். ஜனநாயகத்தில், மாறுதல்கள் கூடிப் பேசுவதாலும், கோரிக்கைகள் மூலமாகவுந்தான் நிறைவேற்றப் படுகின்றனவே தவிர, வன்முறைச் செயல்கள் மூலமாக அல்ல.ஜனநாயகத்தின் பொருள் சகிப்புத் தன்மை என்பதாகும். நம்மோடு ஒத்துப் போகிறவர்களிடம் நாம் காட்டுகிற சகிப்புத் தன்மை அல்ல! நம்மோடு மாறுபடுகிற – அபிப்பிராய பேதம் கொள்கிறவர்களுடன், நாம் காட்டுகிற சகிப்பபுத் தன்மை: – அதற்குப் பெயர்தான் ஜனநாயகம் என்பது.ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால், அதற்குப் பின்னணியாக மக்களின் நல்லெண்ணமும் பொறுப்புணர்ச்சியும் இருக்க வேண்டும்.

பாராளுமன்ற ஜனநாயக த்த்துவத்தின் மீது இயங்கி வரும் ஒரு அரசு நிச்சயம் ஒரு எதிர்க் கட்சி தேவை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். தட்டிக் கேட்க ஆளில்லாத தனிமனிதன் எதேச்சாதிகாரி ஆகிவிடவதைப் போல – கண்டிக்க பலமான எதிர்க் கட்சி இல்லாத சர்க்க்காரும் சர்வாதிகாரித்தனம் பெற்று விடுகிறது.சாதாரண மனிதனின் தேவையை எந்த அரசாங்கமும் புறக்கணிக்க முடியாது. ஜனநாயகத்தின் அடிப்படைத் த்ததுவமே இந்தத் தேவையின் மீதுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது.சுதந்திரமும் ஜனநாயகமும் இன்று மரணப் படுக்கையில் கிடக்கின்றன. அவற்றின் பாதுகாவலர்கள் என்று சொல்லப் படுபவர்களாலேயே அவை மேலும பயங்கரமாகப பழி வாங்கப்படுகின்றன.இல்லாமையும், ஏழ்மையும், உயர்வும் தாழ்வும் இருக்கும் நாட்டில் எந்த விதமான ஜனநாயகம் நீண்ட நாள் பிழைத்திருக்க முடியாது.

ஜனநாயகத்தைப் பற்றி ஆயிரம் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் சமுதாயத்தின் ஒழுங்கு – அதன் முக்கிய நோக்கம் என்பது நிச்சயம். எந்த அளவுக்கு ஒருசமுதாயத்தில் நிர்ப்பந்தமின்றி ஒழுங்கு முறை தானாக உருவாகிறதோ, அந்த அளவுக்கு அங்கே ஜனநாயகம் வளர்ச்சி பெறுகிறது மற்ற எல்லா வழிகளையும்விட ஜனநாயகம் ஒன்றுதான் மனித குலத்தை ஆளக்கூடிய மிக உயர்ந்த மார்க்கம் ஆகும்.வன்முறைச் செயல்களின் வாழ்வு முடிந்து விட்டதென்றோ, அடியோடு அழிந்து விடுமென்றோ சொல்வதற்கில்லை. என்றுமில்லா வேகத்தோடும், வலிவோடும் அது இன்று தலைவிரித்தாடுகிறது அது அழிக்கப்படவில்லை என்றால், உலகை அது அழித்துவிடும் என்பது நிச்சயம்.

ஜனநாயகம் என்ற சொல், இன்னும் வேறு எதையாவது குறிக்கிறது என்றால், அது குறிப்பது சமத்துவம் என்பதேயாகும். சமத்துவம் – எல்லாரும் வாக்குரிமை பெற்றிருப்பதிலே அல்ல – சமூக பொருளாதார அமைப்பில் எல்லாரும் பெற்றிருக்க ஏற்றத் தாழ்வற்ற நிலை – அதுதான் ஜனநாயகம் குறிக்கும் சமத்துவம் ஆகும்.வெறுப்பும் – பகையும், வன்முறைச் செயல்களுமே இன்றை நம் பலக்குறைவுக்குக் காரணமாகிவிட்டன. வன்முறைச் செயல்களைப் பின்பற்றுவகிறவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைக்க முடியாது.சுதந்திர ஜனநாயக நாடுகளால்தான் உலகில் சுதந்திரமும் ஜனநாயகமும் தழைக்கக உதவ முடியும்.சமத்துவம் இன்றேல் சுதந்திரமும், ஜனநாயகமும் அர்த்தமற்றவை ஆகிவிடும், சமத்துவமும், மூல பொருள்களின் உற்பத்ததி ஸ்தானமும் தனியுடமையாய் இருக்கும் வரை நிலைபெறச் செய்ய முடியாத்தாகி விடும்.

படை வலிமையும், சமாதானத்தையும்தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டிருப்பர்களை, பணிவோடும் நட்புரிமையோடும் அணுகி, சண்டையை அடியோடு தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும், கொஞ்ச நாட்களுக்குத் தள்ளிப் போடச் செய்யவாவது நமது வலிமையை நாம் பூரணமாக உபயோகித்தோமானால், இந்த இடைக்காலத்திலாவது ஒருவருக்கொருவர் கூட்டுறவோடு நெருங்கி வாழ்வதை உலகம் அறிந்து கொள்ள அது உதவி செய்யக்கூடும்.ஜனநாயகத்தின்உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.

ஒரு சமூக அமைப்பில் ஜனநாயகம் உயிர்வாழ வேண்டுமென்றால், அங்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த முரண்நிலையின்றி ஜனநாயகம் உயிர்வாழ முடியாது. அதாவது இதில் ஏதோ ஒன்றின்றி ஒன்று இருக்கமுடியாது. இதுவே சமூகத்துக்கு எதிரானதாகவும், தனிமனிதனுக்கு சார்பானதாகவும் மாறிவிடுகின்றது. அதாவது அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் என்ற கோரிக்கையும் இருக்காது. இது இயல்பில் இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்களைக் கூட இல்லாததாக்கிவிடும். இது ஒரு விசித்திரமான, ஆனால் நிர்வாணமான உண்மை. இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்கள் இருக்கும் வரை, ஜனநாயக மறுப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஜனநாயகத்தின் முரணற்ற உள்ளடக்கம் இதுதான். இன்றைய சமூக அமைப்பு நீடிக்கும் வரை, ஜனநாயகத்தை மறுப்பவன் இருக்க வேண்டும். அதேபோல் ஜனநாயகத்தை கோருபவன் இருக்க வேண்டும். இன்று உலகெங்கும் அனைத்து மனிதர்களுக்கும் ஜனநாயகம் வழங்கிய சமூக அமைப்பு எதுவுமே கிடையாது. ஜனநாயகத்தை இழந்தவனும், அதை மறுப்பவனைக் கொண்டதுமான ஜனநாயக உலகம் தான், இந்த சமூக அமைப்புகள். இந்த நாடாளுமன்றங்கள் அனைத்தும் இதை பாதுகாப்பதில் தான் உயிர் வாழ்கின்றது.

இதுவே மிகவும் உன்னதமான சமூக அமைப்பாக, ஜனநாயகமாக காட்டப்பட்டு போற்றப்படுகின்றது. ஆனால் மக்களுக்கு எதிரான மிகவும் மோசமான ஒரு அமைப்பாக, அதன் உள்ளடகத்திலேயே அது உள்ளது. அதாவது மறுக்கப்படுகின்ற ஒரு அமைப்பாகத் தான், ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் என்ற அடிப்படையிலும் சரி, சமூகத்தில் உள்ள எந்தக் கூறும் சரி, மறுப்பதும் அதை கோருவதையும் அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பையே உயர்வானதாக காட்டுகின்றனர். இதற்கு பெயர் ஜனநாயகம். இதை நிலைநாட்டும் உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர்.

இந்த ஜனநாயகம் என்பது தீர்மானமெடுக்கும் மக்களின் அதிகாரத்தையே மறுதலிக்கின்றது. மாறாக மக்கள் வாக்கு போடுவதையே ஜனநாயகமாக காட்டப்படுகின்றது. இதையே மக்களின் சொந்த தேர்வாக காட்டப்படுகின்றது. ஆனால் இந்த தேர்வு எப்படியானதாக இருந்த போதும், மக்கள் தாம் விரும்பும் ஒரு அமைப்பை இந்த ஜனநாயகம் வழங்குவதில்லை. மாறாக அவர்களை அடக்கியாளும் ஒன்றையே ஜனநாயகம் வழங்குகின்றது. இங்கு மக்கள் வாக்களிப்பது என்பது கூட ஒரு சடங்காக, அதன் மீது ஆதிக்கம் செலுத்த முடியாத ஒன்றாக மாறிவிடுகின்றது. வாக்கு போட்ட தேர்வை திருப்பிப் பெற முடியாத ஒன்றாகிவிடுகின்றது. தேர்வே அர்த்தமற்ற ஒன்றாகிறது. இது சொந்த அடிமைத்தனத்தையே அடிப்படையாக கொண்டதாக மாறிவிடுகின்றது.நாடாளுமன்ற ஜனநாயகம் உலக அளவில் தோல்வியை தழுவியிருக்கிறது.ஆனால் ஜனநாயகத்தில் மாற்று ஜனநாயகம் இருப்பதற்க்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.எனவே பின் ஜனநாயகத்துவம் பேசுவதற்க்கான சூழலும் சாத்தியம் இப்போது தான் அமைந்திருக்கிறது.எனவே இது குறித்து விவாதிக்கவேண்டுவது ஜனநாயகத்தில் நம்பிக்கையுடையவர்களின் கடமையாகும்.

http://malaigal.com/?p=3958

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.