Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்! - திமுக மாநாட்டில் தீர்மானம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்! - திமுக மாநாட்டில் தீர்மானம். 
[sunday, 2014-02-16 18:32:05]
dmk-trichy-160214-150.jpg

இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் இன ஒழிப்பு சம்பந்தமாக ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிப்பதோடு ஐ.நா. மேற்பார்வையில் இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று திருச்சியில் நடந்த திமுக 10வது மாநில மாநாட்டில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டில் இன்று மதியம் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை விபரம் வருமாறு:–

  

1. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவேண்டும். தென்மாவட்ட மக்களின் வேலை வாய்ப்புக்கும், வாழ்வாதாரத்திற்கும் அடிப்படையாக உள்ள சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் மத்திய அரசு அதே பாதையில் தொடங்கவேண்டும்.

2. இந்திய இறையாண்மைக்கு விரோதமாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் கச்சத்தீவை மீட்க வேண்டும்.

3. இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் இன ஒழிப்பு சம்பந்தமாக ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிப்பதோடு ஐ.நா. மேற்பார்வையில் இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

4. 2002–ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கங்கை நதி மற்றும் கேரளாவில் உள்ள நதிகளை தமிழகத்துடன் இணைக்க நிபுணர் குழுவை அமைத்து நீர் மேலாண்மை மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

5. இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டு உள்ளதால் பல கோடி சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முற்றிலும் ரத்து செய்யவேண்டும்.

6. உலக நாடுகள் பலவற்றிலும் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டாலும் இந்திய அரசு அதனை ரத்து செய்ய முன்வரவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி தூக்கு தண்டணையால் குற்றத்தை ஒழிக்க முடியாது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடி வருகிறார். இந்தியாவில் தூக்கு தண்டணையை அறவே ரத்து செய்ய வேண்டும்.

7. காவிரி நீதி பங்கீட்டு பிரச்சினை. உரிய காலத்தில் தமிழக விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்.

8.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். விலைவாசி உயர்வுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் கண்டத்தை தெரிவித்துக்கொள்வது.

9.கல்விக்கடனை ரத்து செய்யவேண்டும். மாணவர்கள் கல்விக்கடன் பெற்று படித்து வருகிறார்கள்.வேலை யில்லாத நிலையில் அவர்களால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே கல்விக்கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

10.தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும். இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை பிடித்து செல்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

11.நெசவாளர் துயர் துடைக்கவேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் மின்சார கட்டணம் உயர்வை பன்மடங்காக உயர்த்தியை இந்த மாநாடு கண்டிக்கிறது. 12.நெல்லுக்கும், கரும்புக்கும், தேயிலைக்கும் உரிய விலையை அரசு வழங்கவேண்டும்.

13.மக்கள் நல பணியாளர் ளுக்கு மீண்டும் பணி. மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசு தானாக முன்வந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

14. கோதுமைக்கு உள்ள சலுகையை அரிசிக்கும் வழங்கவேண்டும். அரிசி மற்றும் பருத்திக்கு மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை ரத்து செய்ய வேண்டும்.

15.தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை எடுத்து சொல்ல முடியாத நிலையில் உள்ளது. சமூக விரோத போக்கு நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை நடக்காத நாட்கள் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அபாயகரமான சூழ்நிலை உள்ள தமிழகத்தை அமைதி பூங்காவாக இருப்பதாக ஜெயலலிதா கூறி வருகிறார். இதனை மாநாடு கண்டிக்கிறது ஆகிய 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103779&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.