Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆம் ஆத்மிக்கட்சியின் ஆட்சி

Featured Replies

ஆம் ஆத்மிக்கட்சியின் ஆட்சி

அண்மையில் நடந்த டெல்கி சட்டமன்றத்தேர்தலில் புதிய கட்சியான ஆம் ஆத்மிக்கட்சி முதல்முறையிலேயே 70 தொகுதிகளில்
28 இல் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.அறுதிப்பெரும்பான்மை பெறாமையினால் காங்கிரசு வழங்கிய ஆதரவுடன் சிறுபான்மை
அரசை அமைத்தது. இவர்கள் ஊழலுக்கு எதிராகக் கொண்டுவந்த சட்டவரைவைச் சபையில் சமர்ப்பிப்பதை காங்கிரசும் பாரதிய
ஜனதாக்கட்சியும் ஒன்றுசேர்ந்து எதிர்த்ததினால் ஆத்மிக்கட்சி அரசு 49 நாட்கள் ஆட்சியின் பின்பு பதவி விலகியது.இந்தியாவின்
இருபெரும் கட்சிகளான காங்கிரசும்,பாஜகவும் ஊழல்பற்றிய விடயங்களில் தாம் ஒன்றுபட்டவர்கள் என்பதை வெளிச்சம்போட்டுக்
காட்டியுள்ளனர்.இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களான அம்பானி சகோதரர்களின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிரான
வழக்கிற்கான முதல் தகவல் அறிக்கையை துணிச்சலுடன் சமர்ப்பித்ததாலேயே அரவிந்த் கெத்ரிவால் தலைமையிலான டெல்கி
அரசு விரைவாக வீழ்த்தப்பட்டது என்கின்றனர். இதனால் இந்திய ஆளும்வர்க்கத்தினர் ஏழைஎளிய மக்களின் நலன்களைக்
கருத்தில் எடுக்காது பணக்காரருக்கு ஏவல்செய்வதிலேயே முனைப்புக்காட்டுகின்றனர் என்பதும் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய உண்மைகள் வெளிக்காட்டப்பட்டிருப்பினும் இவற்றை  இந்தியவாக்காளர்களுக்கு விளக்கி உரிய மாற்றத்தினை
இவர்களால் ஏற்படுத்தமுடியுமா? பெரும்பான்மையான வாக்காளர்கள் கல்வியறிவு அற்றவர்கள். அதனால் அரசியல்
விழிப்புணர்பு குறைந்தவர்கள். மேலும் இந்திய ஊடகங்கள் எல்லாம் இந்தியப் பெருமுதலாளிகளால் நடத்தப்படுபவை அல்லது
கட்டுப்படுத்தப்படுபவை. ஊடகவியலாளர்கள்,சிந்தனையாளர்கள், கற்றறிந்தவர்கள் பெரும்பாலும் ஆளும்வர்க்கத்தினருக்கு
ஒத்து ஊதுபவர்களாகவே இருக்கிறார்கள். எனவே இவர்கள் ஆத்மிக்கட்சிபற்றி அவதூறு பரப்புவதிலேயே முனைப்புக்
காட்டுவார்கள்.  அதனால் உண்மையான அரசியல் நிலவரங்கள் பொதுமக்களைச் சென்றடைதல் சிரமம் நிறைந்ததாகவே
இருக்கும். இலவசங்கள், சலுகைகள் என்பவற்றால் சீரழிக்கப்பட்ட அந்த மக்களிடையே, பணபலமோ அதிகாரபலமோ
அற்ற இக்கட்சியினர் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் பிரசாரத்தினை மேற்கொள்ளமுடியுமா என்பது சந்தேகமே.

ஊழலை ஒழிப்பதில் தீவிரம் காட்டுபவர்கள் இக்கட்சியினர் என்பது தெரிந்திருக்கிறது. ஆனால் இந்தியாவின் ஏனைய
பிரச்சினைகள் பற்றிய இவர்களின் கொள்கைகள்,திட்டங்கள் என்னவென்பது இன்னும் தெரியப்பட்டதாக இல்லை.
எதிர்வரும் ஏப்ரல்-மே  மாதங்களுக்கு முன்பாக அவற்றை பரவலாகப் பிரசாரம் செய்தாகவேண்டும். இந்திமொழியை
முதன்மைப்படுத்தும் இவர்கள் தமிழ்நாடு முதலான தென்னிந்திய மாநிலமக்களின் உணர்வுகளுக்கு உரிய
மதிப்பளிக்கவேண்டும்.

சட்டமன்றத்தில் முதலில் 28 உறுப்பினரைக் கொண்டிருந்த ஆத்மிக்கட்சியின் ஓர் உறுப்பினர் தமக்கு அமைச்சர்
பதவி தரவில்லையென கண்டனக்குரல் எழுப்பியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சிறுபான்மை அரசு, சிறிது
காலமே பதவியிலிருக்கலாம் என்பவை தெரிந்திருந்தும் பதவிமோகத்தால் தடம் மாறிய இவர் போன்றவரால்
எத்தகைய சமூகமாற்றத்தை ஏற்படுத்தமுடியும்? ஆத்மி அலை வீசுகிறது, இலகுவாகத் தேர்தலில் வென்று
விடலாமெனப் பெருந்தொகையாகக் கட்சியில் சேருபவர்களின் ஒழுக்கக்கட்டுப்பாடு,கட்டுக்கோப்பு
என்பன எப்படி இருக்கும்?  தாம் தாம் தலைவராக இருக்கவேண்டும்; தங்களை ஒருவரும் மிஞ்சக்கூடாது
போன்ற கருத்துக்கொண்ட சுயநலமிகளால் எத்தகைய மேம்பாட்டை ஏற்படுத்தமுடியும்?

ஏழை எளியமக்களின் நல்வாழ்வு,ஈடேற்றமே தமது முதன்மைப்பணி, முழுமையானபணி என்ற
அர்ப்பணிப்புடன் தொண்டுசெய்யும், தியாகம் செய்யும், மனப்பாங்கு வேண்டும்.இந்த மக்கள் விடுதலைப்
போராட்டத்திற்கு அதிகாரவர்க்கத்தின் அசுரபலம் பல்வேறுவடிவங்களில் முட்டுக்கட்டைபோடும்.
உள்ளூர் ஆதிக்கசக்திகளுடன் ஒன்றுபட்டு சர்வதேச சக்திகளும் பல தடைகளை ஏற்படுத்தும்;
போராட்டத்தை மழுங்கடித்துத் திசைதிருப்பப் பார்ப்பார்கள். மிகுந்த அரசியல் விழிப்புணர்வுடன்
செயற்படவேண்டும்.

ஆத்மிக்கட்சியினர் ஏழுவாரகாலத்திற்கு --  ஒரு குறுகிய காலத்திற்கு --  ஊழல்கள் இல்லாத
ஆட்சியை, அத்தகைய அரசியல் இடைவெளியை ஏற்படுத்திக் காட்டினர்.பொலிசார்,பிற
பணியாளர்கள் கைநீட்டிப் பணம் வாங்கப் பயப்பட்ட ஒரு நிலையை டெல்கி மக்கள் தம்
கண்முன்னால் பார்த்தனர். அந்த அற்புதத்தை அவர்கள் தரிசித்தனர். தமது முதலமைச்சர்
பின்னால் வர,ஒரு முச்சக்கரவண்டிச்சாரதி முன்னே வந்து மருத்துவமனையொன்றைத்
திறந்து வைத்த காட்சியினை டெல்கி மக்கள் பார்த்துள்ளனர்.எனவே அத்தகைய நிலையை
மீண்டும் ஏற்படுத்த அவர்கள் முனைவார்கள் எனலாம்.அந்த நிலை இந்தியா
முழுவதும் ஏற்படவேண்டும்.




http://www.yarl.com/forum3/index.php?showtopic=136124



 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.