Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிரடியாக, 40 தொகுதிகளுக்கான, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல்

Featured Replies

சென்னை: முதல்வர் ஜெயலலிதா, தன் பிறந்த நாளான, நேற்று, அதிரடியாக, 40 லோக்சபா தொகுதிகளுக்கான, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் மற்றும் பிரசாரப் பயணத் திட்டத்தை வெளியிட்டார். இதனால், கம்யூ., கட்சிகளுக்கு, 'சீட்' உண்டா என்ற, 'சஸ்பென்ஸ்' உருவாகி உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா வின், 66வது பிறந்த நாள் விழா, அ.தி.மு.க., சார்பில், நேற்று, மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பகல், 12:30 மணிக்கு, முதல்வர், கட்சி அலுவலகம் வருவதாகவும், பத்திரிகையாளர்களை சந்திப்பதாகவும், தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுவரை, பிறந்த நாளுக்கு கட்சி அலுவலகம் வராத முதல்வர், திடீரென வருவதாக, தகவல் வந்ததால், முக்கிய அறிவிப்பு இருக்கும் என, பத்திரிகையாளர்கள் எதிர்பார்த்தனர்.
கட்சி அலுவலகம் வந்த முதல்வருக்கு, வழிநெடுகிலும், கட்சித் தொண்டர்கள், மேளதாளத்துடன், உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி அலுவலகத்தில், அவரை, அமைச்சர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அங்கு, பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர், தமிழகம், புதுச்சேரி உட்பட 40 லோக்சபா தொகுதிகளுக்கும், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அத்துடன், அவரது பிரசாரப் பயணத் திட்டத்தையும் வெளியிட்டார்.

மேலும், 'இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன், தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை, நடந்து கொண்டிருக்கிறது. தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பிறகு, அந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர்கள், திரும்ப பெற்றுக் கொள்ளப்படுவர்' என, முதல்வர் அறிவித்தார்.

'கம்யூ.,க்களுடன் மட்டும் கூட்டணி':
''கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான கூட்டணி போதும்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டி:

* தேசிய கட்சிகளான, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கூட்டணிக்கு தடுமாறுவது குறித்து உங்கள் கருத்து?
இது குறித்து, நான் கருத்து சொல்வதை விட, அந்த கட்சிகளிடம் கேட்டால் தான், நன்றாக இருக்கும்.
* கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. வேறு கட்சிகளுடன், பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதா?
இந்த கூட்டணி போதும்.
* தேர்தலில், எதை மையமாக வைத்து பிரசாரம் செய்ய உள்ளீர்கள்?
ஏற்கனவே அறிவித்தபடி, எங்களின் தாரக மந்திரம், அமைதி, வளம், வளர்ச்சி. மேலும், எதை மையமாக வைத்து பிரசாரம் செய்வோம் என்பதை, தேர்தல் அறிக்கையில் சொல்வோம். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது; விரைவில், அது வெளியிடப்படும்.
* உங்கள் பிறந்த நாள் செய்தியாக, மக்களுக்கு எதை தெரிவிக்க விரும்புகிறீர்கள்?
மக்கள் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.அமைதி, வளம், வளர்ச்சி, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஏற்பட, அனைவரும் பாடுபட வேண்டும்.
* மூன்றாவது அணியில், 14 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த கட்சிகளுக்காக, பிற மாநிலங்களில், பிரசாரம் செய்ய செல்வீர்களா?

தமிழகம், புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளில் மட்டும், கவனம் செலுத்த உள்ளேன்.
* ராஜிவ் கொலை வழக்கில், தண்டனை பெற்றவர்களை விடுவிக்க, மத்திய அரசு நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளதே?
இவ்வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதை கவனமாக கவனித்து வருகிறோம். எங்கள் கருத்துக்களை, நீதிமன்றத்தில் எடுத்துரைப்போம். சட்டப்பூர்வமாக எதை செய்ய வேண்டுமோ, அதை ஆலோசித்து செய்வோம். இவ்வாறு, அவர் கூறினார்.

 

gallerye_064029326_922499.jpg

 

gallerye_064035581_922499.jpg

 

அ.தி.மு.க.,வில் படித்தவர்கள், புதுமுகங்களுக்கு அடித்தது 'லக்': 'சிட்டிங்' எம்.பி.,க்கள் ஆறு பேருக்கு 'அல்வா'

 

முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட, லோக்சபா தேர்தலுக்கான, அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், படித்த, கட்சிக்கு விசுவாசமான, நீண்ட காலமாக கட்சிப் பணியாற்றிய, புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தற்போதைய, எம்.பி.,க்கள் ஆறு பேருக்கு, வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, 3,000த்துக்கும் மேற்பட்டோர், விருப்ப மனு தாக்கல் செய்தனர். இவர்களில், 40 பேர், நேற்று வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் பலர், புதுமுகங்கள்.


தேர்தலுக்கு பின், மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழலோ அல்லது மத்திய அரசில் முக்கிய இடம் பெறும் சூழ்நிலையோ உருவானால், அப்போது, ஆங்கிலம் பேச தெரிந்த, விசுவாசமிக்க நபர்கள் உடனிருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களில், திருப்பூருக்கு, மகளிரணி பிரமுகர் சத்தியபாமா, காஞ்சிபுரம் தனி தொகுதிக்கு மரகதம் குமரவேல், திருவண்ணாமலைக்கு வனரோஜா, தென்காசிக்கு வசந்தி முருகேசன் என, நான்கு பேர் பெண்கள். இதுதவிர, வேட்பாளர்களில், நான்கு பேர் எம்.பி.பி.எஸ்., மருத்துவர்கள்; 15 பேர் பி.எல்., பட்டம் பெற்றவர்கள்; ஒருவர் பி.எட்., பட்டதாரி. மூன்று பேர் மட்டுமே பட்டம் பெறாதவர்கள். மற்ற அனைவரும் பட்டதாரிகள். வரும் தேர்தலில், தற்போது, தமிழக அமைச்சர்களாக உள்ள, நான்கு பேர், களமிறக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. அப்படி எதுவும் நடக்காததால், அமைச்சர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல், சில மூத்த அமைச்சர்கள், தங்களின் வாரிசு களுக்கும், உறவினர்களுக்கும், 'சீட்' வாங்கித் தர முயற்சித்தனர். அதற்கும் முதல்வர் இசைவு கொடுக்கவில்லை. குறிப்பாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, நிதியமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன், மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் ஆகியோருக்கு, வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், முதல்வரால் ஓரங்கட்டப்பட்ட நபராக, பதவி பறிப்பு நடவடிக்கைக்கு ஆளான, முன்னாள் சபாநாயகர், ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனுக்கு, தென்சென்னை தொகுதியில் போட்டியிட, வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய லோக்சபாவில், அ.தி.மு.க.,வுக்கு, ஒன்பது எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்களில் தம்பித்துரை - கரூர், ப.குமார் - திருச்சி, டாக்டர் வேணுகோபால் - திருவள்ளூர் ஆகியோருக்கு மட்டும், மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு தரப்பட்டு உள்ளது. சேலம் - செம்மலை, மயிலாடுதுறை - ஓ.எஸ்.மணியன், தென்சென்னை - சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், விழுப்புரம் - ஆனந்தன், திருப்பூர் - சிவசாமி, பொள்ளாச்சி - சுகுமார் ஆகிய ஆறு பேருக்கு இந்த முறை, 'சீட்' கொடுக்க மறுக்கப்பட்டுள்ளது. 'கோப்ரா போஸ்ட்' இணையதளம் நடத்திய, 'ஸ்டிங் ஆபரேஷனில்' சிக்கிய, தென்சென்னை எம்.பி.,யான சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் பொள்ளாச்சி சுகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.


குறிப்பாக, தற்போது உள்ளாட்சி பதவிகளில் உள்ள, ஏழு பேருக்கு, எம்.பி.,யாகும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், தொடர்ந்து விசுவாசமாக, கட்சிப் பணியாற்றுவோருக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை, கட்சித் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் உணர்த்தும் வகையில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எட்டு பேருக்கும், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும், எம்.பி., சீட் தரப்பட்டுள்ளது. மேலும், கட்சி பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே, இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அது கட்சியினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



வன்னியர்களுக்கு முக்கியத்துவம்:



அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில், எட்டு பேர் வன்னியர்கள்; ஏழு பேர், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்; ஏழு பேர் கவுண்டர்; ஆறு பேர் தேவர்; மூன்று பேர் நாடார்; இருவர் முதலியார்; ரெட்டியார், மீனவர், நாயுடு, பிள்ளைமார், முஸ்லிம், யாதவர், முத்தரையர், ஆகிய பிரிவுகளில், தலா ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில், வன்னியர்களை கவர்வதற்காகவே, அதிகபட்சமாக, எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் 28 பேர் புதுமுகங்கள். இதனால், வாய்ப்பு கிடைக்காத தற்போதைய எம்.பி., செம்மலை உட்பட பலர் அதிருப்தியில் உள்ளனர்.

 

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி: முதல்வர் கொடுத்த 'ஷாக்'கால் முக்காடு

 

லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற இலக்குடன், தே.மு.தி.க.,வில் இருந்து, அ.தி.மு.க., பக்கம் தாவிய, அக்கட்சியின் அதிருப்தி, எம்.எல்.ஏ., பாண்டியராஜனுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதேபோல், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மற்ற ஆறு பேரும், அதிருப்தி அடைந்துள்ளனர்.


நிராகரித்து விட்டார்:



விருதுநகர் தொகுதி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் பாண்டிய ராஜன். இவர், தே.மு.தி.க., சார்பில், விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, விஜயகாந்தி டம், 'சீட்' கேட்டார். ஆனால், கட்சியில் ஒருவருக்கு, ஒரு பதவிதான் வழங்கப்படும் எனக் கூறி, அவரின் கோரிக்கையை, விஜய காந்த் நிராகரித்து விட்டார். இதையடுத்து, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வரிசையில், ஏழாவது ஆளாக முதல்வரை சந்தித்து, அ.தி.மு.க., ஆதரவாளராக மாறினார், பாண்டியராஜன். அதுமட்டுமின்றி, தன் காரிலும், அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தினார். அ.தி.மு.க., கரைவேட்டி அணிந்து, பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட, தனக்கு நிச்சயம், அ.தி.மு.க.,வில், சீட் கிடைக்கும் என, எதிர்பார்த்தார். சீட் கொடுக்கப்பட்டால், தற்போதைய, எம்.எல்.ஏ., பதவியை, ராஜினாமா செய்யவும், தயாராக இருந்தார். அதனால், விருதுநகர் தொகுதியில், மகளிர் குழுக்களை உருவாக்கி, நிதி உதவி அளித்து வந்தார். தன், திருமண நாளை ஒட்டி, சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, தன் மனைவியுடன் சந்தித்து வாழ்த்தும் பெற்றார். அப்போது, அ.தி.மு.க., உறுப்பினராக்கும்படி கேட்டு, கடிதம் ஒன்றையும், முதல்வரிடம், பாண்டியராஜன் வழங்கினார்.


லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, அ.தி.மு.க.,வில் விருப்ப மனுக்களை பெற்ற போது, அ.தி.மு.க., தலைமையக நிர்வாகிகளின் ஆலோசனைப்படி, தன் மனைவி பெயரிலும், இரண்டு தொகுதிகளுக்கு, விருப்ப மனுக்களை தாக்கல் செய்தார், பாண்டியராஜன். மேலும், விருதுநகர் தொகுதி வழங்கப்படாத பட்சத்தில், மத்திய சென்னை அல்லது வட சென்னை தொகுதியிலாவது, போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரினார். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, நேற்று அறிவித்த வேட்பாளர் பட்டியலில், எந்த தொகுதியிலும் பாண்டியராஜன் பெயர் இடம் பெறவில்லை. அதனால், எம்.பி., சீட் பெறும் நோக்கில், அ.தி.மு.க., ஆதரவாளராக மாறிய பாண்டியராஜனின் முயற்சி வீணாகியுள்ளது.



அதிர்ச்சி:



இது, பாண்டியராஜனுக்கு மட்டு மின்றி, அவருக்கு முன்னதாக, அ.தி.மு.க., ஆதரவாளர்களாக மாறிய, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க் கள் ஆறு பேருக்கும், அதிர்ச்சியை அளித்துள்ளது. வரும், 2016ம் ஆண்டு, சட்டசபை தேர்தலில், தங்களுக்கும் இதே நிலைமை ஏற்படுமோ, தொகுதி மக்களின் கோரிக்கை தொடர்பாக, முதல்வரிடம் முன்வைத்த வேண்டு கோள்கள் நிறைவேறுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்ற கவலையில் ஆழ்ந்து உள்ளனர். மேலும், பாண்டியராஜனைப் போலவே, தே.மு.தி.க., வில் இருந்து வெளியேறிய, பண்ருட்டி ராமச்சந்திரன் மகன், சம்பத்துக்கு, கடலூர் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்படும் என, கூறப்பட்டது. ஆனால், அவருக்கும், சீட் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா கொடுத்த, 'ஷாக்' தே.மு.தி.க., தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

dinamalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.