Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணி ஒருவரின் தொலைபேசி பயன்பாட்டில், மலாக்கா நீரிணை வழியாகவும் சென்றதாம்: புரியாது திணறும் அதிகாரிகள்

Featured Replies

காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை  தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை மென்மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
malaysia-airlines-phone-ringing-no-answe
அந்த விமானத்தில் குறைந்தது இருவர் போலி கடவுச் சீட்டுகளில் பயணத்தை மேற்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கும் விமானம் காணாமல் போனமைக்கும் தொடர்பு இருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.
 
இந்நிலையில் அவ்வாறு போலியான கடவுச்சீட்டில் பயணத்தை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஈரானைச் சேர்ந்த 19 வயதான போரியா நூர் மெஹடாத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.article-2576087-1C1E661600000578-877_620
 
அவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை என மலேசிய பொலிஸார் தெரிவித்தனர்.
 
அவர் ஜேர்மனிக்கு செல்லும் முகமாக மேற்படி விமானத்தில் பயணித்துள்ளார்.
bs-wide-passports--20140311191913236473-
இந்நிலையில் போலியான கடவுச் சீட்டில் பயணத்தை மேற்கொண்ட இரண்டாவது பயணியொருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 
மேற்படி மலேசிய எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான எம்.எச்.370 விமானமானது கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நகருக்கு 239 பேருடன் கடந்த சனிக்கிழமை பயணத்தை மேற்கொண்ட வேளை  காணாமல் போனது.
article-2576087-1C1F07D700000578-856_634
களவாடப்பட்ட கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இருவர் அந்த விமானத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளமை சட்டத்தை மீறும் செயல் என கூறிய அதிகாரிகள் சட்டவிரோத குடியேற்றத்துக்காக போலி கடவுச்சீட்டுகள் பயன்படுத்தப்படுவது அந்தப் பிராந்தியத்தில் வழமையாகவுள்ளதாக தெரிவித்தனர்.
article-2576087-1C22030500000578-901_634
மலேசிய பொலிஸ் தலைமை இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலித் அபூக்கா விபரிக்கையில், அந்த ஈரானிய இளைஞர் பயங்கரவாத குழுவொன்றின் உறுப்பினராக தோன்றவில்லை. அவரது தாய் ஜேர்மனியின் பிராங்போட் நகர விமான நிலையத்தில் அவரது வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்துள்ளார் என கூறினார்.
 
இந்நிலையில் கோலாலம்பூரிலுள்ள இளம் ஈரானிய இளைஞர் ஒருவர் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கையில்,  அந்த விமானத்தில் போலி கடவுச்சீட்டில் பயணித்த ஒருவரின் பாடசாலை நண்பன் தான் எனவும் அவரும் களவாடப்பட்ட கடவுச்சீட்டில் பயணித்த வேறொரு இளைஞரும் மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் தனது வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
1394541849433.jpg-620x349.jpg
அவர்கள் இருவரும் ஐரோப்பாவில் குடியேறும் முகமாக  பயணத்தை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
 
அதே சமயம் தாய்லாந்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் மேற்படி இருவரும் பீஜிங் ஊடாக நெதர்லாந்து செல்வதற்கு தாய்லாந்து பயண முகவர் மற்றும் ஈரானிய முகவர் ஆகியோரின் உதவியுடன் பயணச்சீட்டுகளைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் காணாமல் போன விமானத்துக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.malaysia5_20140311.jpg
 
 
பயணி ஒருவரின் தொலைபேசி பயன்பாட்டில்
 
மலேசிய விமானம் மாயமானது தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், பயணி ஒருவரின் கையடக்கத் தொலைபேசி இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக புதிய தகவலும் வெளியாகியுள்ளது.
Malaysia_Airlines_passenger.jpg
காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த ஒரு சீன பயணியின் கையடக்கத் தொலைபேசி  இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக அவரது உறவினர்கள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
 
அவரது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டபோது, மணி ஒலித்துக்கொண்டே இருப்பதாகவும், யாரும் அதை எடுத்து பேசவில்லை என்றும் உறவினர் தெரிவித்துள்ளனர்.
 
 
மலாக்கா நீரிணை அருகே மாயமான விமானம்
 
மாயமான மலேசிய விமானம்  மலேசியாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் இடையே உள்ள மலாக்கா நீரிணை அருகே சென்றுள்ளமை ராடாரில் பதிவாகியுள்ளதாக மலேசிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.791266742.jpg
malaysia7_20140311.jpg
"திருடப்பட்ட கடவுச்சீட்டில் சென்றவர்கள் பயங்கரவாத உறுப்பினர்கள் இல்லை"
140311113751_mh370_iranian_624x351_inter

திருடப்பட்ட கடவுச்சீட்டுகளில் பயணித்த பயணிகளின் சிசிடிவி படங்கள் வெளிவந்துள்ளன.

காணாமல்போயுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் திருடுபோன கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி பயணித்திருந்த இரண்டு நபர்கள் பற்றிய விவரங்களை சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போல், வெளியிட்டுள்ளனது.

இவர்கள் இருவருமே இரானியப் பிரஜைகள் என்று அது தெரிவித்துள்ளது.

 

இவர்கள் இருவருமே செல்லுபடியாகக்கூடிய இரானிய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி மலேசியாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்றும், பின்னர் அங்கிருந்து பெய்ஜிங் கிளம்பிய அந்த விமானத்தில் திருடப்பட்ட கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி ஏறியிருந்தார்கள் என்றும் திரட்டப்பட்டுள்ள தரவுகள் காட்டுவதாக இண்டர்போல் கூறுகிறது.

விமானம் காணாமல்போனது ஒரு பயங்கரவாத சம்பவத்தினால் என்ற வாய்ப்பைக் குறைப்பதாக இந்த விவரங்கள் அமைந்திருக்கின்றன என்று இண்டர்போலின் பொதுச் செயலர் ரொனால்ட் நோபுல் கூறினார்.

மலேசிய பொலிஸ் தகவல்

கடவுச்சீட்டைக் கொண்டு பயணித்திருந்த இரண்டு பேரில் ஒருவர் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராகவும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை என மலேசிய பொலிசார் கூறுகின்றனர்.

19 வயது இரானிய இளைஞரான இந்நபர் ஜெர்மனிக்குள் குடியேற முயன்றிருந்த ஒருவராக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜெர்மனியில் வாழும் தனது தாயைச் சென்றடைவதற்காக இந்த இளைஞன் ஜெர்மனிக்கு செல்ல முற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

திருடுபோன பயண ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த விமானத்தில் பயணித்திருந்த இரண்டாவது நபர் பற்றி விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன.

பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக இந்த விமானம் காணாமல்போயிருக்ககூடிய வாய்ப்பை குறைப்பதாக மலேசியா தற்போது தந்துள்ள தகவல் அமைந்துள்ளது என பெய்ஜிங்கில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

தேடுதல் பணி

இதனிடையே விமானம் தேடப்பட்டுவருகின்ற இடத்தின் பரப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் தென் கீச கடலில் ஆரம்பித்து மேற்கில் மலாய் தீபகற்பத்திலுள்ள மலாக்கா நீரிணைப் பகுதி வரைக்குமாக தேடுதல் பணி நடந்துவருகின்றது.

கடல் பரப்பில் மட்டுமல்லாது நிலப்பரப்பிலும் மலேசிய அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

இந்த விமானம் கிளம்பி ஒரு மணி நேரத்திற்குள்ளாக தனது திட்டமிட்ட பாதையிலிருந்து கிளம்பிய இடத்திற்கே திரும்பிவர முயற்சித்திருந்ததோ என்பதற்கான வாய்ப்பையும் தேடலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆராய்ந்துவருகின்றனர்.

விமானம் காணாமல்போய் கிட்டத்தட்ட நான்கு நாட்களாகிவிட்ட நிலையில், விமான எச்சங்களை தேடும் பணியில் தற்போது ஒன்பது நாடுகள் பங்கெடுத்துள்ளன.

http://www.bbc.co.uk/tamil/global/2014/03/140311_missingplane.shtml

 

  • தொடங்கியவர்

Balotelli-M.jpg

வீண் சர்ச்சையில் பலோடெலி

 

 

 

கோலாலம்பூர்: காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணம் செய்ததாக கருதப்படும் பயங்கரவாதியின் உருவம், கால்பந்து வீரர் பலோடெலியுடன் ஒத்துப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

மலேசியன் ஏர்லைன்ஸ் ‘எம்.எச்.,370’ விமானம், கோலாலம்பூரிலிருந்து கடந்த 7ம் தேதி, சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டது. 227 பயணிகள், 12 ஊழியர்கள் அடங்கிய இந்த விமானம், சிறிது நேரத்தில் விமான கட்டுப்பாட்டை இழந்தது. தற்போது வரை, எங்கு சென்றது, என்ன ஆனது என தெரியவில்லை. தவிர, இதில் இருவர் திருட்டு ‘பாஸ்போர்ட்’ மூலம் பயணம் செய்துள்ளனர். இவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவர் இத்தாலிய கால்பந்து வீரரான மரியோ பலோடெலி மாதிரி  இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவர் கறுப்பினத்தை சேர்ந்தவர்.

இது குறித்து மலேசிய விமானத்துறை அமைச்சர் அசாருதின் அப்துல் கூறுகையில்,‘‘உங்களுக்கு  பலோடெலியை தெரியுமா? இவரின் உருவம் எப்படி இருக்கும்? இதை போலத்தான் ஒருவர் இருக்கிறார்,’’ என்றார். 

இந்த கருத்து இனவெறியை துாண்டுவதாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.