Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கரியை வெளியுறவு அமைச்சராக்க வேண்டும்!!லங்காதீப!!!!!!!

Featured Replies

ஸ்ரீலங்காவில் ஆட்சி செய்யும் அரசாங்கம் சிங்கள அரசாங்கம் அல்ல. அனைத்து ஸ்ரீலங்கா நாட்டினர்களினதும் அரசாங்கம் என்பதையும் தற்போது அரசாங்கம் தொடுத்திருக்கும் யுத்தம் புலிகள் அமைப்புக்கு எதிரானதே அன்றி தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என்பதையும் இந்திய அரசாங்கத்துக்கும் தமிழ்நாடு மாநில அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் ஷ்ரீலங்கா அரசு தரப்பு நிரூபிக்க வேண்டியதே தற்போதுள்ள அவசரமான தேவையாகும். இதற்காக அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள நிலைப்பாட்டில் உடனடியானதும் முக்கியமானதுமான பல மாற்றங்களைச் செய்யவேண்டும். ஆளும் அரசுக்கு வெளியேயுள்ள சிறுபான்மை மக்களின் ஜனநாயக கட்சிகள், அமைப்புகளை கூடுதலாக அரசாங்கத்துடன் சேர்த்துக் கொள்வது மேற்குறிப்பிடப்பட்டதும் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியதுமான ஒரு செயற்பாடாகும். இந்த வகையில் இந்தியாவுடன் விசேட வம்சாவளி தொடர்புகளையுடைய மத்திய மலைநாட்டுத் தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியாகிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை அண்மையில் ஆளும் அரசுடன் சேர்த்துக் கொண்டது மேற்குறிப்பிட்ட வகையில் மிக முக்கியமானதும் சாதகமானதுமான ஒரு அரசியல் நிகழ்வாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்திலுள்ளவர்கள் சிங்களப் பிரதிநிதிகளாக உள்ள சிங்களக் கட்சிகள் மட்டுமே என்ற இந்திய அரசாங்கத்தினதும் தமிழ்நாடு அரசு, அரசியற் கட்சிகள், தமிழ்நாடு மக்களின்றும் அபிப்பிராயத்தை மாற்றியமைத்து இந்திய மத்திய அரசு, தமிழ்நாடு மாநில அரசுடன் சுமுகமான உறவுகளை விருத்தி செய்து கொள்வதற்கும், விநோதமான அபிப்பிராயங்களை அகற்றுவதற்கும் மேற்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் அரசாங்கத்தில் சேர்த்துக் கொண்டது போன்ற செயற்பாடுகள் மிகவும் அவசியமாகும்.

ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் நிலைமையை உதாரணத்துக்காக எடுத்துக் கொண்டாலும் அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்களில் பெரும்பான்மையானோர் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது அமெரிக்காவின் "டிமோகிறாற்றிக்" அதாவது ஜனநாயகக் கட்சியே ஆகும். இந்தக் கட்சிக்கு எதிரான "றிபப்ளிகன்" அதாவது குடியரசுக் கட்சிக்கு கறுப்பின மக்களின் ஆதரவு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகும். இவ்வாறு இருப்பினும் தற்போது அமெரிக்காவில் ஆளும் கட்சியாகிய மேற்படி குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி தனது அரசாங்கத்தில் ராஜாங்கச் செயலாளராக கறுப்பினப் பெண்மணியையே நியமித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி குடியரசுக் கட்சிக்கும் தனக்கும் எதிராகவுள்ள கறுப்பின மக்களின் பொது அபிப்பிராயத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்கும் தனது கட்சியும் அரசாங்கமும் வெள்ளையினத்தவர்களுடையது மட்டுமல்ல கறுப்பின மக்களுடையதுமே என்பதை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டுவதற்கும் ஏற்றமுறையில் செயற்பட்டுள்ளார். இந்த உதாரணத்தின் மூலம் ஸ்ரீலங்காவில் உள்ளூர் அரசியல் செயற்பாடுகளை நோக்கினால் முன்னர் லக்ஷ்மன் கதிர்காமர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்து சிறந்த முறையில் செயற்பட்டிருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். அவர் அமைச்சராக பதவி வகித்த முழுக்காலப்பகுதியிலும் புலிகள் இயக்கத்துக்கு எதிராக வெற்றிகரமான முறையில் செயற்பட்டுள்ளதற்குக் காரணம் அவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சராக இருந்து செயற்பட்டதேயாகும்.

எனவே, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் சிங்கள ஆளும் தரப்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவராகிய வீ.ஆனந்தசங்கரியை மேற்படி வெளிவிவகார அமைச்சர் பதவியிலோ அல்லது குறைந்தபட்சம் காலியாகவுள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் பதவியிலோ நியமித்திருந்தால் அந்தச் செயற்பாடு மூலமாக ஷ்ரீலங்கா அரசு சிங்கள அரசு என்ற இந்திய மற்றும் சர்வதேச அபிப்பிராயம் தோன்றாமலிருந்திருக்க இடமுண்டு. இவ்வாறு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்தசங்கரியை முக்கிய அமைச்சுப் பதவி வழங்கி அவரை ஆளும் அரசுடன் இணைத்துக் கொள்வதற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை என்பதை அரசு தெரிந்து கொண்டு உடனே செயற்படவேண்டும்.

-லங்காதீப விமர்சன: 30.08.2006-

http://www.thinakkural.com/news/2006/9/4/s...ws_page9960.htm

:(:(:(:(:(:(:(:( சங்கரியை பப்பாசியில் இடைக்கிடை ஏத்தினால் தானாம் உசராய் துரோகம் செய்யும் எண்டு எழுதிறாங்கள் போல :(:D:(:(

அட்டகாசமான திட்டம்.. வெளிநாடுகள் எங்கையாவது உடும்புக்கறி கிடைக்குமா எண்டு விசாரிக்க உதவியாய் இருக்கப்போகுது...!

நல்ல நகைச்சுவை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.