Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது! விசாரணை முடிவில் மலேசியா அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது! விசாரணை முடிவில் மலேசியா அறிவிப்பு 
[saturday, 2014-03-15 10:45:30]
News Service
கடந்த வாரம் சனிக்கிழமை வானத்தில் பறந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்திய மலேசிய அரசு, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அறிவித்துள்ளது. விமானத்தில் இருந்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு வரும் சமிக்ஞைகள் தானாக செயலிழக்கவில்லை. அது மனிதர்களால் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனை வைத்துப் பார்க்கும் போது, விமானம் கடத்தப்பட்டிருப்பதாக மலேசிய அரசு அறிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், கடத்தியவர்கள் யார் என்றும், எதற்காக விமானம் கடத்தப்பட்டது என்றும் இதுவரை தெரியவரவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மலேசிய விமானத்திலிருந்து இன்னும் சேட்டிலைட் சிக்னல் வருகிறது... கடத்தப்பட்டுள்ளது உறுதி!!
Published: Saturday, March 15, 2014, 11:12 [iST] லாலம்பூர்: 
 
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் முடிவுக்கு வந்திருக்கின்றனர். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் உள்ளனர்.
 
ஆங்கிலத்தில் Mysterious case என்பார்களே.. அதற்கு சரியான உதாரணம் இந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானதுதான்.
 
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகரிலிருந்து 239 பேருடன் புறப்பட்ட இந்த விமானம் அடுத்த ஒரு மணி நேரத்தில் விமான நிலையத் தொடர்பை இழந்தது.
 
அன்றிலிருந்து உலக நாடுகள் பலவும் தங்களிடமுள்ள அதி உயர் தொழில்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி தேடிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் இருக்கட்டுமே என்று சூனியக்காரர்கள், ஜோசியர்களைக் கூட கேட்டுப் பார்த்துவிட்டார்கள்.
 
இதுவரை உறுதியான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தென் சீனக் கடல், வியட்நாம் கடல் என கடல் பகுதிகளில் முழுவதுமாக தேடிப் பார்த்துவிட்டார்கள். இப்போது இந்தியப் பெருங்கடலின் வட பகுதியில் இந்திய கப்பல்களும், தென் பகுதியில் அமெரிக்கக் கப்பல்களும் தேடிக் கொண்டிருக்கின்றன.
 
இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு 1000 கிமீ தொலைவில் இந்த விமானம் வந்ததற்கான தடயங்கள் ஆஸ்திரேலிய ரேடாரில் பதிவாகி இருப்பதாகக் கூறப்பட்டது.
 
கடத்தல்தான்
 
இந்த நிலையில், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கண்டுபிடிக்கும் விசாரணைக் குழு அதிகாரிகள் இந்த விமானம் எங்கும் விழுந்து நொறுங்கவில்லை. கடத்தப்பட்டதுதான் உண்மை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
 
இந்த விசாரணக்குழுவின் அதிகாரி ஒருவர் இதனை செய்தியாளர்களிடமும் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்பதை இனியும் யூகமாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. காரணம், கடத்தப்பட்டது என்பதுதான் உண்மை. விமான ஓட்டிகளில் ஒருவர் அல்லது விமானத்தில் பயணித்த வேறு யாரோ ஒரு தேர்ந்த விமானி இந்த கடத்தலை நிகழ்த்தியிருக்கலாம். இனி இந்தக் கோணத்தில் விசாரணையைத் தொடரப் போகிறோம்," என்றார்.
 
விசாரணைக் குழு அதிகாரப்பூர்வமாக இந்த முடிவை இன்று அறிவிக்கவிருக்கிறதாம்.
 
எங்கே தரையிறங்கி இருக்கும்?
 
இந்த விமானம் கடத்தப்பட்டது என்பதை எதை வைத்து இத்தனை உறுதியாகச் சொல்கிறார்கள்?
 
அமெரிக்கா அளித்த தெளிவான தகவல்கள் அடிப்படையில்தான். அந்தத் தகவலின்படி, கோலாலம்பூரிலிருந்து கிளம்பிய விமானத்தின் டிரான்ஸ்பான்டரை யாரோ வேண்டுமென்றே துண்டித்திருக்கிறார்கள்.
 
ரிபோர்டிங் சிஸ்டம் மற்றும் ட்ரான்ஸ்பாண்டர் இரண்டையும் அதிகாலை 1:07 மற்றும் 1:21-க்கு தனித்தனியாகத் துண்டித்துள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தால் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது 12 நிமிடங்கள் வித்தியாசத்தில் இந்த இரு தகவல் தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
 
இந்த வேலையை ஒரு தொழில்முறை கடத்தல்காரனால் கூட செய்ய முடியாதாம். விமானி அல்லது விமானத் தொழில்நுட்பம் அத்துப்படியாகத் தெரிந்த ஒருவர்தான் இப்படிச் செய்ய முடியும். ஏற்கெனவே இருமுறை கடந்த காலங்களில் இப்படி நடந்திருப்பதாக சர்வதேச விமானிகள் அமைப்பின் உறுப்பினர் மைக் க்ளைன் தெரிவித்துள்ளார்.
 
இன்னும் சிக்னல் இருக்கு...
 
தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான விமானத்தின் அத்தனைத் தொடர்புகளும் அறுந்து போய்விட்டாலும், விமானத்தின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மட்டும் இன்னும் செயல் நிலையில் உள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை விமானத்தின் இந்த சேட்டிலைட் கம்யூனிகேஷன் லிங்கிலிருந்து சிக்னல் வந்து கொண்டிருக்கிறது. இதனை 'ஹேன்ட்ஷேக்' என்று சொல்வார்கள். அதாவது செல்போன் ஆன்டெனா சிக்னல் தேடும்போது வருகிற சமிக்ஞை மாதிரி இது. அந்த 'ஹேன்ட் ஷேக்' இருப்பதை வைத்துதான் விமானம் எங்கோ பத்திரமாக தரை இறங்கியிருக்கிறது என்று உறுதியாக நம்புகிறது அமெரிக்கா.
 
கடத்தல்காரர்கள் விமானத்தை மலேசிய தீபகற்பத்து நேர் மேற்கில் திருப்பியுள்ளதை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரைப் பகுதிகள், அந்தமான் தீவுகள் மற்றும் மடகாஸ்கர் வரையிலான ஏதோ ஒரு பகுதியில் விமானம் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
 

140314165358_china_malaysia_plane7_624_t

 

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் தொலைதொடர்பு அமைப்புகள் "வேண்டுமென்றே" முடக்கப்பட்டதாகத் தெரியவருவதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரஸாக் கூறியிருக்கிறார்.

விமானத்தை செய்கோள் மற்றும் ராடார் கருவிகள் மூலம் கண்காணித்த தரவுகளின் அடிப்படையில் கிடைத்திருக்கும் இந்தப் புதிய ஆதாரம், விமானத்தில் யாரோ ஒருவர் வேண்டுமென்றே இந்த கருவிகளை முடக்கியிருப்பதைக் காட்டுவதாக அவர் கூறினார்.

 

இப்போது விமானம் காணாமல் போனது குறித்த விசாரணைகள், விமானக் குழுவினர் மற்றும் பயணிகள் மீது திரும்பியிருக்கிறது.

இத்தகவலை ஓரளவு நிச்சயமாகத் தன்னால் சொல்ல முடியும் என்று பிரதமர் ரஸாக் கூறினார்.

திசை மாறிய விமானம், திசை மாறும் விசாரணை

மிகச் சமீபத்திய செய்கோள் தரவுகளை வைத்துப் பார்க்கையில், விமானம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் செல்லும் வழியில் இரண்டு முறை திசை மாறியிருக்கிறது, முதலில் மேற்குப் புறமாகவும் பின்னர் வடமேற்காகவும் திரும்பியது என்று அவர் கூறினார்.


இதனை அடுத்து, இந்த விமானத்துக்கான தேடுதல் வேட்டையை, தனது அரசு தெற்கு சீனக் கடல் பகுதியில் நிறுத்துவதாகவும், இனி விமானத்தைத் தேடும் முயற்சி, வேறு இரண்டு பகுதிகளில் தொடரும் என்றும் அவர் கூறினார்.

ஒன்று, கஜக்ஸ்தான் -துருக்மேனிஸ்தான் எல்லையில் தொடங்கி, வட தாய்லாந்து வரையிலான பகுதி; இரண்டாவது, இந்தோனேசியாவில் தொடங்கி இந்தியப் பெருங்கடலின் தென்பகுதி வரையிலானது.

விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற வதந்திகள் இருந்தாலும், மலேசிய அதிகாரிகள் அனைத்து சாத்தியக்கூறுகளையும் விசாரிக்கிறார்கள் என்று ரசாக் கூறினார்.

 

140315035907_malaysia_plane_search_512x2

திசை மாறிய விமானம், திசை மாறும் விசாரணை

 

http://www.bbc.co.uk/tamil/global/2014/03/140315_malaysiaplanelead.shtml

 

இப்படியும் ஒரு செய்தி fb இல்,

 

1970779_732242493483194_803722582_n.jpg

 

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் – மர்மம் நீங்கியது..!

239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ்
விமானம் ரஷ்யாவில் அதி நவீன தொழில் நுட்ப
உதவியுடன் கடத்தப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த
வட்டாரங்கள் கூருகின்றன.

கடத்தலின் நோக்கம்: உலக பொருளாதாரத்தை தன்
கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன செல்வந்தர்கள் 4 பேர்
ரஷ்ய கடத்தல் கும்பலால் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இவர்கள் 4 பேரும் ஒருசேர இந்த விமானத்தில்
பயணித்ததை அறிந்த ரஷ்ய கடத்தல் கும்பலை சேர்ந்த 2
பேர் போலி கடவு சீட்டு மூலம் அந்த விமானத்தில்
பயணித்து சீனா சென்று தரையிறங்கும் முன்
அதிநவீன தொழில் நுட்பத்துடன் செயற்கைகோல்
கண்ணில் படாமல்
ரஷ்யாவிற்கு கடத்தி சென்றுள்ளனர்.

அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள்
விமான நிலையத்தில் கூக்குரல் இட்டபோது சீன
அரசாங்கம் பயணிகளின் உறவினர்களை விமான
நிலையத்தில் இருந்து அகற்றி தனியார்
விடுதியில் தங்க வைத்தனர்.
அவ்வுறவினர்களை ரகசியமாக விமான
பயணிகளிடம் பேச வைத்துள்ளனர்.

இவ்வாறு மலேசிய அரசாங்கமும், சீன அரசாங்கமும்
தங்கள் நாட்டிற்கு ரஷ்யா நட்பு நாடு என்பதாலும்
இரு நாட்டிற்கும் அவபெயர் ஏற்படாமல் இருக்க
இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் 24 மணி நேரத்திற்குள்
அனைத்து ஊடகங்களிலும் இந்த
செய்தி இரு நாட்டு அரசாங்கமும்
தெளிவு படுத்தும் என மலேசிய மற்றும் சீன
ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.