Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அஸ்வர் எம்.பி.யை அக்கிராசனத்திலிருந்து இறக்கும் வரை கோஷம் எழுப்பிய ஐ.தே.க. : சபையில் களேபரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் சபைக்குத் தலைமை தாங்கும் வகையில் அக்கிராசனத்தில் அமர்ந்தமைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பினை வெளியிட்டு ஆசனத்திலிருந்து இறங்கிச்செல்லுமாறு தொடர்ச்சியாக கோஷம் எழுப்பியதில் பாராளுமன்றம் பாரிய அமளிதுமளிக்குள்ளானது. 
ahm-azwer.jpg
அக்கிராசன வளாகத்தை சுற்றி நின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அஜித் பி.பெரேரா சுஜீவ சேனசிங்க அஜித் மன்னப்பெரும உள்ளிட்ட எம்.பி.க்கள் அஸ்வர் எம்.பி.யைப் பார்த்து இறங்கிச் செல்லுமாறு  கோஷமெழுப்பி கூட சத்தமிட்டதையடுத்து இரு தரப்பு கூச்சலுக்கு மத்தியில் அஸ்வர் எம்.பி. அக்கிராசனத்திலிருந்து இறங்கிச் சென்றார். 
 
பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக் ஷ தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு கூடியது. சபை பிரதான நடவடிக்கைகளின் பின்னர் இடம்பெற்ற விவாதத்தின் போது அக்கிராசனத்தில் இருந்த சபாநாயகர் சபைக்கு தலைமை தாங்குமாறு அஸ்வர் எம்.பி.க்கு அழைப்பு விடுத்தார். 
 
எரான் 
 
அஸ்வர் எம்.பி. அக்கிராசனத்தில் அமர்ந்த ஏக காலத்தில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் எரான் விக்கிரமரட்ண எம்.பி. 
அஸ்வர் எம்.பி.யின் சில செயற்பாடுகள் காரணமாக சபாநாயகருடன் ஐ.தே.க. கலந்துரையாடியதன் பேரில் அவர் சபைக்கு தலைமை தாங்கும் பொறுப்பிலிருந்து நிறுத்தப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது. 
 
தீர்மானம் இப்படி இருக்கும் போது தற்போது அவர் சபைக்கு தலைமை தாங்குவதை ஏற்க முடியாது என எதிர்ப்பினை வெளியிட்டார். 
 
இதே காரணத்தை அக்கட்சியின் அஜித் பி. பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகிய எம்.பி.க்களும் முன்வைத்து தமது எதிர்ப்பினையும் அதிருப்தியினையும் வெளியிட்டனர். 
 
அஸ்வர் 
எனினும் இதற்கு மறுப்புத் தெரிவித்த அஸ்வர் எம்.பி. தான் சபாநாயகராலேயே சபா பீடத்துக்கு தலைமை தாங்குவதற்கு அழைக்கப்பட்டேன். எனவே உங்கள் வாதத்தை ஏற்க முடியாது எனக் கூறினார். 
 
எனினும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி ஐ.தே.க. எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். 
 
சபையில் களேபரம் 
 
இதேவேளை எதிர்க்கட்சியினரின் கூச்சல் மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆளும் கட்சியினரும் பதிலுக்கு கூச்சலிட்டனர். இதன் போது அஸ்வர் எம்.பி.யை அக்கிராசனத்திலிருந்து இறங்குமாறு தொடர்ந்து கூச்சலுடன் வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. 
 
தினேஷ்
 
இதன் போது எழுந்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன சபாநாயகரின் அழைப்பின் பேரிலேயே அஸ்வர் அக்கிராசனத்துக்கு சென்றுள்ளார். ஐ.தே.க. பழைய கதைகளையெ கூறுகின்றது. எனவே சபாநாயகரின் தீர்மானத்தை கவனத்திற்குட்படுத்த முடியாது என்றார். 
 
இந்த சந்தர்ப்பத்திலும் கூச்சலும் குழப்பமும் வெகுவாக அதிகரித்திருந்தது. 
 
எஸ்.பி.
 
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறுகையில்,
 
அஸ்வர் எம்.பி.யானவர் எமது பாராளுமன்றத்தினதும் இங்கிலாந்து பாராளுமன்ற முறையினதும் சம்பிரதாயங்களை நன்கு அறிந்தவராவார். 
 
மேலும் அக்கிராசனத்துக்கு தலைமை தாங்கும் உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியலிடும் போது அது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஐ.தே.க. எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. 
 
இந்நிலையில் இப்போது எதிர்ப்பது ஏற்கக்கூடியதல்ல எனக் கூறினார். 
 
அக்கிராசன வளாகத்தை
சூழ்ந்த எம்.பி.க்கள் 
 
இதன் போது அஜித் பி.பெரேரா சுஜிவ சேனசிங்க உள்ளிட்ட எம்.பி.க்கள் சிலர் அக்கிராசன வளாகத்தை சுற்று நின்று கோஷம் எழுப்பினர். அஸ்வர் எம்.பி. அக்கிராசனத்திலிருந்து இறங்கிச் செல்ல வேண்டும் என்று தொடர்ச்சியாக கோஷம் எழுப்பியதுடன் கூட சத்தமும் இட்டனர். 
 
கலரியிலிருந்து சிரிப்பு 
இதேவேளை பார்வையாளர் கலரியிலிருந்த  நூற்றுக்கணக்கானோர் சபைக்குள் நடந்த சம்பவங்கள் கூச்சல் குழப்பங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். 
 
இதனால் பார்வையாளர்களை கலரியிலிருந்து அகற்றுமாறு படைக்கள சேவிதர்கள் பொலிஸாருக்கு  சைகை மூலம் அறிவித்தனர். 
 
இதனையடுத்து பார்வையாளர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 
 
இரு தரப்பு கூச்சல் நிறுத்தப்படாது நீடித்திருந்தமையால் சபைக்குள் பிரதி சபாநாயகர் வருகை தந்ததும் அஸ்வர் எம்.பி. பிரதி சபாநாயகரை அக்கிராசனத்துக்கு அழைத்து விட்டு அங்கிருந்து இறங்கி சென்றார். 
 
கை தட்டி மகிழ்ந்த 
எம்.பி.க்கள் 
 
அஸ்வர் எம்.பி. அக்கிராசனத்திலிருந்து இறங்கிச் சென்றதையடுத்து ஐ.தே.க. எம்.பி.க்கள் கைகளைத் தட்டியும் மேசைகளைத் தட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் கோசம் கூச்சல்களையும் நிறுத்திக் கொண்டனர். 
 
விஜித்த ஹேரத் 
இதனையடுத்து பேசிய ஜனநாயக தேசியக் கட்சி எம்.பி.யான விஜித ஹேரத் கூறுகையில் பொருத்த மில்லாதவர்கள் மீது சபைக்கு தலைமை தாங்கும் பொறுப்பில் அமர்த்தினால் இவ்வாறான நிலை தான் உருவாகும் என்றார். 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.