Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீண்ட கால கசப்பான யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்களை ஆற்ற வேண்டும் - பிரித்தானிய வெளியுறவுச் செயலர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

William-hague-colombo.jpg

சிறிலங்காவின் எதிர்கால உறுதித்தன்மை மற்றும் செழுமை போன்றவற்றைக் கருத்திற் கொண்டு உலக நாடுகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என நான் நம்புகிறேன். அதாவது உலக நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்து தமது வாக்குகளை வழங்கும் என நான் நம்புகிறேன். 

இவ்வாறு பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹெக் [William Hague is the Foreign Secretary of the U.K.] சென்னையை தளமாகக் கொண்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மார்ச் 24 அன்று தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்கப்படுவர். சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அனைத்துலகப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் கோருவதற்கு ஆதரவாக இந்தத் தீர்மானம் முன்வைக்கப்படுகிறது. 

சிறிலங்காவில் நிலவும் மனித உரிமைச் சூழல், சிறிலங்காவில் வாழும் அனைத்து மக்களுக்குமான அரசியற் தீர்வு மற்றும் மீளிணக்கப்பாட்டிற்கு ஆதரவு வழங்கல் போன்றவற்றை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பதை இத்தீர்மானம் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்காவின் எதிர்கால உறுதித்தன்மை மற்றும் செழுமை போன்றவற்றைக் கருத்திற் கொண்டு உலக நாடுகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என நான் நம்புகிறேன். அதாவது உலக நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்து தமது வாக்குகளை வழங்கும் என நான் நம்புகிறேன். 

முதலாவதாக, தன்னால் இழைக்கப்பட்ட மீறல்களுக்குப் பொறுப்பளிக்காது சிறிலங்கா தனது நாட்டில் நீண்ட கால நிலையான சமாதானத்தை எட்டுவதென்பது மிகவும் கடினமானதாகும். உண்மையையும் நீதியையும் எட்டுவதன் மூலம் நாட்டில் மீளிணக்கப்பாட்டை மிகவும் சரியான பாதையில் முன்னெடுக்க முடியும். இதற்கு சியரோ லியோன் நல்லதொரு எடுத்துக்காட்டாகும். சியரோ லியோனின் கறைபடிந்த வரலாற்றை விசாரணை செய்வதற்கு சிறப்பு நீதிமன்றம் அமர்த்தப்பட்டது. இந்நீதிமன்றம் தனது தீர்ப்பை முன்வைத்ததுடன், பாதிக்கப்பட்டவர்களின் வடுக்கள் ஆற்றப்பட வேண்டும் எனவும் அறிவித்தது. இதனை சிறிலங்கா நன்கு புரிந்துகொள்ள வேண்டும். சிறிலங்காவின் கறைபடிந்த வரலாற்றில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைகள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டும். நீண்ட கால கசப்பான யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்களை ஆற்றுவதற்கேற்ற விதத்தில் சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். 

இரண்டாவதாக, பேரவையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட இரண்டு தீர்மானங்களும் சுயாதீன விசாரணை, நம்பகமான உள்ளக விசாரணை போன்றவற்றுக்கான அழைப்பை விடுத்த போதிலும் சிறிலங்கா அரசாங்கம் இவற்றை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது. 2010ல் உருவாக்கப்பட்ட சிறிலங்காவின் சொந்த உள்நாட்டு கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது மீறல் சம்பவங்கள் தொடர்பில் போதியளவு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கத் தவறியுள்ளது. இந்த ஆணைக்குழு தனது பணியைச் சரியாகச் செய்திருந்தால், சிறிலங்கா அரசாங்கம் தனது மீறல்கள் தொடர்பில் பொறுப்பளித்திருக்கும். சிறிலங்கா இதனை நிறைவேற்றியிருந்தால் இன்று நாங்கள் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கத் தேவையில்லை. சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கோருவதற்குப் பதிலாக, சிறிலங்கா தனது கடந்த காலத் தவறுகளை சீர்செய்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்தால் நாங்கள் அதனை வாழ்த்தியிருந்திருக்கலாம். 

மூன்றாவதாக, அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அதற்கேற்ப செயற்பாடுமாறு அனைத்துலக சமூகத்திடம் மனித உரிமைகள் உயர்ஆணையாளர் கோரிக்கை விடுத்துவருகிறார். இவருக்கு ஆதரவாக பெயர்பெற்ற சமாதானச் செயற்பாட்டாளரான பேராயர் டெஸ்மண்ட் ருற்று மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த அமைப்புக்கள், பிரதானமாக தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றன உள்ளன. இவற்றுக்கப்பால், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போரின் போது இடம்பெற்ற மீறல்களைச் சாட்சிப்படுத்தும் சாட்சியங்களை சேகரித்து அவற்றை உறுதிப்படுத்துகின்றனர். இவர்களும் மனித உரிமைகள் உயர் ஆணையாளருக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். 

நான்காவதாக, சிறிலங்காவில் போர்க் காலத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்பளிப்பதன் மூலம் சிறிலங்காவின் சட்ட ஆட்சியைப் பலம்பெறச் செய்ய முடியும். நாட்டிலுள்ள அனைவரும் பாதுகாப்புடன் வாழ்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளார்கள் எனவும், இந்தச் சட்டம் மீறப்படக் கூடாது எனவும் ஒரு பலமான செய்தி ஒன்றை அனைத்துலக சமூகம் வழங்கவேண்டும். 

சிறிலங்காவின் உள்ளக விசாரணைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் சிறிலங்காவுக்குள் தீர்வு காணப்படுவது மிகச் சிறந்தது எனவும் சிறிலங்காவை விமர்சிக்காது அதற்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் நாட்டில் நிலைகொண்டிருந்த தமிழ்ப் புலிப் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்காதமையை உறுதிப்படுத்த வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடப்பாடாகும் என தீர்மானத்தை எதிர்க்கும் நாடுகள் கூறுகின்றன. 

இது உண்மையில் சரியானதுதான். போரின் வடுக்களை ஆற்றுவதற்கு நீண்ட காலம் தேவைப்படும். பூரணத்துவம், சுயாதீனம், வெளிப்படைத்தன்மை மற்றும் நாட்டிற்குள் எடுக்கப்படும் தீர்மானம் போன்றன உயர் விளைவைத் தரும். ஒரு பணியை முற்றாக நிறைவடையச் செய்தல் மிக முக்கியமானதாகும். மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இதனைச் செய்யவேண்டியது அவசியமானதாகும். மீண்டும் நாட்டில் புலிப் பயங்கரவாதம் தோன்றுவதை எவரும் விரும்பமாட்டார்கள். 

ஆனால் இன்னமும் காலம் தேவை என்பதல்ல. சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் நம்பகமான விசாரணையின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை மற்றும் நீதி சென்றடையக் கூடிய வகையில் அரசியல் உறுதிப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். 2009ல் ஐ.நா செயலாளர் நாயகத்துடன் இணைந்து சிறிலங்காவால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டவாறு, போர்க் கால மீறல்களுக்குப் பொறுப்பளிப்பதற்காக தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டது. 

சிறிலங்கா ஒரு தேசமாகப் பலம்பெறுவதற்கு தேவையான நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு சிறிலங்காவுக்கு உந்துதல் அளிக்கவேண்டிய பொறுப்பை அனைத்துலக சமூகம் கொண்டுள்ளது. மீள்கட்டுமானம் என்பது முக்கியமானதுதான். ஆனால் இது மட்டும் சிறிலங்காவின் எதிர்காலத்தின் பாதுகாப்பிற்குப் போதுமானதல்ல. அரசியற் தீர்வு, பொறுப்பளித்தல், மனித உரிமைகள், மீளிணக்கப்பாடு போன்ற அனைத்தும் கருத்திலெடுக்கப்பட்டு பயனுள்ள நகர்வு முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. 

பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தம் புரிவதற்கு உறுதித்தன்மை தேவைப்பாடானதாகும். மிகக் கொடுமையான தமிழ்ப் புலிகளால் துன்புறுத்தலுக்கு ஆளாகிய இலங்கையர்களுக்காக நாம் வருந்துகிறோம். ஆனால் இவர்கள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என எவரும் கருதுவதில்லை. நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்காது பார்க்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நாட்டிற்குரியதாகும். நாட்டில் நல்லாட்சி, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், பாலியல் மற்றும் ஏனைய மீறல்கள் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் பெறவேண்டும். இந்த விழுமியங்களை சிறிலங்கா அரசாங்கம் தனது அனைத்து மக்களையும் சென்றடைவதற்கு நாங்கள் சிறிலங்காவை அழுத்த வேண்டும். 

பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்காவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டின் போது இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தது. சிறிலங்கா அதிபர் ராஜபக்ச உட்பட சிறிலங்கா அரசாங்கத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் போது பிரித்தானிய அரசாங்கம் இதனை வலியுறுத்தியது. 

மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து இம்மாத இறுதியில் பேரவையில் முன்வைக்கவுள்ள தீர்மானத்தை ஆதரித்து சிறிலங்காவில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான ஆதரவை வழங்குவற்கான காலம் கனிந்துவிட்டது. கடந்த கால மீறல்கள் தொடர்பாக அனைத்துலகப் பொறிமுறையை மட்டும் உருவாக்காது, எல்லா இலங்கையர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகளையும் ஆராயவேண்டும். சிறிலங்கா விடயத்தில் அனைத்தையும் நாம் சரியாகச் செய்யவேண்டும்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140322110186

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.