Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கா, மஹேலவுக்கு எதிராக ஒழுக்காற்று?

Featured Replies

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோருக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்பிய இவர்கள், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்த ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் நேற்று (21) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான தீர்மானத்தை எடுக்குமாறு ஒழுக்காற்றுக்குழுவிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/107676-2014-04-22-04-41-53.html

  • தொடங்கியவர்

நேர்மையானவர்கள் என்றால் மன்னிப்புக் கோர வேண்டும்" : மஹேல - கிரிக்கெட் சபைக்கிடையில் மோதல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் தெரிவித்திருந்த கருத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் . இதேவேளை இவ்விருவரும் நேர்மையானவர்கள் என்றால் மன்னிப்புக் கோர வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் மிச்செல் டி சொய்ஷா  மஹேலவுக்கு அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

 

10289407_880810485268635_1501264248_o_zp
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் மஹேல ஜயவர்தனவிற்கும், இலங்கை கிரிக்கெட் சபைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

மஹேல ஜயவர்தன மற்றும் கிரிக்கெட் சபை உறுப்பினர்களினால் பரிமாறிக் கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

011_zpsc0b495c1.jpg

அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற சர்வதேச இருபதுக்கு -20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளின் போது மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் சர்வதேச இருபதுக்கு - 20 போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. இது தொடர்பிலேயே சர்ச்சை எழுந்துள்ளது.

 

022_zpsb171c4cc.jpg
கிரிக்கெட் சபைக்கு அறிவிக்காமல் ஓய்வு குறித்து ஊடகங்களில் அறிவித்தமை ஒழுக்க மீறலாகும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.

எனினும், ஊடகங்களுக்கு அவ்வாறான கருத்துக்களை வெளியிடவில்லை எனவும்,  கிரிக்கெட் சபை தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டு வருதாகவும் மஹேல ஜயவர்தன குற்றம் சுமத்தியுள்ளதாகவும் கிரிக்கெட் சபை அதிகாரிகள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

003_2_zps874a62d3.jpg

இந்த விடயம் தொடர்பில் மஹேல ஜயவர்தன கிரிக்கெட் சபையின் செயலாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் தெரிவுக்குழு தலைவர் ஆகியோருக்கு தமது அதிருப்தியை வெளியிட்டு மின்னஞ்சல்களை அனுப்பி வைத்துள்ளார்.

மஹேலவின் மின்னஞ்சலுக்கு குறித்த அதிகாரிகளும் பதிலளித்துள்ளனர். குறித்த மின்னஞ்சல்கள் அனைத்தும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

 

004_1_zpsdbb1f0c6.jpg
இரு தரப்பிற்கும் இடையிலான முரண்பாடு இலங்கை கிரிக்கெட் துறையை மோசமாக பாதிக்கக் கூடும் என கிரிககெட் ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
005_0_zps96ac0fcb.jpg

 

http://www.virakesari.lk/articles/2014/04/23/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

  • தொடங்கியவர்

சங்கா, மஹேலவுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை கைவிடப்பட்டது
0
Submitted by ceditor on Fri, 04/25/2014 - 11:52
இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்­க­ளான குமார் சங்­கக்­கார மற்றும் மஹேல ஜெய­வர்­தன ஆகியோர் மீது நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்ட ஒழுக்­காற்று நட­வ­டிக்கை திட்டம் கைவி­டப்­பட்­டுள்­ளது.
குறித்த விடயம் தொடர்பில் எந்த நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது என இலங்கை கிரிக்கெட் சபை அறி­வித்­துள்­ளது.

பங்­க­ளா­தேஷில் நடை­பெற்ற ஐ.சி.சி.யின் உலக இரு­பது-20 கிண்ணத் தொடரில் சம்­பி­ய­னான இலங்கை அணி நாடு­தி­ரும்­பிய போது கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் மேற்­படி இரு­வீ­ரர்­களும் தெரி­வித்­திருந்த கருத்து தொடர்­பி­லேயே ஒழுக்­காற்று நட­வ­டிக்கை மேற்­கொள்ள திட்டமிட்டுள்ளதாக கிரிக்கெட் சபை முன்னர் அறிவித்திருந்தது.
 

 

http://www.virakesari.lk/articles/2014/04/25/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.