Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலுக்கு முன் துதி – தேர்தலுக்குப் பின் நிந்தனை: மகிந்த சிந்தனையை அடியொற்றி வெளிப்பட்டது விக்னேஸ்வர ‘சிந்தனாவ’!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தேர்தலுக்கு முன் துதி – தேர்தலுக்குப் பின் நிந்தனை: மகிந்த சிந்தனையை அடியொற்றி வெளிப்பட்டது விக்னேஸ்வர ‘சிந்தனாவ’!
மே 2, 2014
 
 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை சர்வாதிகாரியாக வர்ணித்து வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மே தின உரையாற்றியிருப்பது உலகெங்கும் பரந்து வாழும் பத்துக் கோடித் தமிழர்களையும் கடும் சீற்றத்திற்கு ஆளாக்கியிருக்கின்றது.
 
கடந்த ஆண்டு வட மாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைகளின் பொழுது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை ‘மாவீரன்’ என்று வர்ணித்து யாழ்ப்பாண மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு முதலமைச்சராக ‘அரியாசனம்’ ஏறிய விக்னேஸ்வரன், நேற்று 01.05.2014 வியாழக்கிழமை ஆற்றிய மே தின உரையில் ‘ஒரு காலத்தில் பிரபாகரனும் கேட்பார் இன்றி அதிகாரத்தில் இருந்தார்’ என்று தலைவர் பிரபாகரன் அவர்களை சர்வாதிகாரியாக விளித்து நிந்தனை செய்துள்ளார்.
 
இதனால் அங்கு நின்ற மக்கள் கடும் சீற்றத்திற்கு ஆளாகியிருந்த நிலையில், தற்பொழுது விக்னேஸ்வரனின் உரை தொடர்பான தகவல்கள் உலகெங்கும் பரவிப் பத்துக் கோடித் தமிழர்களையும் கடும் சீற்றத்திற்கு ஆளாக்கியிருக்கின்றது.
 
ஆயுத எதிர்ப்பியக்கமாகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட முப்பத்தேழு ஆண்டு காலப்பகுதியில் பேசாமடந்தையாகக் கொழும்பில் ஒய்யாரக் கொய்யகம் புரிந்து, தனது இரண்டு புதல்வர்களையும் சிங்களப் பெண்களுக்குக் கணவன்களாக்கி சுகபோக வாழ்வு வாழ்ந்த விக்னேஸ்வரன், தமிழீழ மக்களின் விடுதலைக்காக தனது வாழ்நாளையும், தனது முழுக் குடும்பத்தையும் அர்ப்பணித்த மாபெரும் வரலாற்று நாயகனாக விளங்கும் தமிழீழ தேசியத் தலைவரைப் பற்றிக் கருத்துக்கூறுவதற்கு எவ்வித அருகதையும் அற்றவர் என்பதே உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களின் கருத்தாக உள்ளது.
 
2009 மே 18இற்குப் பின்னர் தமிழீழ தேசியத் தலைவருடனான தொடர்பை உலகத் தமிழினம் இழந்துள்ள பொழுதும், ஒவ்வொரு தமிழர்களின் இதயங்களிலும் வாசம்செய்பவராகவே தலைவர் பிரபாகரன் அவர்கள் திகழ்கின்றார்.
 
விக்னேஸ்வரன் உட்பட ஒவ்வொரு தமிழருக்கும் முகவரியும், முகமும் கொடுத்த பெருமைக்குரியவர் தலைவர் பிரபாகரன்.
 
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் போட்ட பிச்சையில்தான் இன்று வடமாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் பதவி வகிக்கின்றார்.
 
மகிந்தரின் பதவி நிலையற்றது என்பதை உணர்த்துவதற்காக முதலில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை சர்வாதிகாரியாக வர்ணித்து, பின்னர் தலைவர் பிரபாகரன் அவர்களை மகிந்தருடன் வாய்கூசாமல் ஒப்பிட்டு உரையாற்றிய விக்னேஸ்வரன், தனது பதவியும் நிலையற்றது என்பதையும், அடுத்த தேர்தலில் தனது இழிசெய்கைக்காக ஆட்சிக் கட்டிலிருந்து தான் தமிழீழ மக்களால் தூக்கியெறியப்படும் நிலை ஏற்படும் என்பதை மறந்துவிட்டாரா? என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.
 
தமிழ் மக்களின் வாக்கு தேவைப்பட்டுப் பிச்சை எடுத்த பொழுது விக்னேஸ்வரனுக்குத் தலைவர் பிரபாகரன் மாவீரனாகத் தென்பட்டார். அரியாசனம் ஏறியதும் இப்பொழுது விக்னேஸ்வரனுக்குத் தலைவர் பிரபாகரன் சர்வாதிகாரியாகத் தென்படுகின்றார். இதுதான் விக்னேஸ்வரனின் சிந்தனையா?
 
இதனைத்தான் மகிந்தரும் செய்தார்.
 
அரியாசனத்திற்கான வாக்குப் பிச்சைதேடி 2005ஆம் ஆண்டு கிளிநொச்சிக்குத் தனது சகோதரர் பசில் ராஜபசவை தூது அனுப்பினார் மகிந்தர். தமிழீழ அரசியல்துறையின் நடுவப்பணியகத்திற்கும், சமாதான செயலகத்திற்கும் தனது சகோதரர் மகிந்தரின் சார்பில் பல தடவைகள் காவடி எடுத்தார் பசில்.
 
இப்பொழுது விக்னேஸ்வரனுக்குப் பக்கபலமாக நாடாளுமன்றக் கதிரையில் அமர்ந்திருக்கும், உதயன்-சுடரொளி பத்திரிகையின் நிறுவனர் ஈ.சரணபவன், அந்நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியரும், சரவணபவனின் மைத்துனருமான ந.வித்தியாதரன் ஆகியோரையும் பல தடவைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திடம் தூது அனுப்பினார் மகிந்தர்.
 
பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றதும் தலைவர் பிரபாகரன் உடனடியாகவே மகிந்தரின் பார்வையில் சர்வாதிகாரி ஆனார்.
 
அதுதான் மகிந்த சிந்தனாவ.
 
இப்பொழுது மகிந்த சிந்தனாவை அடியொற்றி விக்னேஸ்வர சிந்தனாவ வெளிவந்துள்ளது.
 
பெயர்கள்தான் மாறியுள்ளனவே தவிர சிந்தனைகள் அப்படியேதான் இருக்கின்றன.
 
(முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மே தின உரை எழுத்துருவில்)
1.jpg

 

2.jpg

 

3.jpg

 

4.jpg

 

5.jpg

 

6.jpg

 

7.jpg

 

8.jpg

http://www.sankathi24.com/news/41040/64//d,fullart.aspx

சனங்கள் கை தட்டுகின்றனரே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனங்கள் கை தட்டுகின்றனரே.

 

 

 

 

 

நம்ம விக்கி சொன்னதிலும் உண்மை இருக்குது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.