Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அஞ்சலி செலுத்துவதை அரசாங்கம் தடுப்பதால் கறுப்புப்பட்டிகளை அணிந்து கண்டிக்கின்றோம் : முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

Featured Replies

எங்­க­ளு­டைய இறந்த மக்கள்இ இறந்த உயிர்கள் சார்­பாக நாம் எமது மனோ நிலையை வெளிப்­ப­டுத்­து­கின்ற பொழுது அர­சாங்கம் அர­சியல் ரீதி­யாகப் பார்ப்­ப­தையும் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தையும் நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம்.
 
c.v.jpg
 
இதே­வேளை நாம் வெளியில்ஒன்று கூடினால் அதற்கு அர­சாங்­கமும் இரா­ணு­வமும் தடை விதிக்­கின்­றது. இதனால் நாம் இக்­க­றுப்­புப்­பட்­டி­களை அணிந்­துள்ளோம் என
வட­மா­காண சபை முத­ல­மைச்சர் சி.வி. விக்­கினேஸ்­வரன் தெரி­வித்தார்.
 
வடக்கு மாகாண சபையின் ஒன்­ப­தாவு அமர்வு நேற்று நடை­பெற்­ற­போது முள்­ளி­வாய்க்­காலில் உயி­ரி­ழந்த மக்­க­ளுக்கு கறுப்­புப்­பட்டி அணிந்து அஞ்­சலி செலுத்­திய பின்
னர் அவைத் தலை­வரின் அழைப்­புக்கு அமைய இம்­மக்­க­ளுக்­கான அஞ்­சலி உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
 
அவர் அங்கு உரை­யாற்­று­கையில்,
 
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் உயிர் நீத்­தார்கள். எத்­த­னையோ பேர் எப்­பொ­ழுதுஇ எதற்­காகஇ எப்­படி என்­பது சம்­பந்­த­மாக சர்­வ­தேசம் விசா­ரணை செய்ய இருக்­கின்­றது. அது ஒரு­பு­ற­மி­ருக்க எங்­களைப் பொறுத்­த­வ­ரை­யிலே எங்­க­ளு­டைய உற­வுகள் திடீரென பெரு­வா­ரி­யாக அன்று உயிர்­நீத்­ததை நாங்கள் நினைவு படுத்­தியே எங்­க­ளு­டைய அஞ்­ச­லி­க­ளையும் மனத் துய­ரங்­க­ளையும் மன­வ­ருத்­தங்­க­ளையும் தெரி­வித்து அந்த ஆத்­மாக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த வேண்டும் என்­ப­தற்­காக தீபங்கள் ஏற்­றியும் எமது எண்­ணங்­களை வெளிப்­ப­டுத்­தியும் வரு­கின்றோம்.
 
இது சம்­பந்­த­மாக அண்­மைக்­கா­லத்தில் பல முரண்­பட்ட கருத்­துக்கள் எழுந்­துள்­ளன. இதில் விசித்­திரம் என்­ன­வென்றால் இறந்­த­வர்­க­ளுக்­காக எங்­க­ளு­டைய மன நிலையை வெளிப்­ப­டுத்­து­வதை அர­சாங்கம் வித்­தி­யா­ச­மாக எடுத்துக் கொள்­கின்­றது. இறந்­த­வர்கள் மீண்டும் வந்து விடு­வார்கள் என்று பயத்­திலோ என்­னவோ இரா­ணு­வமும் அர­சாங்­கமும் நாங்கள் எங்­கெல்லாம் தீபம் ஏற்­று­கின்­றோமோ அங்­கெல்லாம் வந்து அவற்றை அணைப்­பதும்இ அது சம்­பந்­த­மாக மக்­களைக் கைது செய்து செல்­வதும் தற்­பொ­ழுது சில நாட்­க­ளாக நடை­பெற்று வரு­கின்­றன.
 
இது ஒரு­தே­வை­யற்ற விட­ய­மாகும். இறந்­த­வர்கள் தொடர்­பாக எங்­க­ளு­டைய மனோ­நி­லை­யையே நாம் வெளிப்­ப­டுத்­து­கின்றோம். அதை ஒரு அர­சியல் விட­ய­மாக மாற்றிக் கொள்­வது அவ்­வ­ளவு சரி­யில்லை என்றே எனக்­குப்­ப­டு­கின்­றது. அதே நேரத்தில் ஆலயங்களில் நாங்கள் ஏற்ற வேண்­டிய தீபங்­களை அர­சியல் அரங்­கங்­க­ளுக்குக் கொண்டு வந்து தீபங்கள் ஏற்ற வேண்டும் என்ற அவ­சி­யமும் இல்லை எனவும் நாம் கரு­து­கின்றோம். எங்­களு­டைய மனோ நிலை­களை நாங்கள் இறந்த­வர்கள் சம்­பந்­த­மாக வெளிப்­ப­டுத்­து­வ­தா
னால் பல விதங்­களில் அதைச் செய்­யலாம்.
 
ஆல­யங்­க­ளுக்குச் செல்­லலாம். பூசைகள் செய்­யலாம். அதே­நேரம் அவர்கள் சார்­பாக வறி­ய­வர்­க­ளுக்கும்இபோரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் உத­வி­களை வழங்­கலாம்.
தற்­பொ­ழுது வலி.வடக்கு மக்கள் இடம்­பெ­யர்ந்து மிகவும் கஷ்­ட­மான நிலையில் இருக்­கின்­றனர். இவர்­க­ளுக்கு அர­சாங்­கத்­தினால் எந்­த­வ­கை­யான உத­வி­களும் தரப்­ப­ட­வில்லை. வழங்­கப்­பட்ட உத­வி­க­ளையும் அவர்கள் தடை­போட்டு நிறுத்­தி­விட்­டார்கள்.
 
அம் மக்­க­ளுக்கு மிக அண்­மை­யிலே நாம் உத­வி­களைச் செய்­துள்ளோம். இறந்­த­வர்கள் தொடர்பில் எமது மன­நி­லையை வெளிப்­ப­டுத்த இத்­த­கை­ய­வர்­க­ளுக்கு உத­வி­களை வழங்
கலாம். அதை விடுத்து இவற்றை அர­சி­ய­லுக்குப் பாவிப்­பது அவ்­வ­ளவு சரி­யா­ன­தாக எனக்குத் தெரி­ய­வில்லை. அதற்­காக எமது மனோ நிலையை வெளிப்­ப­டுத்­தா­மலும் இரு
க்­க­மு­டி­யாது.
 
ஆயி­ர­மா­யிரம் மக்கள் ஒரு­மித்து ஓரிரு நாட்­க­ளி­லேயே இறந்து போவ­தற்கு காரணம் என்­ன­வென அர­சியல் ரீதி­யாக வெளி­நாட்டு நிறு­வ­னங்கள் அறிந்து எமக்குத் தெரி­விக்க இரு­கின்­றார்கள். அது எவ்­வாறு இருப்­பினும் மக்­க­ளு­டைய மனோ நிலையை வெளிப்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யமும் இருக்­கின்­றது.
 
வெளியில் நாங்கள் கூடினால் அதற்கு அர­சாங்கம் தடை விதிக்­கின்­றது. இரா­ணுவம் தடை விதிக்­கின்­றது. அதனால் தான் நாங்கள் இன்று இக்­க­றுப்புப் பட்­டி­களை அணிந்துஇ மிகவும் மன­வே­தனையை வெளிப்­ப­டுத்­து­கின்றோம்.
 
அதா­வது எமது இறந்த மக்கள்இ இறந்த உயிர்கள் சார்­பாக நாம் எமது மனோ நிலையை வெளிப்­ப­டுத்­து­வதை அர­சாங்கம் அர­சியல் ரீதி­யாகப் பார்ப்­ப­தையும் அர­சாங்கம் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தையும் நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம் என்ற அடிப்­ப­டை­யி­லேதான் நாம் இன்று கறுப்­புப்­பட்டி அணிந்து இங்கு வந்­துள்ளோம். எல்லோர் சார்­பா­கவும் இந்த மனோ நிலையை நாம் வெளிப்படுத்தி நிற்கின்றோம் என்றார்.
 
  • தொடங்கியவர்

வட மாகாணசபையில் நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்வுகளில் விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை?
 
wigneswaran_CI.jpg

வட மாகாணசபைக் கட்டடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளில் மாகாண

 

முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் மற்றும் முல்லைத்தீவில் உயிரிழந்தவர்களுக்காக இந்த விசேட நினைவு அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், ஆனந்தி சசிதரன் போன்றோரினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூரும் வகையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுகளின் பின்னரே விக்னேஸ்வரன் குறித்த இடத்திற்கு வருகை தந்தத்தாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மாகாணசபை வளாகத்தில் அஞ்சலி செலுத்த முடியும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நினைவு அஞ்சலி நிகழ்வுகளை தடுக்க அரசாங்கத்திற்கோ அல்லது படையினருக்கு உரிமை கிடையாது எனவும், தமிழ் மக்கள் இது குறித்து பீதியடைய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107308/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்வது பிள்ளையா் என்று நினைத்துதான் ................

என்ன செய்வது பிள்ளையா் என்று நினைத்துதான் ................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.