Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்திடம் மண்டியிட்டுக் கிடப்பது வேதனை அளிக்கின்றது:யோகராஜன்

Featured Replies

இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் தேவைகள் மறுக்கப்பட்டு வெறுமனே தொழிற்சங்க அரசியலை முன்னெடுப்பவர்கள் தேசிய ரீதியில் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அரசாங்கத்திடம் மண்டியிட்டுக் கிடப்பது வேதனை அளிக்கின்றது. நாடற்றவர்களாக ஒடுக்கப்பட்ட மக்கள் இப்போது வீடற்ற சமூகமாக r.yogarajan_0_1.jpgஅடிமைப்படுத்தப்பட்டு வருவதை தடுப்பதற்கு விழிப்புணர்ச்சியுடன் மறுமலர்ச்சி காண வேண்டும் என்பதே எமது பிரதான குறிக்கோளாகும் என   நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய முற்போக்கு சங்கத்தின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்திய வம்சாவளி மக்கள் குழுவின் தலைவருமான ஆர்.யோகராஜன் தெரிவித்தார். 
 
தெல்தொட்டை லூல்கந்தர தோட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முற்போக்கு சங்கத்தின் பிரசாரக் கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
கூட்டத்தில் அவர் தொடர்ந்து கூறியதாவது,
நாளாந்த உழைப்பின் மூலம் இலங்கை நாட்டை வாழ வைக்கும் தொழிலாளர்கள் வாழ்வதற்கு வீடமைத்துக் கொடுக்காத இனவாத, மதவாத, மொழிவாத போக்குக் கொண்ட அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு சுகபோக வசதிகளுக்காக சமூகத்தை மறந்து போன மயக்க நிலையில் இருக்கிறார்கள். 
 
சமூகத் தேவைகள் பற்றி பாராளுமன்றத்தில் வாய் திறக்காதவர்களுக்கு மக்களின் பிரதிநிதித்துவத்தை வகிக்கும் அருகதை கிடையாது. கம்பனிகளும் தோட்ட நிர்வாகங்களும் தொழிற்சங்க சட்டங்களுக்கு முரணாக முன்னெடுக்கும் அனைத்து சர்வாதிகார போக்குகளுக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுபவர்கள் மறைமுகமாக அங்கீகாரமளித்துள்ளார்கள். 
 
கடந்த இருநூறு ஆண்டுகளாக வெள்ளைக்காரரின் குதிரை லயனில் வசித்து வரும் மக்களுக்கு தனித்தனி வீடு வேண்டும் என்பதே எமது குறிக்கோளாகும். சங்கத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக துணிகரமாக பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்குக் கூறி செயற்படுபவர்களால் எதிர்கால சந்ததிகளுக்கு சிறந்த வழிகளைக் காட்ட முடியாது. 
 
நாட் கூலிகளாக இன்னும் எவ்வளவு காலம் லயன் வீடுகளில் வாழப் போகின்றோம் என்பதற்கு நாமே விடை காண்பது அவசியம். 
 
மாகாண கல்வி அமைச்சை பறித்ததன் மூலம் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு படிப்பறிவு தேவை இல்லை என்று நினைக்கும் அரசாங்கத்திற்கு எதிராக நியாயம் கேட்க முடியாத ஏழு தமிழ் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையாக மௌனம் காத்து வருகிறார்கள். 
 
வெள்ளைக்காரன் முதன் முதலாக தேயிலைச் செடியை நாட்டிய லூல்கந்தர தோட்டத்தில் ஆறு தலைமுறையாக வசிக்கும் இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் கூலிக்காரர்களாகவும் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும் அடிப்படை வசதிகள் அற்றவர்களாகவும் இருப்பது அரசு சார்பு அரசியல் தலைவர்களுக்கு புரியாமல் இருப்பது ஏன்?
 
பதவிகளுக்கும் அரச சலுகைகளுக்கும் சோரம் போயுள்ள அரசியல்வாதிகளின் அதிகார அடக்கு முறை போக்குகளுக்கு முடிவு ஏற்படுத்தப்பட வேண்டும். 
 
கூரைத்தகடுகள், சீமேந்து, கொப்பி, புத்தகம் கொடுப்பதால் மட்டும் சமூகத்திற்கு விடிவும் அரசியல் உரிமைகளையும் பெற முடியாது என்ற உண்மைத் தன்மையை தொழிலாளர்கள் உணர்வு பூர்வமாக புரிந்துகொள்ள வேண்டும். ஆறு தலைமுறையாக அடாவடித்தனங்களுக்கு பயந்து அடிமைப்பட்டு வாழ்ந்தது போதும் ஏழாவது தலைமுறை கல்வி அறிவுடன் சுயமரியாதையுடன் கௌரவமாக நாகரிகத்துடன் அரசியல் உரிமைகளுடன் தனியான சொந்த வீட்டில் வாழும் காலத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பேதங்களை மறந்து இணைந்து செயற்படுவது அவசியமாகும். 
 
நிகழ்வில் கலந்துகொண்ட ஐக்கிய தேசிய முற்போக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். திவ்வியராஜன் கூறியதாவது;
 
அண்மையில் வெளிவந்த "பரதேசி" என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் இந்திய வம்சாவளி சமூகத்தின் கடந்த கால அவல நிலை சித்திரித்து காட்டப்பட்டுள்ளது. அதேபோன்ற நிலை இப்பொழுதும் தோட்டப்புறங்களில் தொடர்ந்து கொண்டு இருப்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். வீதி, வீடு, சுகாதார குடிநீர் வசதி இல்லாத சமூகமாகவே இருநூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டுள்ளதை தொழிற்சங்க அரசியல்வாதிகள் வரவேற்பதால் தான் சமூக தேவைகளை பெற்றுக் கொடுக்காமல் அரசியல் பதவிகள் மூலம் சுகவாசிகளாக, அரசாங்கத்தின் கைக்கூலிகளாக நடந்துக் கொள்கிறார்கள். 
 
தேசிய அரசியல் நீரோட்டத்தில் சமூக விடுதலையை விரும்பும் ஒவ்வொருவரும் இணைந்துக்கொள்ள வேண்டும். வீடு, காணி இந்திய வம்சாவளி மக்களுக்கு சொந்தமாக கிடைக்க வேண்டும் என்ற தூர நோக்குடன் செயற்படும் ஐக்கிய தேசிய முற்போக்கு சங்கத்துடன் அனைவரும் இணைந்து கொள்வதன் மூலம் எதிர்கால சுபீட்சத்துக்கு வழி சமைக்க முடியும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.