Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் புகைபிடிப்போர் குறைகின்றனர்; வடக்கு கிழக்கில் அதிகரிப்பு

Featured Replies

140531173001_adic_sri_lanka_smoking_304x

யாழ்ப்பாணம் சங்கானையில் புகைத்தலின் பாதிப்பைக் காட்டும் விளம்பரப் பதாகை

இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வொன்று கூறுகின்றது.

ஆனால், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் முன்னைய காலங்களைவிட புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் ஆய்வை நடத்திய அடிக் என்ற மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தொண்டுநிறுவனம் கூறுகின்றது.

2003 முதல் 2013-ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அடிக் நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டுச் சபையின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த 10 ஆண்டு காலத்தில் சிகெரட் விற்பனையும் வீழ்ச்சி கண்டுள்ளதையும் அடிக் தொண்டு நிறுவனத்தின் அதிகாரி ஏ.சி. ரஹீம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

'நாள் ஒன்றுக்கு 24 கோடி செலவு, 72 பேர் பலி'
140512153126_smoking_warning_graphic_sri

சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கைப் படங்களை கட்டாயப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக சிகரெட் கம்பனி வழக்கு தொடர்ந்துள்ளது

பொதுவாக இலங்கையில் சிகரெட் பாவனையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் சிகரெட் கம்பனிகளின் வியாபார உத்திகள் காரணமாக சிகரெட் பாவனை வீதம் அதிகரித்துள்ளதாகவும் ஏ.சி. ரஹீம் கூறினார்.

'அவர்கள் வடக்கு கிழக்கை பிரதான இலக்காகக் கொள்கிறார்கள், அவர்களுக்கு அங்கே ஒரு புது சந்தை உருவாகியிருப்பதனால் தான் அங்கு இப்போது சிகரெட் பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது' என்றார் ரஹீம்.

வடகிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் சிகரெட் பாவனை வீழ்ச்சியடைவதற்கு சிகரெட் கம்பனிகளின் உத்திகள் பற்றியும் சிகரெட் பாவனையினால் ஏற்படுகின்ற சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் பற்றியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியே காரணம் என்றும் அவர் கூறினார்.

புதிய தகவல்களின்படி, இலங்கையில் புகைத்தல் காரணமாக சராசரியாக ஒரு நாளைக்கு 72 பேர் உயிரிழப்பதாகக் கூறிய ஏ.சி. ரஹீம், நாள் ஒன்றுக்கு சுமார் 24 கோடி ரூபாவை சிகரெட்டுக்காக மக்கள் செலவிடுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் அதிகரிக்கும் பொருள்விலைகளுக்கு ஏற்ப சிகரெட்டுக்களின் விலைகள் அதிகரிப்பதில்லை என்றும் இதனால் அரசாங்கத்திற்கு பெருமளவு வரிவருமானம் இழக்கப்படுவதாகவும் அடிக் நிறுவனம் கூறுகின்றது.

உலகில் புகைத்தல் காரணமாக ஒவ்வொரு 6 செக்கென்டுகளுக்கும் ஒருவர் உயிரிழப்பதாகக் கூறியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம் புகைபொருட்கள் மீதான வரியை பெருமளவில் அதிகரிக்க வேண்டும் என்று நாடுகளைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/05/140531_tobacco_srilanka.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.