Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிங்களவர் வசமுள்ள 7,500 ஏக்கர் வயல் காணிகளை மீட்டுத்தாருங்கள்" விக்கியிடம் முல்லை மக்கள் கோரிக்கை

Featured Replies

mullativu%20land_CI.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய்,  கொக்குத்தொடுவாய் மற்றும் கருணாட்டுக்கேணி பகுதிகளிலுள்ள தமது சுமார் 7,500 ஏக்கர் வயல் மற்றும் தோட்டக் காணிகளை மீட்டுத்தருமாறு வட மாகாண முதலமைச்சரிடம்  தமது உறுதிகள், அனுமதிப்பத்திரங்கள் சகிதம் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

முல்லைத்தீவு பகுதி மக்களின் பிரச்சினை குறித்து அறிந்து கொள்ளுமுகமாக  வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை   முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்தார். 

இதன் ஒரு கட்டமாக கொக்கிளாய்,  கொக்குத்தொடுவாய் மற்றும் கருணாட்டுக்கேணி பகுதி விவசாயிகளை கொக்குத்தொடுவாய் தெற்கு பொது நோக்கு மண்டபத்தில் காலை 10.15 மணியளவில் முதலமைச்சர் சந்தித்தபோதே  தமது காணிகளை மீட்டுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கொக்கிளாய்,  கொக்குத்தொடுவாய் மற்றும் கருணாட்டுக்கேணி பகுதிகளிலுள்ள  தமது வயல் மற்றும் தோட்டக் காணியென சுமார் 7,500 ஏக்கர் காணிகளின் உரிமைகள் இரத்துச் செய்யப்பட்டு சிங்கள மக்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது. நாம் 83 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி இடம்பெயர்ந்த நிலையில் இப்பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டன. யுத்தம் முடிவுற்ற நிலையில் எமது பகுதிக்கு நாம் சென்றபோது  அங்கே சிங்கள குடியேற்றங்கள், பாடசாலைகள்,  பௌத்த விகாரை காணப்பட்டன. இந்நிலையில் எமது வயல் மற்றும் தோட்டக் காணிகளில் சிங்கள மக்கள் பயிர்செய்வதைக் கண்டோம்.

இந்நிலையில் 2013 ஏப்ரல் 10 ஆம் திகதி வெலிஓயாவுக்கு வந்த ஜனாதிபதி உறுதிகளை சிங்கள மக்களுக்கு வழங்கியுள்ளார்.

இது குறித்து விவசாய அமைப்பினர்,  கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் வெலிஓயா பிரதேச செயலரிடம் சென்று எமது காணிகளின் உரிமைகள் இரத்துச் செய்யப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதென  குறிப்பிட்ட வேளை, அவர் இக்காணிகள் மகாவலி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  நீங்கள் உறுதியை புதுப்பிக்கவில்லையென்பதால் மாற்றி கையளிக்கப்பட்டது எனப் பதிலளித்தார்.

எமது பகுதி 30 வருடமாக உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள நிலையில், எவ்வாறு நாம் புதுப்பிக்க முடியும் என விளக்கியதுடன் எமது காணிக்குரிய  உறுதிகள்,  அனுமதிப்பத்திரங்கள் எம்மிடம்  உள்ளன. எனவே காணிகளை மீட்டுத்தருமாறு வட மாகாண முதலமைச்சரிடம் கோரினர்.

இதற்கு ஆதாரமாக உறுதி மற்றும் அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை முதலமைச்சரிடம் விவசாயிகள்  தமது கோரிக்கை அடங்கிய மகஜர் சகிதம் கையளித்தனர்.

இதற்கு வட மாகாண முதலமைச்சர், இது இலகுவான காரியம் அல்ல. இந்த விவகாரம் குறித்து பலரை  சந்தித்துப் பேச வேண்டியுள்ளது. உடனடியாகத் தீர்க்க முடியாது. இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமென குறிப்பிட்டதாக  இதில் கலந்து கொண்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கதிர்காம சிவலோகேஸ்வரன் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107739/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.