Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெய்ப்பூரில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் 2.58 கோடி ஊழல் புகார்- கார்த்தி சிதம்பரம் உள்பட 8 பேர் மீது வழக்கு

Featured Replies

521xNxkarti_1945337g.jpg.pagespeed.ic.-0

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ரூ. 2.58 கோடி ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

மத்திய கிராம சுகாதார திட்டத்தின் (என்.ஆர்.எச்.எம்) கீழ் ஜெய்ப்பூரில் கடந்த 2010-11 ஆம் ஆண்டுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக டெண்டர் அளிக்கப்பட்டிருந்தது.

அது, அரசியல் தொடர்புகளின் காரணமாக ‘சிகித்சா ஹெல்த்கேர்’ எனும் நிறுவனத்துக்கு முறைகேடாக அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் ரூ. 2.58 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் ஜெய்ப்பூரின் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஜெய்ப்பூர் மாநகராட்சி முன்னாள் துணை மேயர் பங்கஜ் ஜோஷி, கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி இந்தப் புகாரை அளித்திருந்தார். இப்புகாரில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.ஏ.கான், சிகித்சா ஹெல்த்கேர் நிறுவனத்தின் இணை நிறுவனரும் முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகனுமான ரவி கிருஷ்ணா, அந்நிறுவனத்தின் இயக்குநர்களான முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், அந்நிறுவனத்தின் முன்னாள் முதன்மை அதிகாரி ஸ்வேதா மங்கல், என்.ஆர்.எச்.எம். முன்னாள் இயக்குநரும் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் முன்னாள் பொருளாதார ஆலோசகருமான ஷபி மாத்தேர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணை அதிகாரி சாவந்த் சிங் கூறுகையில், “துவக்க கட்ட விசாரணையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கருதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, மோசடி செய்ததாக ஐபிசி 420, பாதுகாப்பு ஆவணங்களை திருத்தியதாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 467, 471 மற்றும் 468, குற்றச் சதி செய்ததாக 120 பி ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது” என்றார்.

புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், “இதுபோன்ற டெண்டர் அளிக்கும் முடிவுகளை முதல்வர் எடுப்பதில்லை” என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் ‘தி இந்து’விடம் கூறுகையில், “ராஜஸ்தானில் ஆளும் பாஜகவின் உள்நோக்கம் காரணமாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை இதன் மீது விசாரணை நடத்த வேண்டும் எனில், அது மாநிலத்துக்கு வெளியே, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணையாக இருக்க வேண்டும்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “பாஜக மூத்த தலைவர் கீர்த்தி சௌமியா இந்தப் புகாரை கடந்த ஆண்டு எழுப்பினார்.

இதையடுத்து அவருக்கு நான் அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பினேன்” என்றார்.

 

ஊழல் வழக்கால் கார்த்தி சிதம்பரத்துக்கு சிக்கல்: 'தலைவர்' கனவுக்கு செக் வைக்கும் எதிர் கோஷ்டியினர்

 

 
xkarthi_1945730h.jpg.pagespeed.ic.OUtrKO
 

தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக கார்த்தி சிதம்பரம் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவர் மீது ராஜஸ்தான் சிபிசிஐடி போலீஸார் ஊழல் வழக்கு பதிவு செய்திருப்பது சட்டரீதியாக சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளரான பி.எஸ்.ஞானதேசிகன் உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், 38 இடங்களில் டெபாசிட்டை இழந்தது. தேர்தல் தோல்விக்கு ஞானதேசிகனே காரணம் என்று கூறி, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டனர்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வாசனின் ஆதரவாளர்களும் அறிக்கை வெளியிட்டனர். அதில், நாடு முழுவதும் காங்கிரஸ் தோல் விக்கு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என்று கூறியிருந்தனர். இந்த அறிக்கைப் போரால் தமிழக காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரத்தை கொண்டுவர, சிதம்பரம் அணியினர் முயற்சிப் பதாகவும், இதுபற்றி ராகுல் காந்தியிடம் பேசி, இளந்தலைவர் ஒருவரை தமிழகத்தில் நியமித்து கட்சியை வலுப்படுத்தலாம் என்று வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் அரசியல் வளர்ச் சிக்குத் தடையாக, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கார்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்ணா, ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட் மற்றும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் மீது ராஜஸ்தான் மாநில சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரவி கிருஷ்ணாவுக்கு சொந்தமான சிகித்சா ஹெல்த் கேர் என்ற நிறுவனம், ராஜஸ் தான் மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கியதில் ரூ.14 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது. சிகித்சா நிறுவனத்தில் கார்த்தி சிதம்பரமும் ஒரு இயக்குநர் என்பதால் அவர் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையறிந்த ப.சிதம்பரத்தின் எதிர்கோஷ்டியினர், கார்த்தி மீதான வழக்கு குறித்து மேலிடத்துக்கு புகார் அனுப்பத் தயாராகி வருகின்றனர். ஒரு சிலர் இந்த வழக்கு குறித்த தகவல்களை மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர். இது கார்த்தி சிதம்பரத்தின் அரசியல் வளர்ச்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என அவர்கள் கூறுகின்றனர்.

tamil hindu

ஊழல் வழக்கு குறித்து, கார்த்தி சிதம்பரத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘இந்த வழக்கு குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்ப வில்லை. வழக்கு விவகாரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் கவனித்துக் கொள்ளும்’’ என்று மட்டும் பதிலளித்தார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.