Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வங்கதேசத்தில் இந்திய அணி: ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்

Featured Replies

வங்கதேசத்தில் இந்திய அணி: ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்

ஜூன் 13, 2014.

கோல்கட்டா: மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க, ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி நேற்று வங்கதேசம் சென்றது.

இம்மாத இறுதியில் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 5 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இதற்கு தயாராகும் விதமாக, இந்திய அணி, வங்கதேசத்தில் மூன்று போட்டிகள் (ஜூன் 15, 17, 19) கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. தோனி, கோஹ்லி, அஷ்வின், ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி விளையாடுகிறது.

முதல் போட்டி மிர்புரில் நாளை நடக்கிறது. இதற்காக ரெய்னா தலைமையிலான இந்திய அணியினர் கோல்கட்டாவில் இருந்து விமானம் மூலம் வங்கதேசம் வந்தனர்.

கேப்டன் ரெய்னா, இதுவரை 9 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி உள்ளார். இதில் 4 வெற்றி, 5 தோல்வியை பெற்றுத் தந்தார்.

இந்திய அணி விவரம்: ரெய்னா (கேப்டன்), உத்தப்பா, ரகானே, புஜாரா, அம்பதி ராயுடு, மனோஜ் திவாரி, கேதர் ஜாதவ், விரிதிமன் சகா (விக்கெட் கீப்பர்), பர்வேஸ் ரசூல், அக்சர் படேல், வினய் குமார், உமேஷ் யாதவ், ஸ்டூவர்ட் பின்னி, மோகித் சர்மா, அமித் மிஸ்ரா.

http://sports.dinamalar.com/2014/06/1402679271/rainaindiacricket.html

  • தொடங்கியவர்

பட்டையை கிளப்புமா இளமை பட்டாளம்: இன்று முதலாவது ஒருநாள் போட்டி

ஜூன் 14, 2014.மிர்புர்: இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இதில், ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. தோனி, கோஹ்லி உள்ளிட்ட 7 சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டதால், ரெய்னா அணியை வழிநடத்துகிறார். முதல் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது.

 

இந்திய அணியை பொறுத்தவரை ஐ.பி.எல்., தொடருக்குப்பின் முதல் போட்டியில் பங்கேற்கிறது. ஐ.பி.எல்., தொடரில் 16 போட்டியில் விளையாடிய ரெய்னா 523 ரன்கள் குவித்தார். இந்த ‘பார்ம்’ இன்று கைகொடுக்கும். கடந்த ஆசிய கோப்பையில் கழற்றிவிடப்பட்ட இவர், இதில் ஜொலிப்பது அவசியம். ஐ.பி.எல்., தொடரில் அதிக (16 போட்டி, 660 ரன்கள்) ரன்கள் குவித்த ராபின் உத்தப்பா அசத்தலாம். ஆறு ஆண்டுக்குப்பின் கிடைத்த பொன்னான வாய்ப்பை இவர் தக்க வைப்பது நல்லது. 

 

புஜாரா விழிப்பாரா:

இவருடன் இணைந்து ரகானே வலுவான அடித்தளம் அமைப்பது அவசியம். டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற பெயர் எடுத்த புஜாரா, ஒரு நாள் போட்டிக்கு இதுதான் கடைசி வாய்ப்பு என்பதை உணர்ந்தால் நல்லது. ‘மிடில்–ஆர்டரில்’ மனோஜ் திவாரி, கேதர் ஜாதவ், ராயுடு இடையே களம் காண்பதில் போட்டி உள்ளது. அதே நேரத்தில் விக்கெட் கீப்பர் சகாவின் இடம் உறுதி.

 

மிஸ்ரா அசத்துவாரா:

பந்துவீச்சில் மோகித் சர்மா, உமேஷ் என இரண்டு வேகங்கள் உள்ளன. இதில் மோகித் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இம்மைதானம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால், அமித் மிஸ்ரா சுதாரிக்க வேண்டும். இதில் சாதித்து, இங்கிலாந்து தொடரில் புறக்கணித்த தேர்வாளர்களிடம் திறமை நிரூபிக்கலாம். இவருக்கு கைகொடுக்க அக்சர் படேல், பர்வேஸ் ரசூல் உள்ளனர்.

 

சாகிப் நம்பிக்கை:

சொந்த மண்ணில் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறிய சோகத்தில் வங்கதேச அணி உள்ளது. இதிலிருந்து மீள இந்த அணியினர் பொறுப்புடன் செயல்பட காத்திருக்கின்றனர். கேப்டன் ரகிம், ‘ஆல்–ரவுண்டர்’ சாகிப், தமிம் இக்பால் என பேட்டிங் வரிசை பலமாகவே உள்ளது. சுழலில் சோகக் காஜி, வேகத்தில் மொர்டசா தங்கள் பங்களிப்பை தர வேண்டும்.

 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு

தோனி, கோஹ்லி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாததால் தொடரின் மீது ரசிகர்கள் பார்வை திரும்புவது சந்தேகமே. இந்த நேரத்தில் உலக கோப்பை கால்பந்து தொடரும் நடப்பது பார்வையாளர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். இந்த காரணத்தினால் தொடரை நேரடியாக ஒளிபரப்ப எந்த ‘டிவி’ நிறுவனமும் முன்வரவில்லை. தற்போது ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

 

http://sports.dinamalar.com/2014/06/1402762052/rainaindiacricket.html

 

 

  • தொடங்கியவர்

இந்தியா அசத்தல் வெற்றி: வங்கதேசம் ஏமாற்றம்
ஜூன் 15, 2014.

 

மிர்புர்: வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது ஒருநாள் போட்டியில், உத்தப்பா, ரகானேவின் அரைசதம் கைகொடுக்க,  7 விக்கெட் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் வெற்றி பெற்றது.     

 

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. இந்திய அணியில் பர்வேஸ் ரசூல், அக்சர் படேல் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். ‘டாஸ்’ வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.                 

முஷ்பிகுர் அபாரம்: வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (0), மோமினுல் ஹேக் (6) ஏமாற்றினர். மற்றொரு துவக்க வீரர் அனாமுல் ஹேக் (44) அரைசத வாய்ப்பை இழந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (59)அரைசதம் அடித்தார்.

 

சாகிப் அரைசதம்: ‘மிடில்–ஆர்டரில்’ வந்த சாகிப் அல் ஹசன் (52), தன்பங்கிற்கு அரைசதம் அடிக்க அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பின் களமிறங்கிய மகமதுல்லா (41), நசிர் ஹொசைன் (22) ஓரளவு கைகொடுத்தனர். ஜியாவுர் ரஹ்மான் (2), மொர்டசா (18) நிலைக்கவில்லை.                 

வங்கதேச அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்தது. அப்துர் ரசாக் (16), அல்–அமின் ஹொசைன் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, அக்சர் படேல், பர்வேஸ் ரசூல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.  

          

சூப்பர் துவக்கம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா, அஜின்கியா ரகானே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய உத்தப்பா, ஒருநாள் அரங்கில் தனது 6வது அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்த போது உத்தப்பா (50) அவுட்டானார்.     

மழை குறுக்கீடு: இந்திய அணி 16.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின், இரண்டு மணி நேரத்துக்கு மேல், மீண்டும் போட்டி துவங்கியது. இந்திய அணியின் வெற்றிக்கு ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 26 ஓவரில் 150 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.      

எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு புஜாரா (0) ஏமாற்றினார். மறுமுனையில் அசத்திய ரகானே, தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். இவர், 64 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ரெய்னா, மகமதுல்லாவில் 25வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.     

 

இந்திய அணி 24.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா (15), அம்பதி ராயுடு (16) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் சாகிப் அல் ஹசன் 2 விக்கெட் வீழ்த்தினார்.     

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1–0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி மிர்புரில் நாளை (ஜூன் 17) நடக்கிறது.

 

 

http://sports.dinamalar.com/2014/06/1402853004/IndiaBangladeshOneDayInternationalCricket.html

  • தொடங்கியவர்

கோப்பை வென்றது இந்தியா: மழையால் 3வது போட்டி ரத்து
ஜூன் 19, 2014.

 

மிர்புர்: இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2–0 எனக் கைப்பற்றி, கோப்பை வென்றது.

 

வங்கதேசம் சென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி, முன்னிலை வகித்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மிர்புரில் நேற்று நடந்தது.

 

இந்திய அணியில் அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு வினய் குமார், மனோஜ் திவாரி சேர்க்கப்பட்டனர். வங்கதேச அணியில் ஜியாவுர் ரஹ்மானுக்கு பதிலாக சோஹக் காஜி இடம் பிடித்தார். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரெய்னா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

மழை குறுக்கீடு:

இப்போட்டியில் மழையின் பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்திய அணி 8.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்த போது முதலில் மழை வந்தது. பின், 12.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்த போது மீண்டும் மழை பெய்தது.

மழை நின்றபின் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் போட்டி நடந்தது. இந்திய அணி 34.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்திருந்த போது மூன்றாவது முறையாக மழை குறுக்கிட,  ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இரு அணிகளின் கேப்டன்கள் சம்மதத்துடன் இப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக அம்பயர்கள் தெரிவித்தனர்.

 

இதன்மூலம் இந்திய அணி 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி, கோப்பை வென்றது.

 

 

http://sports.dinamalar.com/2014/06/1403198415/rainaindiacricket.html


‘பின்னி’ எடுத்தார் பின்னி: தொடரை வென்றது இந்தியா: சுருண்டது வங்கதேசம்
ஜூன் 17, 2014.

 

மிர்புர்: பந்துவீச்சில் ‘பின்னி’ எடுத்த ஸ்டூவர்ட் பின்னி 6 விக்கெட் வீழ்த்த, இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2–0 என வென்றது.

 

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று மிர்புரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரகிம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். வங்கதேச அணியில் டஸ்கின் அகமது, மிதுன் அறிமுக வாய்ப்பு பெற்றனர்.

 

‘பேட்டிங்’ சொதப்பல்:

இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. ரகானே டக்–அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். மழை பெய்ததால், 5.2 ஓவரில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின் மீண்டும் போட்டி துவங்கியபோது, 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதன் பின் பந்துவீச வந்த டஸ்கின் ‘வேகத்தில்’ மிரட்டினார்.

 

இவரிடம் உத்தப்பா (14), ராயுடு (1), புஜாரா (11) என அடுத்தடுத்து சிக்கினர். சகா(4), மொர்டசா பந்தில் அவுட்டானார். ஓரளவுக்கு விளையாடிய கேப்டன் ரெய்னா (27) ரன் அவுட்டாக, கதை முடிந்தது. மீண்டும் பந்தை கையில் எடுத்த டஸ்கின் இம்முறை பின்னி (3), அமித் மிஸ்ராவை (4)வெளியேற்றி திருப்தி அடைந்தார். இந்திய அணி 25.3 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது.  வங்கதேச அணி சார்பில் டஸ்கின் அகமது 5, மொர்டசா 2 விக்கெட் வீழ்த்தினார்.

 

மோகித் ஆதிக்கம்:

எளிய இலக்கை துரத்திய வங்கதேச அணியை இந்திய பவுலர்கள் புரட்டி எடுத்தனர். மோகித் சர்மா பந்துவீச்சில் தமிம் இக்பால் (4), அனாமுல் (0)  நடையைக் கட்டினர். முஷ்பிகுர் (11), மிதுனை (26) பின்னி கவனித்து அனுப்பினார். சாகிப்  (4), ஜியார் (0) சத்தமில்லாமல் மோகித்திடம் சரணடைந்தனர்.

 

பின்னி மிரட்டல்:

கடைசி கட்டத்தில் பின்னி விஸ்வரூபம் எடுத்தார். இவரது பந்துவீச்சில் மொர்டசா (2), அல் அமின் (0), நாசிர் (5) அவுட்டாக, வங்கதேச அணி 17.4 ஓவரில் 58 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் பின்னி 6, மோகித் 4 விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2–0 என கைப்பற்றியது.

 

ஆட்டநாயகன் விருதை பின்னி வென்றார்.
105

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், நேற்று இந்திய அணி தனது குறைந்தபட்ச (105) ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன், 2007 உலக கோப்பை போட்டியில் (போர்ட் ஆப் ஸ்பெயின்) 191 ரன்னுக்கு சுருண்டு இருந்தது.

58

நேற்று 58 ரன்னுக்கு சுருண்ட வங்கதேச அணி, இந்தியாவுக்கு எதிராக, தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன், 2003ல் 76 ரன்னுக்கு சுருண்டு இருந்தது.

* கடந்த 2011, மார்ச் மாதம் இதே மிர்புர் மைதானத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 58 ரன்னுக்கு சுருண்ட வங்கதேச அணி, நேற்று மீண்டும் இதே ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இது தான் வங்கதேச அணியின் குறைந்த பட்ச ஸ்கோர்.

கும்ளே சாதனை தகர்ந்தது

நேற்று 4 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்த ஸ்டூவர்ட் பின்னி, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

தவிர, இந்திய அளவில் முதலிடத்தில் இருந்த கும்ளேயின் (12 ரன்னுக்கு, 6 விக்., எதிர்–வெ.இண்டீஸ், 1993) சாதனையும் தகர்ந்தது.

* உலகளவில் இலங்கையின் சமிந்தா வாஸ் (19/8 விக்.,), அப்ரிதி (பாக்.,–12/7), மெக்ராத் (ஆஸி.,–15/7), பிக்கெல் (ஆஸி.,–20/7), முரளிதரன் (இலங்கை–30/7), வக்கார் யூனிஸ் (பாக்.,–36/7), அக்குய்ப் ஜாவேத் (பாக்.,–37/7), டேவிஸ் (வெ.இண்டீஸ்–51/7) ஆகியோருக்கு அடுத்து, பின்னி சிறந்த பவுலிங்கை (4 ரன்/6 விக்.,) பதிவு செய்த, 8வது வீரர் ஆனார்.

 

 

‘சூப்பர்’ வாரிசு

கடந்த 1983ல் இந்திய அணி உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றவர் ‘ஆல்–ரவுண்டர்’ ரோஜர் பின்னி. இவரது மகன் தான் ஸ்டூவர்ட் பின்னி, 30. கர்நாடகாவைச் சேர்ந்த இவர், சமீபத்தில் தான் இந்திய அணியில் இடம் பெற்றார்.

 

http://sports.dinamalar.com/2014/06/1403026799/stuardbinnyindia.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.