Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இங்குள்ள 1,475 பாகிஸ்தான் அகதிகளை வளைத்துப் பிடிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

Featured Replies

பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் இலங்கையைத் தளமாகப் பயன்படுத்துகின்றனர் என்ற புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியமையை அடுத்து இலங்கையில் அகதிகளாகப் பதிந்துவிட்டு இங்கு தரித்திருக்கும் சுமார் ஆயிரத்து 475 பாகிஸ்தானியர்களைச் சுற்றி வளைத்து மடக்கும் நடவடிக்கை ஒன்றை இலங்கை குற்றவியல் புலனாய்வுப் பொலிஸாரின் (சி.ஐ.டியினரின்) உதவியுடன் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கடந்த வியாழனன்று சத்தம் சந்தடியின்றி ஆரம்பித்திருக்கின்றனர்.

 

இந்த நடவடிக்கையின் கீழ் குறிப்பிடப்படாத எண்ணிக்கை பாகிஸ்தானியர்கள் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தில் பதிந்துவிட்டு இங்கு தங்கியிருக்கும் 1,475 பாகிஸ்தானியர்களை வளைத்துக் காவலுக்குள் கொண்டு வருவதே திட்டம் என்றும் கூறப்பட்டது. இலங்கையில் செயற்படும் சில பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புகள் இருப்பதாக வெளியான புலனாய்வுத் தகவல்களை அடுத்தே இந்த நடவடிக்கை. எனினும் பாகிஸ்தானுடனான இலங்கையின் உறவைப் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ளும் விதத்தில் இந்த நடவடிக்கை சத்தம் சந்தடியின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் அறியவருகின்றது.

 

நீர்கொழும்பிலும், கிழக்கின் சில முஸ்லிம் பிரதேசங்களிலும் தங்கியிருந்து இந்த பாகிஸ்தானியர் செயற்படுகின்றனர் என்றும் கருதப்பட்டது. நீர்கொழும்பில் தங்கியிருந்தவர்களில் ஒரு தொகுதியினர் சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. இங்கு அகதி அந்தஸ்து கோருவோருக்கு பாதுகாப்பு உத்தரவாத அந்தஸ்தை அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் வழங்கி வருகின்றமையை இலங்கை அரசு கடுமையாக விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கையைத் தளமாகப் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே இந்தியாவினால் இலங்கைக்கு மிக உயர்ந்த மட்டத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கடந்த மாத இறுதியில் புதுடில்லியில் ஹைதராபாத் இல்லத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை, புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்த சமயம் இந்த விடயம் குறித்து இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அறிவுறுத்தினார் என்றும், அதனை புதிய தகவலாக ஆச்சரியத்துடன் செவிமடுத்த இலங்கை ஜனாதிபதி நாடு திரும்பியதும் இவ்விடயத்தைத் தாம் விசேடமாகக் கவனிப்பார் என்று அப்போது உறுதியளித்தார் என்றும் இப்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

 

அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தின் கொழும்பு அலுவலகப் பதிவுகளின்படி 2012 இல் ஆக 102 பாகிஸ்தானியர்களே இங்கு அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்திருந்தனர். கடந்த வருடம் அது 1,489 ஆகத் திடீரென உயர்ந்திருக்கின்றமையும் அதிகாரியின் கவலையை அதிகரிக்கச் செய்திருக்கின்றதாம்! இப்போது மேற்படி விஸா அனுமதியின்றி இங்கு தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை சுற்றி வளைத்து மடக்கிய பின்னர் அவர்களை நாடு கடத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் இந்தியப் பிரதமர் மோடி சுட்டிக் காட்டியே ஒரு விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்கிறார் என்பது புலனாகின்றது என அரசியல் விமர்சகர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார் 

 

malarum

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.