Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு : கருங்கல் அகழ்வை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பணிப்பு

Featured Replies

unnamed%20(17)(1).jpg
-எம்.றொசாந்த் 

தென்னிலங்கை கட்டுமான நிறுவனமொன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பன்றிவெட்டி பிரதேசத்தில் மேற்கொண்டு வரும் கருங்கல் அகழ்வு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலதிகமாக காணப்படுமாயின் குறித்த அகழ்வினை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  பணிப்புரை விடுத்தார். 

மேற்படி பகுதியில் அனுமதிகப்பட்டதற்கு மேலதிகமாக கருங்கல் அகழப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலினை தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சுற்றுச் சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (17) நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

குறித்த பகுதியில் 12 மீற்றர் ஆழத்திற்கு மட்டுமே கல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அகழ்வில் ஈடுபடும் நிறுவனம் 16 மீற்றர் ஆழத்திற்கு நீர் ஊற்று வரும் வரையில் கருங்கற்களை அகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இவ்வாறான கருங்கல் மற்றும் மணல் குவாறிகளை வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் கட்டுமான நிறுவனங்களுக்கு ஏன் வழங்கப்படவில்லையென ஆராயும்படியும் முதலமைச்சர் கோரியுள்ளார்.   

இதன்போது, 'கல் அகழப்பட்ட குழியில் மீன் வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என கல் அகழ்வில் ஈடுபடும் கட்டுமான நிறுவனம் கூறியிருந்தது. எனினும் அவ்வாறு செய்ய முடியாது எனவும் கல் அகழ்ந்த குழியினை மூடிவிடவேண்டும் எனவும் வடமாகாண  விவசாய அமைச்சர் குறித்த நிறுவனப் பிரதிநிதிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்

இதன்போது, துணுக்காய் பிரதேச செயலர் எஸ்.குணபாலன், வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா ஆகியோர் உடனிருந்தார்.
unnamed%20(15).jpg

tamilmirror

  • தொடங்கியவர்

இராணுவத்தின் உதவியுடன் காட்டுமரங்கள் வெட்டப்படுகின்றன; முதலமைச்சரிடம் மக்கள் புகார்

 

a1(2232).jpg
- எம்.றொசாந்த்  

முல்லைத்தீவில் இராணுவத்தின் உதவியுடன் பெருமளவான காட்டுமரங்கள் வெட்டப்பட்டு தென்னிலங்கைக்கு கொண்டுசெல்லப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கவனத்திற்கு  முல்லைத்தீவு மக்கள் கொண்டுவந்துள்ளனர். 

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை (17) விஜயம் மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் அங்குள்ள மக்களின் குறைகளை  கேட்டறிந்தனர்.

குறிப்பாக பாண்டியன்குளம், துணுக்காய், மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு உள்ளிட்ட பகுதி மக்களை இவர்கள் சந்தித்தனர்.  இதன்போது  மேற்படி விடயம் தொடர்பில் முதலமைச்சரின் கவனத்திற்கு  இம்மக்கள் கொண்டுவந்தனர். 

'அடிப்படை வாழ்வாதாரத் தொழிலாக விவசாயத்தை நம்பி இருக்கின்றோம். இந்நிலையில், படையினர் பெருமளவு நிலங்களையும் பண்ணைகளையும் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு அவற்றில் விவசாயம் செய்வதால், அவர்களின் உற்பத்திப் பொருட்கள் சந்தையில் மிகக்குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றது.

இதனால் மிகுந்த கஷ்டப்பட்டு விவசாயம் மேற்கொள்ளும் நாங்கள், அதற்குரிய இலாபங்களை அடைந்துகொள்ள முடியாதிருக்கிறது. 
அத்துடன், இந்திய வீட்டுத்திட்டம் உட்பட வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு தேவையான மணல் மற்றும் மரம் ஆகியவற்றை  பெற்றுக்கொள்ள முடியவில்லை. 

படையினரின் உதவியுடன் கனரக வாகனங்களில் பெருமளவு மணல் மற்றும் பெறுமதியான காட்டுமரங்கள் தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

மேலும் வீதிகள், வடிகால்கள், ஏற்று நீர்ப்பாசன கால்வாய்கள் போன்றவை புனரமைக்கப்படாமல் இருக்கின்றன' என இம்மக்கள் தெரிவித்தனர். 
மேலும், வீட்டுத்திட்டங்களை வழங்குவதற்கு புள்ளி அடிப்படையிலான (குடும்பத்திலுள்ள அங்கத்தவர் எண்ணிக்கைக்கு ஏற்ப முன்னுரிமை) முறைமை கையாளப்படும் நிலையில், போரில் பிள்ளைகளை இழந்திருக்கும் அல்லது பிள்ளைகள் புலம்பெயர் தேசங்களுக்குச் சென்றிருக்கும் நிலையில் தனியாக வாழும் வயதான பெற்றோர் வீடில்லாமல் அல்லல்படும் நிலை தொடர்பாகவும் இம்மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்த நிலையில், மக்களுடைய முறைப்பாடுகள் தொடர்பிலும்  குறிப்பாக வாழ்வாதார மேம்பாடு தொடர்பிலும்  வெளிநாட்டுத் தூதுவர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும், வடமாகாணசபையால் மேற்கொள்ளும்படும் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் தடையாகவிருப்பதாகவும்  அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் தங்கள் பிரச்சினைகளை  எழுத்து மூலமாக தனக்கு தெரியப்படுத்தும் பட்சத்தில் அப்பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்வேன் எனவும் அவர்  உறுதியளித்தார்.

இதன்போது, விவசாயம் மற்றும் கல்வி தொடர்பாக மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்படி உரிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பில் வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

a2(1783).jpg

tamilmirror

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.