Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆர்கானிக் பால்: அமோக வரவேற்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாயன உரங்கள் அல்லாத இயற்கை முறையில் பயிரிடப்படும் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உண்ண வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ள நிலையில்,  இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஆர்கானிக் பாலுக்கும் தற்போது அமோக வரவேற்பு கிடைக்கத் தொடங்கி உள்ளது.

இயற்கையான பாலுக்கும், உணவுப் பொருள்களுக்கும் என்றும் தனி மரியாதை உண்டு. இயற்கையான முறையில் மூலப் பொருளை உற்பத்தி செய்து புதிய தொழில்நுட்பங்களில் அவற்றை உணவுப் பொருளாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஆரோக்கியமான உணவுக்கு அடிப்படை.

அதைக் கருத்தில்கொண்டு சென்னையை அடுத்த கொடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பாரம்பரிய மற்றும் இயற்கை உணவு பதப்படுத்துதல், தரம் மற்றும் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கம் ஜூன் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் சிவக்குமார், சித்த மருத்துவர் கு.சிவராமன் ஆகியோர் தலைமையில் தொடங்கிய இக்கருத்தரங்கில் மாணவர்கள், பேராசிரியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

arkanik03.jpg

இரண்டாவது நாள் கருத்தரங்கில் பேசிய அக்ஷயாகல்பா பால் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜி.என்.ரெட்டி, "பால் கறக்கும் மாடுகளுக்கும் அதிக பால் சுரப்புக்காக ஹார்மோன் ஊசிகள் போடுவதும், மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு ஊசிகளை போடுவதால அந்த மருந்து மாடுகளோட உடம்புல தங்கிடுது. அந்த மாடுகள்ல இருந்து பாலை கறக்கும்போது மருந்தும் கலந்தே வருது.

arkanik-gn%20reddy.jpgஇதை தவிர்ப்பதற்காக இயற்கை முறையில் (ஆர்கானிக்) தயார் செய்யப்படுகிற பாலை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து பெங்களூர் சிட்டியில் விற்பனை செய்து வருகிறோம். நகரப் பகுதிகளில் உள்ள மக்களிடம் ஆர்கானிக் பால் பற்றிய விழிப்புணர்வு இருப்பதால் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் லிட்டர் பால் வரை விற்பனை செய்து வருகிறோம்.

கர்நாடக மாநிலம், திப்டூரில் பால் பதப்படுத்தும் நிலையமும், சன்னநாராயணபட்னாவில் 24 ஏக்கர் நிலமும் வாங்கியுள்ளோம். ஹார்மோன் ஊசிகள், நோய் எதிர்ப்புச் சக்திக்கு செயற்கையான மருந்து, ஊசிகள் பயன்படுத்தாத மாடுகளிலிருந்து கறக்கும் பாலையே கொள்முதல் செய்கிறோம். மாடுகளுக்கு 15 வகையான தீவனப் பயிர்களை விவசாயிகளுக்கு பரிந்துரை செய்கிறோம். விவசாயிகள் அவர்களின் நிலத்தில் வளர்த்து மாடுகளுக்கு கொடுக்க வேண்டும்.

இந்த முறையிலே ஒரு நாளைக்கு 10 லிட்டர் பால் வரை ஒரு மாட்டிலிருந்து கறந்து வருகிறார்கள். தீவனங்கள்ல செய்யப்படுற கேக்ஸ், மாவு என வேறெந்த தீவனங்களையும் ஊக்கப்படுத்துவதில்லை. பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அதைப் பதப்படுத்தி, வண்டிகள் மூலம் கொண்டு வந்து பெங்களூர் சிட்டியில் 1 லிட்டர் 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதன் சுவையும், தரமும் பாலில் தனித்து தெரியும். இப்போ ஒரு நாளைக்கு 1 லட்சம் லிட்டர் பால் என்ற இலக்கில் ஆர்கானிக் பாலை பிரபலப்படுத்தி வருகிறோம்" என்றார்.

arkanik02%282%29.jpg

காப்புரிமை மற்றும் ட்ரேட் மார்க் குறித்து ஆலோசனை வழங்கி வரும் மஜூம்தார் அன்கோ நிறுவன செயல் அதிகாரி ரவி பேசும்பொழுது "ஒவ்வொரு பொருளுக்கும் காப்புரிமை என்பது இன்றைய வர்த்தக உலகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் உணவுப் பொருள்களுக்கு புவிசார் குறியீட்டை பெறுவது அந்தப் பகுதி மக்களுக்கு வாழ்வாதாரத்தை பெருக்கக்கூடிய ஒன்று. தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மணப்பாறை முறுக்கு, ராமநாதபுரம் நுதல், ஆற்காடு மக்கன் பேடா போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு பெறப்படாமல் உள்ளது. தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாய், திருநெல்வேலி அல்வாவுக்கும் புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் இருக்கிறது.

arkanik-ravi.jpgஏற்கெனவே மதுரை மல்லி, காஞ்சிப் பட்டுச் சேலை, கோவை வெட்கிரைண்டர், சேலம் பட்டு வேஷ்டி, நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, தஞ்சாவூர் தட்டுக்கும் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதேபோன்று ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்பு வாய்ந்த உணவுப்பொருளோ, பயன்படுத்தும் பொருட்களோ இருக்கும்.

அவை ஒவ்வொன்றுக்கும் புவிசார் குறியீடு பெற்றால் இ-காமர்ஸில் எளிதாக விற்கலாம். பப்ளிசிட்டி கிடைக்கும். உங்கள் பகுதி பொருளுக்கு வேறொரு பகுதியோ, மாநிலமோ, நாடோ உரிமைக் கோர முடியாது. வெளிநாடுகளுக்கும் எளிதாக ஏற்றுமதி செய்யலாம். இந்த குறியீட்டை பெற அந்த பகுதியில் 10, 20 பேர் சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் விண்ணபிக்கலாம். சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகம் கிண்டியில் உள்ளது. அங்கு பதிவு செய்து குறியீட்டை பெறலாம்" என்றார்.

arkanik-ismail.jpgஇயற்கை வேளாண் நிபுணர் சுல்தான் அகமது இஸ்மாயில் பேசும்பொழுது, "உப்பு சாப்பிட்டா, நீங்க என்ன பண்ணுவீங்க? தண்ணி குடிக்கணும்னு தோணும். அதுபோலத்தான் மண்ணுக்கும். ரசாயன உரங்களை கொட்டி மண்ணை உப்பா மாத்திட்டோம். இப்போ எவ்வளவு தண்ணி கொடுத்தாலும் பத்த மாட்டேங்குது.

விவசாயத்துக்கு தண்ணி இல்லன்னு கூட்டம் போட்டு விவாதிச்சிட்டு இருக்கோம். நமக்குத் தேவை மண்நலம் தான். மண் நலத்துக்கு விவசாயம் செய்ற நிலத்துல மண்புழுக்கள் இருக்கணும். அதுக்கு மாட்டின் சாண கழிவுகளிலிருந்தும், குப்பைகளிலிருந்தும் மண்புழு உரத்தைத் தயாரிக்க முடியும். இது விவசாயிகளுக்கு ரசாயன உரச்செலவை குறைக்கிறதில்லாம, மண்ணையும் வளப்படுத்துது" என்றவர்,

"வாழைப்பழத்தின் முனையில பச்சையா இருந்து, நடுவுல மஞ்சளா இருந்தா அந்த பழத்தை வாங்காதீங்க. அது கல் வெச்சு பழுக்க வெச்சது. எந்த நிறமிகள சேக்காத உணவு பொருள்கள வாங்கி சாப்பிடுங்க" என்று அறிவுரையும் சொன்னார்.

-த. ஜெயகுமார்

படங்கள்: க. பாலாஜி

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=29567

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.