Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூந்தளிராட, பொன்மலர் சூட (பன்னீர் புஷ்பங்கள், 1981)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

download-14.jpg

 

 

 

இளையராஜாவின் இசைமொழி எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. பரவலாகக் கேட்கப்படும் பாடல்களை நானும் பரவலாகக் கேட்டிருக்கிறேன். பாடிக்கொண்டு திரிந்திருக்கிறேன். இந்த பரிச்சயம்தான் என்னால், என்னைப் போன்ற உங்களால், இளையராஜாவின் பாடல்களை, இசைத்துணுக்குகளை, (எடுத்துக்காட்டாக) லுட்டோஸ்லாவ்கியின் இசையைவிட வெகு இயல்பாக ஏற்றுக்கொள்ள வைக்கிறது.

 

Forget all. பின்பு நான் இசையைக் கோர்க்க ஆரம்பித்ததிலிருநது இளையராஜாவின் பாதிப்பு ஏதுமில்லாமல் இயல்பாகவே விலகியிருக்கிறேன். இசையில் என் தொடக்கப்புள்ளி வேறு, என் கவனம், பிரச்சினைகள், வழிமுறைகள் எல்லாம் எனக்கானவை. தனியானவை. எடுத்துக்காட்டாக நான் ‘ட்யூன்’களாக யோசிப்பதில்லை. டியூன் என் இசையின் அடிப்படை அலகு அல்ல.

 

ஆக என் வழியில் நான் இசை பற்றிய ஒரு புரிதலை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். இப்போது நான் ‘பூந்தளிராட’ போன்று ஒரு பாட்டைக் கேட்கும்போது, படைப்பாளியின் காலணிகளைப் போட்டுக்கொண்டு பாட்டுக்குள் உலவத்தோன்றுகிறது.

 

 

ஊட்டி. கான்வெண்ட். பதின்ம வயதுப் பையன் – பெண். காதல்.

 

டைரக்டர் சொன்ன சிட்சுவேசனில் முக்கிய வார்த்தைகள் இவைதான். ஊட்டியை சுற்றிக் காட்டுவார்கள். அந்தப் பையனுக்கும் பெண்ணுக்கும் காதல் அரும்புவது, பதின்ம வயதின் குறும்பு, துடிப்பு.

 

பாட்டில் காதலின் அழகு, இனிமை, நளினம் இருக்க வேண்டும். + சிறு வயதின் தேடல்,  enegry, துள்ளல், fun, excitement.

 

விளையாட்டு.

 

இளையராஜா விளையாடிவிட்டார் icon_smile.gif

 

 

 

பாட்டில் புதுமையை (மேற்குறிப்பிட்ட காராணங்களுக்காக) கொண்டுவர புது வகையான, exciting/fun சப்தங்களைச் சேர்த்திருக்கிறார். preludeன் தொடக்கத்தில் வரும் தாளம், கீபோர்ட், கிட்டாரின் குறிப்பிட்ட ஒலிகள், அவற்றின் சவுண்ட் எஃபெக்ட்ஸ்.

 

அதற்காக முழுக்க முழுக்க experimentalஆன சப்தங்களையே போட்டு நிரப்ப முடியாது. (One flew over the cuckoo’s nestன் தொடக்க இசை என்றால் செய்யலாம்) பாட்டு standardஆனதாக இருக்க வேண்டும். அதனால் புதுமையான ஓசை, கோர்வைகளுடன், வழமையான, அழகான – இனிமையான – அதே சமயம் safeஆன ஓசை/துணுக்குகளையும் சேர்த்திருக்கிறார். தேவையான அளவு துடிப்பான ரிதம் கித்தார், ட்ரம்கள், புல்லாங்குழல், பியானோ…

 

Preludeன் ஆரம்பத்தில் மிகப்புதுமை. இந்த மாதிரியான கற்பனை ஒரு குறிப்பிட்ட மனநிலையிலிருந்து திடீரென உதிப்பது. சுரீரென வருமே கோபம், அது போல, உள்ளிருந்த ஒரு குவிந்த கணத்தில் கட்டுப்பாடில்லாமல், அதே தம்மை இழுத்துக்கொண்டு வருவது. ஆழ்ந்த சிந்தனையில் ஒரு புதிரை விடுவிக்கையில் நடுவில் கிடக்கும் ஒருநிலை.

 

அது பாட்டில் முதல் 10 நொடிதான் (இந்த வீடியோவில் 20 நொடி வரை). அதற்குள் prelude 2 அடுக்குகளைத் தாண்டி வந்துவிட்டது. பொங்கிவரும் அருவி இப்போது தெளிவான ஆறாகும் நேரம். இப்போது ட்ரம்ஸ் எல்லாம் சேர்ந்து கொண்டு ஒரு நேர்த்தியான அடுக்கு. இதைப் படைத்தது பொங்கி வரும் மனநிலையல்ல. அமைதியான, யோசிக்கும் இசைஞனின் மூளை. Balance.

 

பூந்தளிராட…

 

பல்லவி ஆரம்பிக்கிறது. ஆண் குரல்.

 

பூந்தளிராட…

 

அழகாக, வருடும் தொனியுடன் ஆரம்பிக்கிறது. இது ஒரு கதை சொல்பவனின் குரல். ‘பூந்தளிராட, பொன் மலர் சூட’ என ஒரு வர்ணனையுடன் ஆரம்பிக்கிறது. வர்ணனையாக இருப்பதால்தானோ என்னவோ பாடகர் கதை சொல்பவராகிறார். இவர் 3ம் நபர். காட்சியில் வரும் காதலனல்லர்.

 

அஅஅ ஒஒஒ அஅஅ ஒஒஒ கோரஸ் இளையராஜாவின் குறும்பு. இது நான் குறிப்பிடும் experimental element. அவ்வப்போது வழக்கமான கோரஸாகவும் மாறும். balance. இதே போல முதல் interludeல் (இணைப்பிசை) நடுவில் அவர்கள் பியானோ வாசிக்கும் காட்சி. அதில் வரும் பியானோவின் ஓசை அந்த காலகட்டத்தில் வந்த கீபோர்டில் வினோதமான sound effectஉடன். 1981ல் அது மிகப்புதுமையாக இருந்திருக்கும். உடனே அழகான, ஆனால் அவ்வளவு வினோதமில்லாத துணுக்குகளின் தொடர்ச்சி.

 

காதலை ஏற்றும் காலையின் காற்றும்…

 

நாயகியின் குரல் பாட்டில் முதன்முறையாக ஒலிக்கிறது. இது மூன்றாம் நபரின் குரலல்ல. காதலில் கிறங்கும் பெண்ணின் குரல். personal. intimate.

 

கோடிகள் ஆசை கூடிய போது…

 

இந்த ஆண் குரல் இனி மூன்றாம் நபரின் குரலல்ல. வர்ணனை இல்லை. ஒரு வேளை சரணத்தின் டியூன் இதற்கு ஒத்துழைக்கிறதோ? ஏன் பல்லவியில் இந்த பர்ஸனல் டச் இல்லை?

 

பூந்தளிராட…

 

பெண் குரல் முதல்முறையாகப் பல்லவியின் வரிகளைப் பாடுகிறது. அதே வர்ணனைப் பல்லவி, ஆனால் இது அந்த சின்னப் பெண்ணின் குரல். யாரும் கதை சொல்லவில்லை. அவள் தன் காதலனுடன் வாஞ்சை கொண்டிருக்கிறாள்.

 

காட்சியிலும் இசையிலும் இது வரை நிறைய விளையாட்டு. அஅஅ ஒஒஒ. ஆனால் ஒரு இசைகோர்ப்பவருக்கு இரண்டு melodic lineகளைக் கைகள் கோர்த்து ஆடவிடுவது போல் அலாதியான இன்பம் தரும் விளையாட்டு ஏதுமில்லை. இரண்டாவது இணைப்பிசையில் கித்தாரும் போஸும் உச்சஸ்தாயியிலும் கீ்ழ்ஸ்தாயியிலும் கைகள் பிணைத்து காதல் நடனம் புரிகின்றன. (ரயில் காட்சி). கண்கள் பார்த்துக்கொள்கின்றன. உள்ளம் வரை ஊடுருவும் பார்வைகள்.

 

(3:09) காதல் பருவம் முடிந்தது. இளையராஜா மணம் முடித்து வைக்கிறார். ஊட்டி. கான்வெண்ட். எதோ சர்ச்சில் திருமணம் நடக்கிறது.

3.26 தேனிலவு ஆரம்பம். bassல் புதுப்புது அனுபவங்கள். புல்லாங்குழலில் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன.

 

இளையராஜாவின் continuity பிரமிக்கத்தக்கது. தொடர்ச்சியான இசை-மனதிலிருந்து எழும் தொடர் வாசங்கள். வெட்டி ஒட்டி சரிபார்க்கப்படாதவை. இயல்பான நடை. மோஸார்ட்டுடையது போல. (ரஹ்மானுடைய தொடர்ச்சியை பெத்தோவனுடயதுடன் ஒப்பிடலாம்). சுஜாதாவின் நடை போல.

 

ஆனால் இந்த தொடர்ச்சிக்குப் பின்னால் லாஜிக் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு ப்ரெலூடிலோ, இண்டர்லூடிலோ அடுத்தடுத்த துணுக்குகள் எந்த அடிப்படையில் பிணைக்கப் பட்டுள்ளன என்பதற்கு விடை ஏதும் கிடைக்காது. ஸ்டூடியோவில் இசைஞர்கள் கிட்டார், புல்லாங்குழல், வயலின் என வைத்துக் கொண்டு காத்திருப்பது காரணமாக இருக்கலாம். resource management. ஆளுக்கொரு பீஸ் போட்டு இந்தாங்க புடிச்சுக்கங்கன்னு கொடுப்பதாயிருக்கலாம்.

 

 

இரண்டாவது இண்டர்லூட் தாண்டி கடைசி சரணத்தை நான் கேட்பதில்லை. தமிழ்ப்பாடல்களில் இரண்டாவது சரணத்தில் ஒன்றும் புதிதாக இருப்பதில்லை, வரிகளைத் தவிற. அதே டியூன், அதே ஃபில்லிங்க் துணுக்குகள்.

 

பூமலர்த் தூவும் பூ மரம் நாளும்…

ஆண் குரலின் தொனியில் தெள்ளத்தெளிவான மாற்றம். இது அந்த விடலைப் பையன்தான்.

 

பூமழை தூவும் பொன்னிற மேகம்…

பெண் குரல், அன்பில் திளைத்திருக்கிறார்.

 

ஏங்கிடுதே.. (ஆண் ஏங்குகிறார், ஆனால்)

என் ஆசை எண்ணம் — இறங்கி பூலோகத்துக்கு வந்துவிடுகிறார்.

 

(ஆண்) பூந்தளிராட…

ஹனிமூன் முடிந்துவிட்டது. ஊர் திரும்ப ரயிலேறியாச்சி.

 

(பெண்) சிந்தும் பனி வாடைக்காற்று…

மனதெல்லாம் பூரிப்பு. கணவனின் தோளில் தலை சாய்கிறார். ரயில் கிளம்பிவிட்டது.

http://malaigal.com/?cat=267

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் மகிமைகள்

 

 

ilayaraja.jpg

நூறாவது நாள் திரைப்படம் குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. தமிழில் வெளியான குறிப்பிடத்தக்க சில த்ரில்லர்களில் முக்கியமான திரைப்படம். அப்படத்திற்கு ரீரிக்கார்டிங் செய்த கதையை இயக்குனர் மணிவண்ணன் சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட கருத்தரங்கு ஒன்றில் பகிர்ந்துகொண்டார். ''நூறுவாது நாள் படத்தின் மொத்த ரீரிகார்டிங்கையும் வெறும் அரைநாளில் செய்துமுடித்தாராம் இளையராஜா!'' அன்றைய தினம் அதே ஸ்டுடியோவிற்கு டாகுமென்ட்ரி ஒன்றின் ரிகாரிடிங்குக்காக வந்திருந்த வெளிநாட்டு இயக்குனர் ஒருவர் இதைகேள்விப்பட்டு அசந்துபோய் இளையராஜாவை பாராட்டிவிட்டு சென்றாராம்! அந்தப்படத்தின் பாடல்களைவிட பிண்னனி இசைதான் காலத்தை கடந்து இன்றளவும் பேசப்படுகிறது. 

சிகப்பு ரோஜாக்கள் படத்தை பற்றியும் ஒரு தகவல் கிடைத்தது. இப்படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டதாம்!

இதையெல்லாம் கேட்கும்போது இளையராஜா குறித்து ஒரு அமானுஷ்யமான பிரமை உண்டாவதை தவிர்க்க முடியவில்லை. ஏன் என்றால் சமகால இசையமைப்பாளர்கள் ஒரே ஒருபாடலுக்கு ட்யூன் போட பல ஆண்டுகள் எடுத்துக்கொள்வதையும் , அதிலும் எனக்கு மிட்நைட்டில்தான் ட்யூன் போடவரும், அமெரிக்காவில்தான் பாடவரும் என சீன் போடுவதையும், பல லட்சம் செலவில் லண்டன்,ஆஸ்திரேலியா,சுவிட்ஸர்லாந்துக்கெல்லாம் போய் ரீரிகார்டிங் செய்வதையும் பார்க்கிற இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் இளையராஜா குறித்த இந்த தகவல்கள் ரொம்பவே ஆச்சர்யமுட்டுபவைதான்.

இந்த ஆச்சர்யங்களுக்கு மேலும் வலுசேர்ப்பதைப்போல அண்மையில் வெளியிடப்பட்ட தோனி திரைப்பட பாடல்வெளியீட்டுவிழாவில் நடிகர் நாசர் ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். 

நாசர் தயாரித்து இயக்கி நடித்த அவதாரம் திரைப்படத்திற்கான பாடல்கள் மற்றும் பின்னனி இசை உருவான விதம் குறித்து கூறினார் நாசர். அவதாரம் திரைப்படத்தினை தொடங்குவதற்கு முன்பு ஒருநாள். இளையராஜாவிடம் ‘’சார் இதுமாதிரி கூத்துக்கலைஞர்கள் பத்தி ஒருபடம் பண்றேன்.. நீங்க இசையமைக்கணும்’’ என்றதும் .. ‘’பார்ப்போம்’’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் ராஜா. கிட்டத்தட்ட படத்தின் அத்தனை காட்சிகளையும் எடுத்துமுடித்துவிட்டு மீண்டும் இளையராஜாவை அணுகியபோது அவர் படத்தை பார்த்துவிட்டு ஓக்கேடா அருமையா இருக்கு நாளைக்கு ரெகார்டிங் என சொல்லியிருக்கிறார். 

கையில் பணமில்லாத நாசர் இப்படி திடீர்னு சொன்னா.. ஒருவாரம் கழிச்சி என மண்டையை சொரிய.. அவருடைய சிக்கலை புரிந்துகொண்டு தன் செலவிலேயே ரீரிகார்டிங்கிற்கும் பாடல் சேர்ப்புக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். அதோடு படத்தின் குறிப்பிட்ட ஒரு இடத்தினை சொல்லி இந்த இடத்தில் ஒரு பாட்டு வச்சா ரொம்ப நல்லாருக்கும்.. (படம் பார்த்த அரைமணிநேரத்தில்) ட்யூன் போட்டுட்டேன் கேக்கறீயா என சொல்லி.. தன்னுடைய ஹார்மோனியத்தில் ‘’தந்தனனா தான னான தான னான நா!’’ என கட்டைகுரலில் சுரத்தே இல்லாமல் பாட.. நாசருக்கு கிலியாகிவிட்டது. 

பாட்டு ரொம்ப மொக்கையா இருக்கும்போலருக்கே.. என நினைத்தவர்.. இளையராஜாவிடம் எப்படி இதை சொல்வது என்பது புரியாமல் அப்படியே நின்றிருக்கிறார். சரி நாசர் நீ நாளைக்கு காலைல வா வேலைய தொடங்கிருவோம்.. என திருப்பி அனுப்பியுள்ளார். 

அடுத்த நாள் அந்த ட்யூன் ரொம்ப மொக்கையா இருக்கு.. வேற போட சொல்லணும் , இன்னைக்கு ட்யூன் டிஸ்கசன்ல அவரை ஒரு ஆட்டு ஆட்டிடணும் என்கிற வெறியோடு இளையராஜாவின் வீட்டுக்கு போகிறார் நாசர். இளையராஜா தன் வீட்டில் தனிமையில் அமர்ந்திருக்க நாசர் உள்ளே நுழைகிறார். உட்காருங்க என்று சொல்லிவிட்டு ஒரு சாக்லேட்டை அவருக்கு கொடுத்துவிட்டு மீண்டும் எதையோ எழுத ஆரம்பிக்கிறார் இளையராஜா.. ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல வேக வேகமாக இசைக்குறிப்புகளை எழுதி க்கொண்டேயிருக்க.. அரைமணிநேரம் ஒருமணிநேரமாகிவிட்டது. நாசர் பொறுமையிழந்து திட்டிவிடலாம் என்று நினைக்கும்போது.. சரிவாங்க ரெகார்டிங் போவோம்.. என்று சொல்ல நாசருக்கு ஒன்றுமே புரியல.. 

ரெகார்டிங் ரூமில் எல்லாமே தயார். பாடகர்கள் வந்திருக்கின்றனர்.. இசைக்கலைஞர்கள் காத்திருக்கின்றனர். நாசர் அந்த ட்யூன் வேண்டாம் என்று சொல்ல நினைத்துக்கொண்டிருக்க.. ஒரு மேஜிக் நடக்கிறது.. இளையராஜா இசைக்கலைஞர்களை பார்த்து தன் கைகளை தூக்கி இறக்க.. தானத்தந்த தானத்தந்தா.. தானத்தந்த தானத்தந்தா.. அந்த இசை..... எங்கும் நிறைய நாசர் அப்படியே சிலிர்த்துப்போய் அந்த இடத்திலேயே ஸ்தம்பித்து நின்றாராம்! அதே நாளில் மொத்தபடத்திற்குமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தையும் செய்துமுடித்து அசத்தினாராம் ராஜா! (பாடல்களை அவரே எழுதிவிட்டார் என்பது கூடுதல் தகவல்)

(அந்த மேஜிக்கை நீங்களும் உணருங்க!)

அதே தோனி பட இசைவெளியீட்டு விழாவில் பிரகாஷ்ராஜ் ஒரு புதுமையை செய்துகாட்டினார். ஒரு சீரியஸான காட்சி முதலில் போட்டுக்காட்டப்பட்டது.. பின்னணி இசை சேர்க்காமல். உடனடியாக இளையராஜாவின் பின்னணி இசையோடு போட்டுக்காட்டியபோதுதான் ஒன்று புரிந்தது.. ஏன் இந்த தமிழர்கள் அந்த மனிதரை கடவுளாக வழிபடுகின்றனர் என்பது! பிரமாதம் என்று சொல்லுவது சரியாக இருக்காது. அதை விவரிக்கும் வார்த்தைகள் என்னிடம் இல்லை!

விழாவில் பேசிய பலரும் ஒருகுறிப்பிட்ட பிரச்சனையை முன்வைத்து பேசினர். இன்றைக்கு திரையுலகம் சந்தித்துவரும் பெரிய சிக்கல்களில் ஒன்று புரொடக்சனுக்காக எடுத்துக்கொள்ளும் கால அளவு.. சமகால இசையமைப்பாளர்கள் அனைவருமே ஒரு பாடலுக்கு கம்போசிங் செய்யவே வருடக்கணக்கில் நாட்களை எடுத்துக்கொள்ளுவதை பெருமை பீத்தலாகவே செய்துகொண்டிருக்கின்றனர். பின்னணி இசை சேர்க்க லண்டனுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்வது இன்னும் மோசம். மணிவண்ணன் ஒருகூட்டத்தில் சொன்னதுதான்.. புதிய தொழில்நுட்பம் நம்முடைய உழைப்பு நேரத்தை செலவை குறைக்கவேண்டுமே தவிர அது இருக்கிற வேலையை நேரத்தை அதிகமாக்க கூடாது என்பதுதான்! 

வெறும் ஐந்தே பேரை வைத்துக்கொண்டு உயிரை உலுக்கும் இசையை சிகப்பு ரோஜாக்களில் கொடுக்க முடிகிற இளையராஜா மாதிரியான உன்னதமான கலைஞர்கள்தான் இன்றைய சினிமாவுக்கு தேவையே தவிர ஆண்டுகணக்கில் யோசித்து மொக்கையான இசையை கொடுக்கிற பீட்டர்கள் அல்ல!

http://www.athishaonline.com/2012/02/blog-post.html

இளையராஜாவின் இசை நினைவோ ஒரு பறவை HDயில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.