Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – சிறிலங்கா அதிபருக்கு விமல் வீரவன்ச எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

VIMAL_WEERAWASA.jpg

காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்தி, அண்மையில் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவித்தலினால், சிறிலங்கா அரசாங்கம் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். 

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிமுடுவதை அனுமதிக்கும் இந்த சிறப்பு வர்த்தமானியில் திருத்தம் செய்யுமாறு கோரி, அவர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 

“இந்த சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின் மூலம், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய மூன்று நிபுணர்கள், ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதனால், வெளிநாட்டுத் தலையீடுகள் ஏற்படும். 

ஒட்டுமொத்த அனைத்துலக நீதிமன்ற முறையே பக்கச்சார்பானது. 

ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று பேரும் சுதந்திரமானவர்கள் அல்ல. 

இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எவர் அறிவுறுத்தியிருந்தாலும், இது ஆபத்தானது. 

மூன்று அனைத்துலக நிபுணர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால், நிறைய பிரச்சினைகள் உருவாகும். 

சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை நியாயப்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, மூன்று நிபுணர்கள் அடங்கிய குழுவை சிறிலங்கா அரசாங்கம் நியமித்தமை தகுதியில்லாத நடவடிக்கை என்று, சிறிலங்காவை ஆளும் கூட்டணியின் மற்றொரு பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் குற்றம்சாட்டியுள்ளது. 

இதுதொடர்பாக, கருத்து வெளியிட்டுள்ள,, ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான நிசாந்த சிறிவர்ணசிங்க, 

இந்தக் குழுவை நியமித்ததன் மூலம், இதுவரையிலும் கொண்டிருந்த நிலைப்பாடு, கொள்கை ஆகியவற்றை சிறிலங்கா அரசாங்கம் மீறியுள்ளது. 

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வெளியார் தலையீடுகளுக்கு இடமளிக்காது இருப்பதே அரசாங்கத்தில் நிலைப்பாடாக இருந்தது. 

இவ்வாறான விடயங்களை ஆராய்வதற்காக சட்டரீதியான மற்றும் நீதிமன்ற பொறிமுறை தம்மிடம் இருப்பதனால் வெளியாரின் தலையீடு அவசியமற்றது என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தது. 

இந்நிலையில், வெளிநாடுகளை ச்சேர்ந்த நிபுணர்களை நியமித்ததன் ஊடாக சிறிலங்கா அரசாங்கம் இதுவரையிலும் கடைப்பிடித்து வந்த கொள்கை மற்றும் நிலைப்பாட்டை மீறியுள்ளது. 

இந்த நியமனம் தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளியான எங்களுடைய கட்சிக்கு எவ்விதத்திலும் தெளிவுபடுத்தவில்லை. 

படையினருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அவற்றை ஜாதிக ஹெல உறுமய கடுமையாக எதிர்க்கும். 

அதேபோல, ஆலோசனை வழங்குவதற்காக வெளிநாட்டு நிபுணர்கள் மூவரை நியமித்தமைக்கு ஜாதிக ஹெல உறுமய தம்முடைய கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. 

ஆலோசனை வழங்குவதற்காக இந்த நிபுணர்கள் குழுவை நியமித்தமைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20140723110938

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.