Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா மீது அனல் கக்கிய அஹமதிநிஜாத்

Featured Replies

நியூயார்க்:

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த இரான் அதிபர் அஹமதிநிஜாதும், வெனிசுவேலா அதிபர் சாவேசும் அமெரிக்காவை மிகக் கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சாத்தான் என்று வர்ணித்துள்ளார் ஹூயுகோ சாவேஸ். மேலும் ஐ.நா. சபை இப்போது அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதனால் ஒரு பயனும் இல்லையென்றும், ஒரு வெட்டியான அமைப்பாக ஐ.நா. இருப்பதாகவும் தாக்கியுள்ளார்.

அதே போல இரான் அதிபர் அஹமதிநிஜாதும் அமெரிக்காவை வாரிவிட்டுச் சென்றுள்ளார்.

நியூயார்க் வந்துள்ள அகமதிநிஜாத் ஐ.நா. தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். பேட்டி தொடங்குவதற்கு முன்பு திருக்குரானிலிருந்து சில வாசகங்கள் வாசிக்கப்பட்டன. பின்னர் பேசத் தொடங்கிய அகமதிநிஜாத்,

யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை நிறுத்தி வைக்க ஐ.நா. சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. நாங்கள் இந்த யுரேனியத்தை அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்தப் போவதில்லை. மின் சக்தித் திட்டத்திற்காகவே இந்த பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறோம். ஆனால் எப்போது பேச்சுவார்த்தை என்பதற்கு காலக் கெடு விதிக்க முடியாது. நியாயமான முறையில் வல்லரசு நாடுகள் எங்களுக்கு உறுதிமொழிகள் தந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம். யுரேனியத் திட்டத்தையும் நிறுத்தி வைப்போம்.

இப்போது ஐரோப்பிய யூனியன் அமைப்புடன் இரான் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் நல்லது நடக்கும் என நம்புகிறோம்.

எங்கள் விஷயத்தில் மட்டும் நிர்ப்பந்தம் கொடுக்கும் அமெரிக்கா எங்களது பிராந்தியத்தில் உள்ள பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ஆயுதத் திட்டங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? இவையும் அணு ஆயுத நாடுகள்தானே?

ஐ.நா. பாதுகாப்பு சபையில் உள்ள எல்லா நாடுகளும் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள நிலையில் அந்த நாடுகள் இரானை பார்த்து யுரேனியத்தை தயாரிக்காதே என்று சொல்வது ஏன்?

அமெரிக்கா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை அழித்துவிட்டதா? யுரேனியம் தயாரிப்பை நிறுத்திவிட்டதா?

இரான் யுரேனியம் செறியூட்டலை நிறுத்தினால் நாங்கள் யுரேனியம் தருகிறோம் என்று அமெரிக்காவும் ஜெர்மனியும் பிரான்சும் சொல்கின்றன. இவர்களை நம்பி 50 ஆண்டுகளாக நாங்கள் பல வகையிலும் மோசம் போய்விட்டோம்.

இரானுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இவர்கள் முறையாக நிறைவேற்றியதில்லை. இந் நிலையில் இவர்களை எப்படி மீண்டும் இரான் நம்ப முடியும்?

எங்களது அணு சக்தித் திட்டம் அமைதியானது. அமைதிக்காகவே இந்த்த திட்டம். அணு ஆயுதம் தயாரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு அது தேவையும் இல்லை. எங்களது திட்டத்தில் எந்தவித ஒளிவுமறைவும் இல்லை.

சர்வதேச அணு சக்திக் கழகத்திற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். எங்களது அணு சக்தி நிலையங்களை ஆய்வு செய்ய அனுமதித்துள்ளோம். இதை தவிர உங்களுக்கு வேறு என்ன வேண்டும்?.

வேண்டுமானால் அமெரிக்கா தனது யுரேனிய செறிவூட்டும் திட்டத்தை கைவிடட்டும். இன்னும் 5 வருடத்தில் நாங்கள் அமெரிக்காவுக்கு யுரேனியம் விற்கத் தயார். அதுவும் 50 சதவீத விலை தள்ளுபடியுடன் என்றார் அகமதிநிஜாத் சிரித்தபடியே.

கைதிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

அமெரிக்க மக்கள் தொகை 21.9 கோடி. ஈரான் மக்கள் தொகை 6.8 கோடி. அமெரிக்க சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30 லட்சம். ஈரான் சிறைகளில் 1.3 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். எது அதிகம் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்றார் புன்னகையுடன்.

கடந்த 27 வருடங்களாக ஈரான் மீது துவேஷத்துடன் நடந்து கொள்கிறது அமெரிக்கா. இது தேவையில்லாதது. ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இது. பல தலைமுறைகளாக அணு ஆயுதங்களை தயாரித்துக் குவித்துக் கொண்டிருக்கும் நாடு அமெரிக்கா. இப்போதும் கூட அவர்கள் ஏதாவது ஒரு புது ஆயுதத்தைத் தயாரித்துக் கொண்டுதான் உள்ளனர்.

ஆனால் நாங்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் மீது நிர்ப்பந்தத்தை திணிக்க முயன்றால், அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதெல்லாம் இனி நடக்கவே நடக்காது.

உலகில் உள்ள ஒவ்வொரு இனத்தையும், சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம், அன்பு செலுத்துகிறோம். அது யூதர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, முஸ்லீம்களாக இருந்தாலும சரி, அனைவரையும் நிõங்கள் மதிக்கிறோம். யூதர்களும் மனிதர்கள்தான். அவர்களை நாங்கள் வெறுக்கவில்லை என்றார்.

ஆனால், யூதர்களை ஹிட்லர் லட்சக்கணக்கில் கொன்றார் என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். சும்மா பேச்சுவாக்கில் எதையும் சொல்லக் கூடாது என்றார்.

தொடர்ந்து இரானின் யூதர்கள் எதிர்ப்பு பற்றி ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அஹமதிநிஜாத், யூதர்கள் பற்றி தொடர்ந்து அமெரிக்க நிருபர்கள் கேள்வி கேட்டீர்கள். அது போலவே பாலஸ்தீனர்கள் குறித்தும் நீங்கள் கவலையுடன் கேள்வி கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். யாரும் கேட்கவில்லை. என்ன காரணமோ?. சரி பரவாயில்லை என்றார்.

லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு இரான் ஆயுதம் தந்ததால் தான் இஸ்ரேலுடன் 35 நாட்கள் போரிட்டு வெல்ல அவர்களால் முடிந்தது என்று நிருபர்கள் கேட்டபோது,

ஹிஸ்புல்லாவுக்கு இரான் தருவது மதரீதியிலான ஆதரவு தான். ஆயுதம் எல்லாம் தரவில்லை. அதை யாராவது நிரூபிக்க முடியுமா? என்றார்.

ஹிஸ்புல்லாவிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க ஐ.நா. படை அனுப்பப்படுகிறதே. அவர்களுக்கு இரான் உதவுமா என்று கேட்டபோது,

ஹிஸ்புல்லா பிரச்சனை லெபனானுடன் தொடர்புடையது. அடுத்த நாட்டு பிரச்சனையில் இரான் தலையிடாது என்றார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அமெரிக்காவும், அதன் தோழன் பிரிட்டனும் இணைந்து கொண்டு தவறாக பயன்படுத்தி பிற நாடுகளை ஆக்கிரமிப்பதை வேலையாகக் கொண்டுள்ளன. இதை தடுத்து நிறுத்துவோம் என்றார்.

முன்னதாக ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஈரான் தனது யுரேனியம் திட்டத்தை நிறுத்த வேண்டும் என ஐ.நா. காலக்கெடு விதித்திருந்தது. மேலும் இத்திட்டம் தொடர்பாக அக்டோபர் மாதத்திற்குள் ஈரானுடன் உடன்பாடு காண ஐரோப்பிய யூனியனின் பேச்சுவார்த்தையாளர் சோலோனாவையும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளன என்பது நினைவிருக்கலாம்.

இவை நடைபெறாவிட்டால் ஈரான் மீது பொருளாராதத் தடையை விதிக்க ஐ.நா. சபையை கேட்டுக் கொள்ளப் போவதாகவும் இந்த 6 நாடுகளும் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் ஈரான் அதிபரின் கருத்து குறித்து அமெரிக்க செய்தித் தொடர்பாளர் டோனி ஸ்னோ கூறுகையில், ஈரான் அதிபரின் கருத்துக்களை கேட்டுக் கொண்டிருப்பதை விட நடவடிக்கையில்தான் நாங்கள் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளோம்.

உடனடிõயக யுரேனியத் திட்டத்தை ஈரான் நிறுத்தினால் நாங்களும் பேச்சுவார்த்தைக்கு உடனடியாக வருவோம் என்றார் ஸ்னோ.

மற்றொரு அமெரிக்க செய்தித் தொடர்பாளரான டாம் கேசி கூறுகையில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 6 நாடுகள் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு ஈரான் சம்மதிக்கிறதா, இல்லையா என்பதை ஈரான் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

அதை விடுத்து பரிசீலிக்கிறோம், சிந்திக்கிறோம் என்று கூறுவதால் பிரயோஜனமும் இல்லை. சமயோசிதமாக நடப்பதாக நினைத்துக் கொண்டு பேசுகிறார் ஈரான் அதிபர். இதன் மூலம் சர்வதேச சமுதாயத்தை குழப்ப அவர் நினைக்கிறார் என்றார் அவர்.

அதே நேரத்தில் ஐ.நா. சபையில் ஈரான் அதிபர் பேசிய பேச்சு பல நாடுகளையும் கவர்ந்தது. அவரது பேச்சுக்கு பெரும் வரவேற்பும் காணப்பட்டது. அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள வல்லரசு நாடுகளை விட்டு விட்டு ஈரான் போன்ற சிறிய நாடுகளை நிர்ப்பந்திப்பது நியாயமா என்று அவர் கேட்டது பல நாடுகளின் வரவேற்பை பெற்றது.

அஹமதிநிஜாத் அமெரிக்காவைத் தாக்க வெனிசுவேலா அதிபர் சாவேஸ் ஜார்ஜ் புஷ்ஷை தனிப்பட்ட முறையில் திட்டித் தீர்த்துவிட்டுத் தான் விமானம் ஏறினார்.

அமெரிக்கா சொன்னால் எல்லோரும் கேட்க வேண்டுமா? அமெரிக்கா என்ன ஐ.நா. சபையா? முதலில் ஐ.நா. சபையை சீர்திருத்தும் வழியைப் பாருங்கள் என்று அனல் கக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2006/09...09/22/iran.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி.

கேட்க மிச்சம் நல்லாத்தான் இருக்கு நிஜாத் நாணா.. ஆனா அவன் நீங்க சென்ன மாதிரி ஒரு சைத்தானேதான்.. அதிலை எங்களுக்கு ஐமிச்சம் இல்லை... ஆனா அவன் அடிக்கத் தொடங்கினா அந்த அல்லாதான் உங்களுக்கு துணை நிக்க வேணும். யாரும் வரமாட்டாக... அவன் இராக்குக்கு அடிக்கும் போதே இதை நீங்க சொல்லியிருக்கலாம்.....ம்.....ம்...எ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.