Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ பிரசன்ன ஆக்கிரமிப்பு அராஜகத்தை நீக்கி தமிழர் தீர்வை நோக்கி நகர வேண்டும் அரசு : - ஜ.ம.மு பாஸ்க்கரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ பிரசன்ன ஆக்கிரமிப்பு அராஜகத்தை நீக்கி தமிழர் தீர்வை நோக்கி நகர வேண்டும் அரசு : - ஜ.ம.மு பாஸ்க்கரா 

[Thursday 2014-07-24 10:00]
Paskara-150-seithy.jpg

வட பகுதியில் இராணுவத்தை விலக்காமல் மேலும் மேலும் விஸ்தரிப்பதுடன் இராணுவ மேலாண்மை தன்மையை மேம்படுத்தி தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் தன்மையின் உச்சத்தால் நில அபகரிப்பு சிறுமி மீதான வற்புணர்வு வடமாகாண இராணுவ பிரசன்னத்தின் கொடூர தன்மையை புடம் போட்டுக்காட்டுகிறது. இவ்வேளையில் தமிழ் மக்கள் விடிவுக்கான தீர்வையும் உண்மை நிலையை பெரும்பான்மை மக்கள் உணராமல் தடுக்கிறது பெரும்பான்மை இனவாத மதவாதம். தீர்வையும் எட்டாக்கனியாக மாற்றுகிறது.

  

அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநாகர உறுப்பினருமான சி.பாஸ்கரா .

இந்த நாட்டில் ஒரு இனம் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கின்ற போது அதேநாட்டிலுள்ள சகோதர இனம் விளங்கிக்கொள்ளமுடியாதும் கண்டுங்காணாதிருக்கும் நிலைமையே இங்கு காணப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டை பிரிக்க முயல்வதாகக் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்கள்.

அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கூட்டமைப்பின் தரப்பு அவ்வாறான ஒரு முயற்சியை நாம் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தது மட்டுமன்றி யாழில் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ்பின் 34ஆவது மாநாட்டில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றுகையில் நாட்டைப் பிரிக்க நாம் முயவில்லை.

ஐக்கிய இலங்கைக்குள் உரிமைகளை வழங்கவேண்டுமென்றே நாம் கோருகின்றோம் என தெளிவாக அறிவித்திருக்கின்றார். அவ்வாறு அறிவித்த பின்னரும் கூட அரசாங்கமும் அதன் பங்காளிகளும் இனவாதப்பட்டத்தை சூட்டுவதற்கு தான் தொடர்ந்தும் கங்கணம் கட்டிவருகின்றார்கள். எமது கட்சிக்குக் கூட அவ்வாறான நிலைமையே காணப்படுகின்றது.

இந்த நிலைமை மாறவேண்டும்.

ஜனாதிபதி மக்கள் குடியிருப்புக்களை எந்தவிதத்திலும் சூறையடுவதற்கு இடமளிக்கக் கூடாது என இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அறிவித்திருந்த போதும் வடக்கிலும்�� கிழக்கிலும் அந்த நிலைமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் தொடர்ச்சியாக தமது சொந்தநிலங்களில் மீளக்குடியேறி வாழமுடியாது இருக்கும் தருணத்திலும் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கு நேரொதிராக காணி சுவீகரிப்பு செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன.

அண்மையில் கீரிமலையிலும் அச்சுவேலியிலும் பொதுமக்களினதும் தமிழ்ப்பிரதிநிதித்துவங்களினதும் போராட்டத்தால் சுவீகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டிருந்தாலும் பின்னர் இராணுவத்தின்துணையுடன் அந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.இச்செயற்பாடுகள் வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ச்சியாக இடம்பெறுவதானது அங்கு இராணுவ அடக்கு முறை இருக்கின்றது என்பதையே பகீரங்கப்படுத்தியுள்ளது.

வடக்கின் காரைநகர் பிரதேசத்தில் பாடசாலை செல்லும் 11வயது சிறுமியொருவர் மீது இராணுவ வீரர் வன்புணர்வு செய்ற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்துள்ளார். இன்றுவரை அந்த வீரர் கைது செய்யப்படவில்லை. அடையாள அணிவகுப்புச் செய்கின்றார்கள். ஒரு 11வயது சிறுமியால் அடையாளம் காட்டிவிடமுடியுமா? உண்மையில் இவ்விடயம் தொடர்பில் குறித்த இராணுவ முகாமிலுள்ள அதிகாரியே கவனம் செலுத்தி முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறானதொரு செயற்பாடு இடம்பெறவில்லை. குறித்த அதிகாரியே நீதிமன்றத்திற்கு பதில் சொல்லும் பொறுப்பை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாhறானதொரு விடயம் நடைபெறவில்லை. விளையாட்டு என்பது இன ஐக்கியத்திற்கும் ஒற்றுமைக்குமான ஒரு பாலமாக அமையவேண்டியதொன்று. ஆனால் அண்மையில் வடபகுதியில் இருந்து வருகைதந்த விளையாட்டு வீரர்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கின்றார்கள். விளையாட்டில் கூட நாம் தான் வெற்றிபெற்றோம் என பிரசாரம் செய்யவே பெரும்பான்மையினத்தவர்கள் விரும்புகின்றார்கள்.

வெற்றி தோல்வியை சமமாக மதிக்கத்தெரியாது திட்டமிட்டு மேற்கொண்டதொன்றாகவே நாம் காண்கின்றோம். அரசாங்கம் தீர்வு நோக்கி செல்வதற்கு முன்னர் வடக்கில் சிவில் நிர்வாகத்தை நிலைநாட்டி இவ்வாறான இனவாத காழ்ப்புணர்ச்சி மிக்க செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார் பாஸ்க்கரா.

http://www.seithy.com/breifNews.php?newsID=113688&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.