Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவில் மாணவர்களை ஊக்கிவிக்கும் நிகழ்வு ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

தமிழின வளர்ச்சிப்பணிகள் இனி தொடர்ந்து கொண்டே இருக்கும். மெல்ல மெல்ல தமிழ்ச்சமுதாய அடையாளங்களை மீட்டெடுக்க அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்கவேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் மூலம் நிர்மூலமாக்கப்பட்ட ஈழத்தமிழினத்தின் அடையாளங்கள் அனைத்தும் இம்மண்ணில் மீள எழுச்சிபெறுவதற்கு பண்பான ஒழுக்கமுள்ள தூரநோக்கு சிந்தையுள்ள இளையசமுதாயமாக மாணவர்கள் நீங்கள் உருவாகவேண்டும் என்று மாணவர்களுக்கான கல்வி சார் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டம் கடந்த 2014-07-26 அன்று காலை முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் உள்ள பொதுநோக்கு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

யுத்தத்தினால் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்த மாணவர்களின் பாடசாலை இடைவிலகலை குறைக்கும் பொருட்டு ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவரும் இச்செயற்திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்கள் மூலம் 87 மாணவர்கள் பயன்பெற்ற நிலையில் அதன் மூன்றாம் கட்டம் கடந்த சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பமானது.

ரவிகரனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் திரு. அன்ரனி ஜெகநாதன் அவர்களும் கலந்து சிறந்து சிறப்பித்திருந்தார்.

மூன்றாம் கட்டத்திற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மூலமாகவும் 20 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பாடசாலை சீருடை(தைத்தபடி), காலணி (சப்பாத்து), கொப்பிகள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய அன்ரனி ஜெகநாதன்,

இம்மாதிரியான நிகழ்வுகள் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை. இதுபோன்ற செயற்திட்டங்கள் எதிர்காலத்தில் நடைபெறும்போது இங்கு உள்வாங்கப்பட்ட மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்கள் உள்வாங்கப்படும் வகையில் ரவிகரனுடன் இணைந்து இச்செயற்திட்டத்தை முன்னெடுப்போம். இவ்வாறான செயற்திட்டங்களுக்கு உதவி புரியும் நல்நெஞ்சங்களை இத்தருணத்தில் பாராட்டுவதோடு அவர்களின் தொடர்ச்சியான இது போன்ற ஊக்குவிப்புகள் எதிர்காலத்திலும் எமது மாணவர்களுக்கு கிடைக்கட்டும் என்றார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரவிகரன்,

ஒரு வருடத்திற்கு முன்னர் எனக்கு கிடைக்கப்பெற்ற ஒரு ஆய்வறிக்கையில் 2012ம் ஆண்டு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடகிழக்கு மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடைவிலகியுள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஒட்டுமொத்த இலங்கையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஈழத்தமிழினம் கொண்டிருந்த அடையாளங்களுள் கல்வியும் ஒன்று. எமது தாயகம் பல நூற்றுக்கணக்கான கல்விமான்களை அடையாளப்படுத்திய தேசம். யுத்த அழிவுகளோடு எமது மரபுகளும் அழிந்துசெல்லும் நிலையை இங்கு அனுமதிக்கமுடியாது.

பாடசாலை இடைவிலகலுக்கான காரணங்களை ஆராய்ந்தபோது ஈழத்தமிழினத்தின் வறுமையே அங்கு முன்னிற்கிறது. ஆதலால் பாடசாலை இடைவிலகலை குறைக்கும் பொருட்டு புலம்பெயர் உறவுகளுடன் கைகோர்த்து இச்செயற்திட்டத்தை முன்னெடுக்க தொடங்கினேன்.

புலம் பெயர் உறவுகளும் கைகொடுக்க தொடங்கினார்கள். இன்று இச்செயற்திட்டம் 107 மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இச்செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டமாகிய இன்றைய நிகழ்வில் 20 மாணவர்களுக்கான கல்வி சார் பொருட்களை வழங்க திரு. என். சிவகணேஸ் மற்றும் திரு. தி. சதீஸ்குமார் ஆகியோர் ( தமிழ் சமூக நிலையம் லண்டன் ) முன்வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

இச்செயற்திட்டம் அடுத்தடுத்த கட்டங்களை இனிவரும் நாட்களில் எட்டும். இன்னும் வறுமையால் வாடும் பல ஈழத்து சிறார்கள் இச்செயற்திட்டங்களால் மலர்வார்கள். அவர்களால் எம் தேசம் மலரும். எம் மரபுகள் வளரும். எம் தாயகம் மேலும் சிறக்கும் என்ற நம்பிக்கையும் கனவும் நிறையவே எமக்கு இருக்கிறது என்றார்.

Ravikaran%2001.jpg

Ravikaran%2002.jpg

Ravikaran%2003.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.