Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவுக்கு உள்ள உரிமை குறித்து அரசாங்கம் கேள்வி

Featured Replies

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பயிற்சி வழங்­கு­வது உள்­ளிட்ட எத்தகைய செயற்­பாட்டை சர்­வ­தேசஅரச சார்­பற்ற நிறு­வ­னங் கள் முன்­னெ­டுத்­தாலும் அதனை அர­சாங்கம் சந்­தேகக் கண்­கொண்டே பார்க்கும். காரணம் வர­லாற்று பதி­வுகள் அவ்­வா­றான நிலையை தோற்­று­வித்­துள்­ளன. ஆனால் இது தொடர்பில் விமர்­சிக்க அமெ­ரிக்­கா­வுக்கு எந்­த­ள­வுக்கு உரிமை உள்­ளது என்று எங்­க­ளுக்கு புரி­ய­வில்லை என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.
14-011_0.jpg
 
தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் என்று கூறப்­ப­டு­வதை ஏற்க முடி­யாது.அனை­வரும் இலங்கை நாட்டின் ஊட­க­வி­ய­லா­ளர்கள். நாம் இன ரீதி­யாக பிரித்­துப்­பார்க்­கக்­கூ­டாது. யாழ்ப்­பா­ணத்தில் இருந்து வந்த ஊட­க­வி­ய­லா­ளர்­களில் கஞ்சா கொண்­டு­வந்­த­வர்கள் இருந்­தார்­களா என்று எமக்குத் தெரி­யாது. எமக்கு கிடைத்த தக­வல்­களின் அடிப்­ப­டையில் விசா­ரணை செய்­யப்­பட்­டது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.நாட்டின் தேசிய பாது­காப்பு குறித்து கவனம் செலுத்­து­வது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். குறிப்­பாக சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் செயற்­பா­டுகள் குறித்து நாங்கள் அவ­தா­ன­மா­கவே இருப்போம் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.
 
ஊட­கத்­துறை அமைச்சில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
 
அமைச்சர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது,
 
கேள்வி: யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து வந்த தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் விசா­ரிக்­கப்­பட்­டுள்­ள­னரே ?
 
பதில்: தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் என்று கூற­வேண்டாம். தமிழ் முஸ்லிம் ஆங்­கில ஊட­க­வி­ய­லா­ளர்கள் என்று பிரித்து பேசு­வது முறை­யல்ல. அனை­வரும் இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள். 30 வருட கால கொடூர அனு­ப­வத்தை கடந்து வந்­துள்ளோம். மேலும் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது.
 
கேள்வி:இந்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான பயிற்சி பட்­ட­றைக்கு எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளதே?
 
பதில்: சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பயிற்சி வழங்­கு­வது உள்­ளிட்ட எந்த செயற்­பாட்டை முன்­னெ­டுத்­தாலும் அதனை அர­சாங்கம் சந்­தேகக் கண்­கொண்டே பார்க்கும். காரணம் வர­லாற்று பதி­வுகள் அவ்­வா­றான நிலையை தோற்­று­வித்­துள்­ளன. 1931 ஆம் ஆண்டு வாக்­கு­ரி­மையை எமது மக்கள் பெற்­றுள்­ளனர். அன்று முதல் மக்கள் வாக்­க­ளித்­து­வ­ரு­கின்­றனர். சில தேர்­தல்­களில் 80 வீத வாக்­க­ளிப்பும் பதி­வா­கி­யுள்­ளது. ஆனால் இவர்கள் வாக்­க­ளிப்­பது எவ்­வாறு என்று கற்­பிக்­கின்­ற­னரா? அல்­லது யாருக்கு வாக்­க­ளிக்­க­வேண்டும் என்று கற்­பிக்­கின்­ற­னரா? என்று தெரி­ய­வில்லை. எனவே அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் செயற்­பா­டுகள் குறித்து அர­சாங்கம் கவ­ன­மாக இருக்கும்.
 
கேள்வி: தமிழ் மொழி மூல ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு தமிழை விடுத்து ஆங்­கி­லத்தில் பயிற்சி வழங்க முடி­யுமா?
 
பதில்: தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் என்று கூற­வேண்டாம். இந்த இடத்­தி­லி­ருந்தே பிரி­வினை ஆரம்­பிக்­கக்­கூ­டாது. அத்­துடன் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் செயற்­பா­டுகள் குறித்தே இங்கு சந்­தேகம் எழுப்­பப்­ப­டு­கின்­றது. யாழ்ப்­பா­ண­ததில் இருந்த வந்த ஊட­க­வி­ய­லா­ளர்­களில் யாரா­வது கஞ்சா வைத்­தி­ருந்­த­னரோ என்று தெரி­ய­வில்­லையே?
 
கேள்வி:இந்த விவ­கா­ரத்தில் சட்­டத்­துக்கு புறம்­பாக செயற்­ப­டாமல் சட்ட ரீதி­யாக செயற்­பட முடியும் தானே?
 
பதில்: சட்­டத்­துக்கு புறம்­பாக செயற்­பட்­டி­ருந்தால் யாரும் நீதி­மன்றம் செல்­லலாம்.
 
கேள்வி: அப்­ப­டி­யாயின் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க முடி­யுமே?
 
பதில்: சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க கடந்த காலத்தில் முயற்­சிக்­கப்­பட்­டது. அவர்­களை உரிய முறையில் பதிவு செய்­யு­மாறு கோர­ப­பட்­டது. ஆனால் இதே ஊட­கங்கள் அதனை எதிர்த்­தன. நீங்­களே எதிர்த்து குரல் எழுப்­பி­னீர்கள். எனவே அதனை உரிய முறையில் செய்ய முடி­ய­வில்லை. யுத்த காலத்தில் புலி­களின் முகாம்­களை கைப்­ப­ற­றி­ய­போது அங்கு சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் கரு­விகள் காணப்­பட்­டன. இதுதான் வர­லாறு. எனவே தான் நாங்கள் நட­வ­டிக்கை எடுக்­கின்றோம். அவ­தா­னத்­துடன் இருக்­கின்றோம்.
 
கேள்வி; இந்த பயிற்சி பட்­ட­றைகள் ஆங்­கி­லத்­திலும் சிங்­க­ளத்­திலும் நடந்­த­போது பிரச்­சினை வர­வில்லை. ஆனால் தமிழில் நடக்­கும்­போது மட்டும் ஏன் சிக்கல் வர­வேண்டும்?
 
பதில்: தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­படும் எந்த விட­ய­மாக இருந்­தாலும் நாங்கள் நட­வ­டிக்கை எடுப்போம். அது எமது கட­மை­யாகும். அர­சாங்­கத்­துக்கு கிடைத்த தக­வல்­க­ளுக்கு அமை­யவே நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது.
 
கேள்வி: ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பயிற்சி வழங்கும் இடத்தில் ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­டதே?
 
பதில்: ஜன­நா­யக உரிமை குறித்து பேசு­கின்றோம். ஆர்ப்­பாட்டம் நடத்த இட­ம­ளிக்­காமல் இருக்க முடி­யுமா? ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ லண்டன் சென்­றி­ருந்­த­போது புலம் பெயர் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை தடுத்து நிறுத்தாத பிரிட்டன் அரசாங்கம் ஜனநாயகம் என்றது.
 
கேள்வி: இந்த சம்பவத்தை அமெரிக்கா கண்டித்துள்ளதே?
 
பதில்: இந்த விடயத்தை விமர்சிப்பதற்கு அமெரிக்காவுக்கு என்ன உரிமை உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. காஸாவில் இடம்பெறும் செயற்பாடுகளுக்கு அவர்கள் என்ன பதில் கூறப்போகின்றனர்? காஸா நிலைமை கவலையளிப்பதாகவும் எனினும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் அந்நாட்டின் செயலாளர் கூறுகின்றார். அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.