Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யான் விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரியான்’ படத்தில் ‘மரி’யைத் தூக்கி விட்டால் என்ன ஆகும்..? ‘யான்’தானே..?அதேதான் ‘யான்’ படக் கதையும். முன்னதில் காதலிக்காக வெளிநாடு போய் பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொள்வார் தனுஷ். இதில் காதலுக்காக வெளிநாடுபோய், போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார் ஜீவா.

ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் தனக்கொரு ‘கோ’ தந்த உற்சாகத்தில் ரவி கே.சந்திரனுக்கும் “எடுத்துக்கங்’கோ…” என்று டேட்ஸ் கொடுத்தார் போலிருக்கிறது ஜீவா. ஒரு ஹீரோவாக அவரும் சரி, அவரை ‘ஹேன்ட்ஸம்’ யூத்தாகக் காட்டியிருப்பதிலும் சரி, இரண்டு பேரும் ஜெயித்திருக்கிறார்கள்.

ஆனால், ஸ்கிரிப்ட்…!!!!???? (இந்த விமர்சனம் முழுக்க இப்படி ஏகப்பட்ட ஆச்சரியக் குறிகளையும், கேள்விக் குறிகளையும் எதிர்கொள்ள வேண்டும் நீங்கள்…)

இந்தியாவெங்கும் குண்டுகள் வைத்த தீவிரவாதியைப் போலீஸ் போட்டுத்தள்ளிய செய்தியை டிவியில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க, அதை நிறுத்திவிட்டு “மச்சி… இன்னைக்கு ஒரு ஃபிகரைப் பாத்தேன்…” என்று என்ட்ரி கொடுக்கும் விளையாட்டுப் பிள்ளையாக வரும் ஜீவா, காதலுக்காக வேலைக்கெல்லாம் (!) போக முடிவெடுத்து, வெளிநாடு போய் அல்லல் படுவது மட்டுமல்லாமல், முதல்காட்சியில் வந்த பயங்கரவாதியையும் எதிர்கொண்டு (!!!!!!????) போட்டுத்தள்ளுகிறார்.

‘அம்புலிமாமா’ கதையிலாவது ஏதாவது ‘லாஜிக்’ இருக்கும். ஆனா, ‘யான்..?’ செவ்வாய் கிரகத்துக்கு ஷேர் ஆட்டோ விட்டதுபோல் இழுவையாக இருக்கிறது கதை. வேலையில்லாமல் இருக்கும் ஜீவா வேலைக்குப் போகும் பாட்டி(!)யின் தயவில்… ஆனால், நவநாகரீக வீட்டில் வாழ்கிறார். இன்னொரு பக்கம் படு ஆடம்பர பங்களாவில் வாழும் ‘எக்ஸ் சர்வீஸ் மேன்’ நாசரின் மகள் துளசியோ ஜெமினி கணேசன் கற்றுக்கொண்ட காலத்து காரை வைத்துக் கொண்டு ‘டிரைவிங்(!)’ கற்றுத் தந்து பிழைப்பை ஓட்டுகிறார்.

இவர்கள் இருவருக்கும் காதல் வர, நாசர் குறுக்கிட்டு, “வேலையில்லாமல் இருக்கும் நீ எப்படி என் பொண்ணை வச்சுக் காப்பாத்துவே..?” என்று ‘நியாண்டர்தால்’ காலத்து ‘தகப்பன்’ கேள்வியைக் கேட்க, ஜீவா வேலைக்குப் போக முடிவெடுக்கிறார். எம்.பி.ஏ படித்ததாகச் சொல்லப்படும் அவர், வேலைக்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்க, வேலை கிடைக்கவில்லையாம்.

YAAN-300x169.gifஏன்..? என்பது தெரியவேயில்லை. வேலை காலி இல்லை என்றால் உள்ளேயே விட்டிருக்க மாட்டார்கள். சொல்லிவைத்தது போல், எல்லா கம்பெனியிலும் அவர் ஃபைலைப் பார்த்து விட்டு “நோ…” சொல்கிறார்கள். அப்படியானால், அவ்வளவு கேவலமான புரஃபைல் கொண்டவரா அவர்..?

கடைசியில் உலகவரைபடத்தில் தேடினாலும் கிடைக்காத ஒரு நாட்டுக்கு வெளிநாட்டு ஏஜன்ட் அனுப்பி வைக்க, அங்கே வேலைக்குப் போகிறாராம் அவர். நன்றாகத் தெரிந்த அமெரிக்கா, லண்டன் போவதாக இருந்தாலே தூதரகரகத்தில் ஆனானப்பட்ட கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றுப் போகும் இன்றைய காலக்கட்டத்தில் ‘பசிலிஸ்தான்’ (?) போக, ஏதோ கோயம்பேட்டில் பஸ் பிடித்து விழுப்புரத்தில் இறங்குவது போல் இறங்கி மாட்டிக் கொள்கிறார் அவர்.

அதுவரை உலகம் அறியாமல் இருக்கும் அந்த நாட்டில் ஜீவா மாட்டியபிறகு ‘நம்ம பிச்சுமணி அங்கதான் இருக்கான்’ ரேஞ்சில், ஆளாளுக்கு தங்களுக்குத் தெரிந்த ‘பசிலிஸ்தான்’ ஆள் ஒருவரைச் சொல்கிறார்கள். ஜீவாவை அப்படி போதை மருந்தோடு அனுப்பி மாட்டிவிட்ட ‘குங்குமம் விபூதி’ வைத்த ஏஜன்ட் போஸ்வெங்கட், அங்கே சிறையில் இருக்கும் தம்பி ராமையா, டாக்ஸி டிரைவர் கருணாகரன், சர்வதேச பயங்கரவாதி வரை ஏதோ பழனிமலை அடிவாரம் போல ‘பலிசிஸ்தானை’ நம்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசியில் ‘பார்டர்’ தாண்டிவிட்டால் இனி கவலையில்லை என்று கிளைமாக்ஸ் வைத்து ஜீவாவையும், துளசியையும் ஒட்டகத்தில் ஏற்றி அனுப்புகிறார் கருணாகரன். அந்த நாட்டின் எல்லையில் பார்த்தால் ‘பார்டர்’ என்றொரு போர்டு மட்டுமே இருக்கிறது.

எல்லையில் சுருள்கம்பிகளோ, செக்போஸ்டோ இல்லை. ஒட்டகம் மேய்க்க வரும் பக்கத்து நாட்டுக்காரன் அந்த ‘பார்டர்’ எழுதி வைத்த போர்டைப் பிடுங்கி ஒருகிலோ மீட்டர் தள்ளி நட்டால் அதுவும் அவர்கள் நாடாகிவிடும் போலிருக்கிறது. ஒரு நாட்டு ‘பார்டரை’ சின்னாளப்பட்டி புடவை பார்டர் அளவுக்கு இவ்வளவு கிண்டலாக்கியிருக்கக் கூடாது..!

yaan2-300x166.jpgபசிலிஸ்தான் நாட்டில் ‘நெட்வொர்க்கே’ இலையென்பதால் தன் பேரனுடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை என்கிறார் ஜீவாவின் பாட்டி. ஆனால், ஒரு குடோனுக்குள்ளிருந்து நம் நாட்டுக்கு ஜம்மென்று மெயில் தட்டுகிறார் ஜீவா. டவர்களே இல்லாத பாலைவனத்தில் ஒட்டகம் மேய்ப்பவர், செல்போனில் பேசி ஜீவாவுக்கு உதவுகிறார்.

அத்துடன் பூட்டுகளே போடப்படாத (!) பசிலிஸ்தான் ஜெயில்கள், கழுத்தை வெட்டும் கத்தி உடைந்து (?) விட்டால் மரன தண்டனை நிறுத்தப்படும் பசிலிஸ்தான் சட்டங்கள் (அப்படி ஒரு வாலிபனை வெட்டும்போது கத்தி (!) உடைந்து போய் ஜீவாவின் மரண தண்டனை நிறுத்தப்படுகிறது…) எல்லாம் ஒருநடை பசிலிஸ்தான் போய்வர நமக்கே ஆவலைத் தூண்டுகின்றன.

மொழிபுரியாத நாட்டில் ஒருபக்கம் போலீஸ் தேட, மறுபக்கம் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் துரத்த, ஒரு இளம்பெண்ணுடன் சந்துசந்தாக அலைந்து சர்வதேச பயங்கரவாதியைப் பற்றிய துண்டுப்பிரசுரம் அடித்து, அவன் கலந்து கொள்ளும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் புகுந்து செந்தமிழில் பேசி வில்லனை ஜீவா எதிர்கொள்ளும் காட்சி படத்தின் ‘ஹைலைட்’. (சிரிக்காதீர்கள்… படத்தில் அத்தனையும் சீரியஸ்..!)

அவரை அங்கேயே போட்டுத்தள்ளாத ‘மக்கு’ வில்லன், பாலைவனத்துக்கு விமானத்தில் பறந்து வந்து ஒருகையால் விமானம் ஓட்டி, மறுகையால் துப்பாக்கியால் சுட்டு… இறந்துபோனபின்பும் அவர் மண்டையில் ‘நச்’சென்று குட்டலாம் போல் இருக்கிறது..!

ராதாவின் மகள் என்று சொன்னதாலேயே துளசியை ரசிக்க முடியவில்லையோ..? தப்பாக வரைந்த ஓவியம் போலவே எக்குத் தப்பாகத் தெரிகிறார். (இதற்கு மேல் நாகரிகமாக எப்படி வர்ணிப்பது..?) நாசரையும், ஜெயப்பிரகாஷையும் கூட பார்த்துச் சிரிக்குமளவுக்கு ஆக்கிவிட்டார்கள்.

இப்போது வரும் பாடல்கள் எல்லாமே ஏற்கனவே கேட்டவை போல் இருக்கின்றன என்றால், பலதடவை கேட்டது போல இருக்கும் பாடல்களை எப்படித்தான் ஹாரிஸ் ஜெயராஜ் இசைக்கிறாரோ..? ஜீவாவுக்கு பிளேபேக் கானாபாலா…(?)

vbk-2-yaan_2137671f-300x200.jpgபடத்தின் பாராட்டத் தக்க விஷயங்கள் இரண்டே இரண்டு. ஒன்று, கணக்குக் கேட்காமல் ஹாலிவுட் ரேஞ்சில் படம் வரவேண்டுமென்று வாரி இறைத்த தயாரிப்பு, இன்னொன்று மனுஷ் நந்தனின் அசத்தலான ஒளிப்பதிவு..!

படைப்புரீதியாக ஹாலிவுட்டுக்கு சவால் விடும் படம்தான் ‘யான்’ என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ‘ஸ்கிரிப்ட் எங்கே..?’ என்று ஹாலிவுட்காரன் கேட்டால், ரவி கே.சந்திரனின் ‘விசிட்டிங் கார்டை’ (அதை வைத்தும் ஒரு மெகா சீன் இருக்குதுங்கோ) கொடுத்துவிட வேண்டியதுதான்..!

 

http://www.gtamilcinema.com/blog/2014/10/03/yaan-movie-review/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.