Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமதான சக வாழ்வை விளக்கிய புரட்சி நாயகன்! சே குவேரா நினைவு தினம் இன்று

Featured Replies

che%20kuvera94d.jpg

 

'சே' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சே குவேரா ஆர்ஜென்ரீனாவில் 1928ஆம் ஆண்டு பிறந்தார். அக்காலத்திய ஆர்ஜென்ரீனா வறுமையிலும் அதன் விளைவாக சுகாதார முறைகளிலும் பின்தங்கியிருந்தது. இதன்விளைவாக சே பிறந்த ஒரு சில மாதங்களிலேயே ஆஸ்துமா நோயால் பீடிக்கப்பட்டார். மருத்துவம் படித்து ஒரு சிறந்த மருத்துவராக சேவை புரிந்து பின்னாளில் மார்க்சியச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு புரட்சியாளாராக மாறினார். கியூபாவிற்குச் சென்று அந்நாட்டின் புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மாபெரும் போராளி. அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளையும் விடுதலைசெய்ய பயணித்தபோது தென்பொலிவியக் காடுகளில் அமெரிக்கா ஏகாதிபத்தியவாதிகளாலும் பொலிவிய படைகளினாலும் சதித்தனமான முறையில் கொல்லப்பட்டார்.
 
 
கியூபாவின் விடுதலையின் விடிவெள்ளி
 
கியூபாவின் விடுதலைக்கு வித்திட்டவர் சே குவேரா. அவர் கொல்லப்பட்டபோது அமெரிக்க மற்றும் பொலிவியப் படைக்கு தலைமை தாங்கிய கேரி ப்ராடோ சால்மோன் என்பவருக்கு தான் கொன்றது சேவின் உடலைத்தான்; அவரது சிந்தனைகளை அல்ல என்பதும் பின்னாளில் அவர் இளைஞர்களின் மிகப்பெரிய ஆதர்ச நாயகனாக, ஒரு புரட்சியாளனின் அடையாளமாகத் திகழப்போகிறார் என்பதும் தெரிய வாய்ப்பில்லை. சே பள்ளி நாள்களிலும் மருத்துவக் கல்லுரியிலும் பயின்ற போது கல்வித் திட்ட பாடங்களை விட உள்நாட்டு மற்றும் உலக இலக்கியங்கள், நாடுகளின் வரலாறுகள், காரல் மார்க்சின் ‘ மூலதனம்’, புரட்சிகளின் வரலாறுகள் ஆகியவற்றை படிப்பதில் காலத்தைச் செலவழித்தார். 'சே'வை புரட்சியாளராக முழுமையாக மாற்றியதில் அவருடைய பெற்றோர் அளித்த ஊக்கமும் கருத்து ரீதியான உரையாடல்களுமே முக்கியப் பங்காற்றின.
 
கெரில்லா போர்முறையின் தந்தை
 
ராணுவ யுத்த தந்திரங்களை ஆழ்ந்துபடித்த சே கியூபப் புரட்சியின் போது புதிய யுக்தியை அறிமுகப்படுத்தினார். ஏகாதிபத்தியவாதிகளை நடுங்க வைத்த அந்த கெரில்லா போர்த்தந்திரம்தான் இன்றுவரை பல இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக விளங்குகிறது. பிறந்திலிருந்தே பீடித்த கடுமையான ஆஸ்துமா அவருடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. சில சமயங்களில் அவர் நினைவிழக்கும்படி ஆஸ்துமாவின் தாக்குதல் இருக்கும். அவருக்கு நினைவு திரும்பியவுடன் மீண்டும் புரட்சிப் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபடுவார் என அவர் மனவுறுதி குறித்து வியப்புடன் தெரிவிக்கின்றனர் அவருடன் இருந்த சக போராளிகள். மருத்துவராக இருந்த அவர் மருத்துவத் தொழிலில் ஈடுபடவில்லை. முழுமையாக தன்னை புரட்சிப் பணிகளுக்கு அர்ப்பணித்துக் கொண்டார். மலைகளிலும் காடுகளிலும் அழுக்கான உடைகளில் எந்தச் சத்தான உணவுமின்றி கடும் குளிருடனும் ஆஸ்துமாவுடனும் போராடிக் கொண்டே அவரது புரட்சிகரப் பணியை எந்தச் சமரசமுமின்றி தொடர்ந்தார்.
 
கியூபாவைக் கட்டமைத்த நாயகன்
 
புரட்சிக்குப் பிந்தைய கியூபாவில் அவர் மத்திய வங்கியின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார். கியூபாவின் நிதிக் கொள்கை அந்நிய செலாவணிக் கையிருப்பு மற்றும் விரிவான பொருளாதாரத் திட்டங்களுக்கு அவர் பொறுப்பாளாராக இருந்தார். ராணுவத்தைக் கட்டியமைப்பது, கியூபாவின் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றிலும் ஈடுபட்டார். கடந்த 1964 டிசெம்பர் 11ஆம் திகதியன்று சே கியூபாவின் பிரதிநிதியாக ஐ.நா சபையில் 19ஆவது பொது அமர்வில் உரையாற்றினார். உலக சமாதானம் குறித்த அந்த அற்புதமான புரட்சிகரமான உரையின் சில முக்கிய பகுதிகளை பார்ப்போம்.
 
உலகின் பல பகுதிகளில் ஏகாதிபத்தியம் தனது ஆதிக்க பாணியிலான அரசமைப்பையும் அதன் பொம்மை அரசையும் நிறுவ முயற்சிக்கிறது. இதன் மூலம் உலக நாடுகளுக்கு இடையிலான சமாதான சகசவாழ்வை சீர்குலைக்க முயற்சிக்கிறது. எனவே ஒடுக்கப்பட்ட மக்கள் சோசலிச முகாமுடன் ஒன்றிணைந்து சமாதான சக வாழ்வு என்றால் என்னவென்று ஏகாதிபத்தியவாதிகளுக்கு அவர்களுக்கே புரியும்படி உணர்த்த வேண்டும். அவர்களின் போராட்டங்களுக்கு ஐ.நா சபை ஆதரவு அளிக்க வேண்டும். சமாதான சகவாழ்வு என்ற கருத்தியல் இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு மத்தியில் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். மார்க்சியவாதிகள் என்ற முறையில் நாங்கள் சமாதான சகவாழ்வு என்பது சுரண்டுபவர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் இடையில் அல்ல, ஒடுக்குபவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடையில் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
 
ஐநாவின் அடிப்படை கொள்கை என்பது ஒவ்வொரு நாடும் அனைத்து வகையான காலனியாதிக்க ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெறும் உரிமையை உறுதி செய்வதே. மேற்கண்டவாறு உரையாற்றிய சே இதே நாளில்தான்(ஒக்ரோபர் 9) ஏகாதிபத்தியவாதிகளினால் கொல்லப்பட்டார். அவரது அர்ப்பணிப்புடனான வாழ்வும் மரணமும் என்றென்றும் உலக இளைய தலைமுறையினரை வழிநடத்திச் செல்லும்.
 
che%20kuvera95d.jpg
 
 
 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.