Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினரை வெளியேற்றும் அறிவிப்பை யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வெளியிட வேண்டும்! - யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
படையினரை வெளியேற்றும் அறிவிப்பை யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வெளியிட வேண்டும்! - யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை. 
[sunday 2014-10-12 08:00]
jaffna-uni.-210514-150.jpg
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களிலிருந்து படையினரை உடனடியாக வெளியேற்றி, எதிர்காலத்தில் சிவில் விவகாரங்களில் படையினர் தலையீடு செய்யமாட்டார்கள் என்ற அறிவிப்பை நாளை யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி வெளியிட வேண்டும். என யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான கடிதம் ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வரும்போது நாம் எதிர்பார்ப்பது என்ன? போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் ஈழத்தமிழ் மக்கள் இன்னமும் எந்த ஒரு தீர்வும் கிடைக்காத நிலையிலேயே இருப்பதாகவே கருதுகிறார்கள். அதுவே உண்மையும் ஆகும். வெளிப்பார்வைக்கு அபிவிருத்தி இடம்பெறுவதான ஒரு மாயத் தோற்றமே அன்றி ஈழத் தமிழ் மக்கள் மனதில் அப்படியான ஒரு உணர்வு ஏற்படவில்லை. ஈழத் தமிழ் மக்கள் மனங்களை மேலும் புண்பட வைக்கக்கூடிய நிகழ்வுகளே இடம்பெறுகின்றன.
 
உண்மையில் புண்பட்ட ஈழத்தமிழ் மக்களிற்கு ஆறுதல் அளிக்கக்கூடிய விதத்தில் ஜனதிபதி நடந்துகொள்ள வேண்டும் எனில் அவர்களது மனங்களை வெல்லக்கூடிய நடவடிக்கைகளை இனியாவது உடனடியாகச் செய்யவேண்டும். இன்று வடக்குக் கிழக்கில் ஆயுதம் ஏந்திய புலிகளோ அன்றி தனி ஈழத்திற்காகப் போராடும் ஆயுதக் குழுக்களோ இல்லை. அப்படி இருப்பதாக யாராவது கூறுவார்களேயானால் அவர்கள் யதார்த்தத்தை உணராதவர்களே ஆவர்.
 
எனவே இராணுவ முகாம்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதற்காக தமிழ் மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதும் இன்னும் நிலைமையை சீரழிக்கும். எனவே ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாண விஜயத்தின் போது தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவது உடன் நிறுத்தப்படும் என்றும் இராணுவ முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையிடாது எனவும் அறிவிக்க வேண்டும். அறிவிப்பது மட்டுமல்லாது அதனைச் செயற்படுத்தவும் வேன்டும்.
 
இரண்டாவதாகச் சிறையில் இருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிப்பதாக அறிவித்து அதனையும் உடன் செயற்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதனால் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினகளைத் தீர்ப்பதில் உண்மையான அக்கறை கொண்டுள்ளார் என்பதை உணர்த்தலாம். ஈழத் தமிழ் மக்கள் அற்ப சலுகைகளிற்கு விலை போவார்கள் என யாராவது தவறாக எடை போட்டால் அது மிகவும் பிழையான முடிவாகும்.
 
மூன்றாவதாக போர் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி இன்னும் உள்ளூரிலேயே அகதி வாழ்க்கை வாழ்ந்து கொன்டிருக்கும் அனைத்துத் தமிழ் மக்களையும் அவர்களது சொந்த இடத்திலேயே உடன் மீளக் குடியமர்த்தக் கட்டளை இடவேண்டும். இவ்வாறு செய்வது அனைத்துலக ரீதியில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் இலங்கை அரசுக்கிருக்கும் அக்கறை பற்றி அதன் மீது இருக்கும் சந்தேகத்தைக் குறைக்கும் எனவும் நம்பலாம். மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே இது உங்களிற்குச் சமர்ப்பணம் என்று கூறியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.