Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீய காரியங்களின் பாவங்களிலிருந்து தப்பிக்க முடியாதென்பதை உணர்த்தும் சூரசம்ஹாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று சூரன் போர்

 

ஹீருமம் ஒன்றே நிலையானது. நாம் செய்கின்ற நல்வினை தீவினைகளுக்கு ஏற்பவே சகல காரண காரியங்களும் இடம்பெறுவதுடன் தீய செயல்களை செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதுடன் இதனால் ஏற்படுகின்ற துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை மானிடர்களுக்கு உணர்த்துவதே சூரசம்ஹாரம் ஆகும்.

f1410291.jpgஉலகில் அதர்மம் தலைதூக்கினால் தருமம் தலைசாய்க்கும் ஆனால் அழியாது. தருமம் நாணல் புல்போல் வளைந்து கொடுத்து வீறுகொண்டெழும். தேவர்கள் கை ஓங்கினால் அசுரர்களுக்கு ஆபத்து. அசுரர்கள் கை ஓங்கினால் தேவர்களுக்குத் திண்டாட்டம். ஒரு முறை தேவர்கள் அசுரர்களை வென்று அவர்களை கொடுமைப்படுத்தினர். இதனால் அசுரர்கள் தங்கள் குலப் பெருமைகளை இழந்து தவித்தனர்.

இதனால் அசுர குலத் தலைவன் அசுரேந்திரன் மகள் மாயை குலகுருவாகிய சுக்கிராச்சாரியாரை அணுகி ஆலோசனை கேட்டார். இதற்கு அவர் காசிய முனிவரை திருமணம் செய்து புத்திரரர்களை பெற்று இழந்த அசுர குலப் பெருமைகளை மீட்டெடு என கூறினார்.

சுக்கிராச்சாரியாரின் கோரிக்கை ஏற்ப மாயை காசிய முனிவரை மணந்து சூரன், சிங்கன், தாரகன் என்னும் மூன்று ஆண் மகவுகளையும் அசுமுகி என்னும் பெண் குழந்தையையும் பெற்றெடுத்தாள். பிள்ளைகளுக்கு காசிய முனிவர் தருமத்தைப் போதித்தார். ஆனால் மாயை தடுத்து வேறு மார்க்கத்தில் புகுத்தி அசுரகுலப் பெருமையினை அடைய வழிகாட்டினாள்.

தாயான மாயை சூரனை யாகஞ்செய்ய அனுப்பினாள். பத்தாயிரம் ஆண்டுகள் சிவனை நோக்கி கடுந் தவம் புரிந்தான். சிவபெருமான் வரம் கிட்டவில்லை.

சூரன் ஆகாயத்தை அடைந்தான். அங்கிருந்து தன் உடலிலிருந்து அரிந்த தசைகளையும். குருதியையும் யாக குண்டத்தில் இட்டான். அப்பொழுதும் சிவ தரிசனம் கிட்டவில்லை. கவலையடைந்த சூரன் ஓம குண்டத்தில் நடப்பட்டிருந்த வச்சிர தம்பத்தில் பாய்ந்து தன்னை அழித்துக் கொண்டான். சிவபெருமான் காட்சி கொடுத்தார். சூரன் உயிர்பெற்று எழுந்தான். சிவபெருமான் சூரபத்மனுக்கு ஆயிரத்து எட்டு அண்டங்களையும் வழங்கி நூற்றெட்டு யுககாலம் அரசாட்சி செய்ய அருள் வழங்கியதுடன் சகல அண்டங்களுக்கும் வாயு வேகத்தில் சென்று வரக்கூடிய இந்திர மாஞாலத் தேரையும் சூரபத்மனுக்கு வழங்கி அருளினார்.

இதன் பின் சூரன் வீரமகேந்திரன் என்னும் நகரை உருவாக்கி அரசாண்டு தேவர்களை சிறைப்பிடித்தான். தேவலோகம் அசுரர்கள் வசமானது. இந்திரனும் இந்திராணியும் மறைந்து வாழ்ந்தனர்.

தேவர்கள் சிவனிடம் சென்று வணங்கினார்கள். பிரதமையில் சிவபெருமானது நெற்றியிலிருந்து தெறித்த பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்களினால் வளர்க்கப்பட்டு அதனை உமாதேவியார் எடுக்க ஆறு திருமுகமும் பன்னிரண்டு திருக்கையுமுடைய ஒருருவாய் எழுந்தருளிய நாள் இந்த கந்தசஷ்டி நாளாகும். உலகத்தின் முழுமுதற் கடவுளாகிய பரமசிவன் உலகத்தாரை உய்விப்பதற்கு கந்தப் பெருமானை தந்தருளினார்.

சிவபெருமான் பதினொரு உருத்திரர்களையும் அழைத்து அவர்களைப் பதினொரு படைகளாக்கி அவற்றை முருகப் பெருமானிடம் வழங்கியதுடன் வேலாயுதத்தையும் முருகனிடம் கொடுத்தார்.

“சூரனை அசுணர் குலத்தோடு அழித்து இந்திரனுக்கு விண்ணரசைக் கொடுத்து வேதநெறியை நிறுவ செல்கபோருக்கு என்றார் தந்தை. அசுரர்களை அழித்து தேவர்கள் குறை நீக்கி உலக ஒழுங்கினை நிலைநாட்டி வருக என உமையாள் ஆசி வழங்கினாள்.

முருகப் பெருமான் திருச்செந்தூருக்குச் சென்றார். வீரபாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்பி தேவர்களை விடுவிக்குமாறும் யுத்தம் தேவையற்றது எனவும் கூறினார். ஆனால் சூரன் தூது சென்ற வீரபாகு தேவரை அவமதித்து அனுப்பி வைத்தான். போர் தொடங்குவத்கு முன்னர் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்று பிரச்சினைக்குத் தீர்வுகாணுதல் என்பது கந்த புராணத்தின் மூலமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

யுத்தம் ஆரம்பமானது. சூரனின் தம்பிமார்கள் பிள்ளைகளான பானுகோபன் அக்கினி முகாசுரன் முதலியோர் உட்பட படைகளும் அழிந்தன. சூரன் தனித்து நின்று போரிட்டான். முருகப் பெருமான் சூரனிடம் நீ அளவு கடந்த பல மாய வடிவங்களையெல்லாம் எடுத்தாய் என் அம்புகளால் உன் மாயை உருவங்கள் அத்தனையும் அழிந்துவிட்டன. எமது திருப்பெருவடிவத்தை இப்போது காண்பாயாக எனக் கூறி முருகப் பெருமான் தனது திருப்பெரு வடிவத்தைக் காண்பித்தார்.

இந் நிலையில் முருகப் பெருமா னின் திருப்பெருவடிவத்தை விலக்கி மயில் மீதிருந்த திருக்கோலத்தோடு சூரன் முன் தோன்றினார். அப்பொழுதும் அவனது மாயை அடங்கவில்லை. நடுக் கடலில் சூரன் மாமரம் வடிவில் நின்றான். வேற்படை அங்கு சென்று மாமரத்தை வெட்டி வீழ்த்தியது.

சூரன் தனது சொந்த வடியில் நின்று போர் செய்தான். முருகனின் வேல் சூரனின் மார்பினைப் பிளந்து இரு கூறாக்கியது. சூரன் சேவலும் மயிலுமாக மாறினான். மயில் முருகனின் வாகனமாகவும் சேவல்கொடி யாகவும் விளங்கும் பேற்றினை பெற்றான். குற்றமிழைத்தவனை தண்டிப்பதை விடுத்து அவனை நல்வழிப்படுத்துவதே முருகப்பெருமானின் நோக்கமாக இருந்துள்ளது.

குற்றங்கள் இழைப்பது மனிதனிடம் காணப்படுகின்ற விலங்கு இயல்பு குற்றங்களை மன்னித்து குற்றமிழை த்தவனைத் திருத்தி வாழச் செய்வது மனிதனிடமுள்ள தெய்வீக இயல்பு கந்தபுராண கலாசாரம் உணர்த்தும் வாழ்க்கை விழுமியம் இதுவாகும்.

ஆர். நடராஜன்

(பனங்காடு தினகரன் நிருபர்)

 

http://thinakaran.lk/2014/10/29/?fn=f1410291

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.