Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பை கண்டித்து சென்னையில் இலங்கை துணை தூதரகம் முற்றுகை.

Featured Replies

சென்னை, அக்.31

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் இன்று காலை முற்றுகையிட்டனர்.

போதை பொருள் கடத்தியதாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 5 பேரையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள இலங்கை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மீது தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள இலங்கை துணை தூதரகம், எழும்பூரில் உள்ள புத்த மகா போதி சொசைட்டி, இலங்கை வங்கி, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை ஏர்லைன்ஸ் ஆகியவற்றிற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் நேற்று இரவு அறிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. திட்டமிட்டபடி 150க்கும் மேற்பட் தமிழர் அமைப்புகள் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். அப்போது, தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

10506945_339858872863311_428353346982471

10714166_339858886196643_428637033633899

https://m.facebook.com/story.php?story_fbid=339860169529848&id=152515898264277

Edited by துளசி

  • தொடங்கியவர்

Today's protest siege of Srilankan Embassy, opposing death penalty verdict by Srilankan govt against Tamil fishermen.

மீனவர் தூக்கு தண்டனைக்கு எதிரான இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்.

அநீதியைக் கண்டித்து, இன்று (31.10.2014) வெள்ளிக்கிழமை - காலை 10 மணிக்கு, பல்வேறு கட்சி - இயக்கங்கள் உறுப்பு வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் சிங்களத் தூரகத்தை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தை தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ரூட்டி திரு. தி. வேல்முருகன் அவர்கள் ஒங்கிணைத்தார்.

புரட்சி பாரதம் கட்சி தலைவர் திரு. ஜெகன்மூர்த்தி, தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகு, தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் தமிழினி கி.வீரலட்சுமி, தந்தைப் பெரியார் திராவிடர் கழக மண்டல அமைப்பாளர் தோழர் கரு.அண்ணாமலை, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி, இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், தோழர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கைதாயினர்.

கொடுங்கோலன் இராசபட்சேயின் உருவபொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது.

”விடுதலை செய், விடுதலை செய் அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுதலை செய்”, ”மோடி அரசே, இலங்கையுடன் கூடிக் குலவாதே” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன் உள்ளிட்ட திரளான தமிழ்த் தேசியப் பேரியக்க தோழர்கள் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.

கைதாகியுள்ள தோழர்கள் தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலகம்,

தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

10342912_10205149867969841_6959778998578

10616249_10205149867809837_2181289057342

7113_10205149867769836_83479512402508994

67317_10205149868009842_2584406310410228

(Facebook)

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.