Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலையில் சாப்­பி­டாத குழந்­தை­களை தாக்­கு­கி­றது நீரி­ழிவு

Featured Replies

காலை உணவை சாப்­பி­டாத குழந்­தை­க­ளுக்கு நீர­ழிவு நோய் வரும் அபாயம் அதி­க­ரிப்­ப­தாக மருத்­துவ ஆராய்ச்­சி­யா­ளர்கள் தெரி­விக்­கி­றார்கள். இங்­கி­லாந்தில் உள்ள சிறுவர் பள்­ளி­களில் 10 வய­துக்கு உள்­ளிட்ட குழந்­தை­களை ஆய்வு செய்­ததில் காலை உணவை தவிர்க்கும் குழந்­தை­க­ளுக்கு இன்­சுலின் சுரப்பின் அளவு மிக குறைந்து இருக்­கி­றது. இதன் கார­ண­மாக இரண்டாம் வகை நீர­ழிவு வரு­கி­றதாம்.

Untitled-2dddddddddddddddd_0.jpg

குழந்­தை­களை அதிகம் தாக்­கு­வது முதல் வகை நீரி­ழிவு நோய். ஆனால், காலை உணவை தவற விடு­வதன் மூலம் இரண்டாம் வகை நீரி­ழிவு வரு­கி­றது. சிறு­வ­ய­தி­லேயே இந்நோய் வரு­வதை தடுக்க காலையில் அவ­சியம் உணவு எடுத்துக் கொள்­ள­வேண்டும் என இங்­கி­லாந்தின் நல­வாழ்­வியல் ஆராய்ச்சி மையம் வலி­யு­றுத்­து­கி­றது. காலையில் அதிக நார்ச்­சத்து உள்ள இயற்கை உண­வு­களை எடுத்துக் கொள்­வதன் மூலம் குழந்­தை­க­ளுக்கு வரும் நீரி­ழிவு நோயும், பரு­மனும் தவிர்க்­கப்­ப­டு­கி­றது. முறை­யாக காலை உணவு எடுத்­துக்­கொள்ளும் குழந்­தை­க­ளுக்கு, நொறுக்­குத்­தீ­னிகள் சாப்­பிடும் பழக்கம் இயல்­பாக குறைந்து, பரு­ம­னாதல் தவிர்க்­கப்­ப­டு­கி­றது. கொழுப்பு நிறைந்த உண­வு­க­ளையும், உட­னடி உணவு வகை­க­ளையும் குழந்­தைகள் முழு­மை­யாக தவிர்க்க வேண்டும்.

பெற்­றோர்கள் செய்­ய­வேண்­டி­யது

சிறு­வ­யதில் நீரி­ழிவு நோய் தாக்கும் அபா­யத்தைத் தவிர்க்க, குழந்­தை­களின் வாழ்க்கை முறை­யையும் உண­வு­மு­றை­க­ளையும் மருத்­துவ ஆலோ­ச­னைப்­படி மாற்­றி­ய­மைக்க வேண்டும். அதற்­கான சிகிச்­சை­யையும் எடுத்­துக்­கொள்ள வேண்டும். அக்­கறை காட்­டா­விட்டால் பார்வை போதல், சிறு­நீ­ரகச் செய­லி­ழப்பு, இதயம் சம்­பந்­த­மான நோய்கள் வரு­வ­தற்கும் சாத­க­மா­கி­விடும். பெற்றோர் குழந்­தை­களின் காலை உணவில் அதிக கவனம் எடுத்­துக்­கொள்ள வேண்டும். ஒழுங்­காக சாப்­பி­டு­கி­றார்­களா என்­பதை கண்­கா­ணிக்க வேண்டும். நொறுக்குத்தீனிகள் கொடுப்­ப­தையும் தவிர்க்­க­வேண்டும். தகுந்த கால இடை­வெ­ளியில் குழந்­தை­களின் இரத்த சர்க்­க­ரையின் அளவைப் பரி­சோ­தித்து கட்­டுக்குள் வைத்­தி­ருப்­பது இன்னும் நல்லது.

 

http://virakesari.lk/articles/2014/11/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%BF%C2%AD%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%88%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AF%81%C2%AD%E0%AE%95%E0%AE%BF%C2%AD%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%C2%AD%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81

  • தொடங்கியவர்
காலை உணவை தவிர்க்கக் கூடாது!
 
Tamil_News_large_111259020141111224105.j
 
அப்பல்லோ மருத்துவமனையின் உணவுக்கலை வல்லுனர் பிரியங்கா: காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்து. காலை உணவு சாப்பிடாவிட்டால், மூளை சுறுசுறுப்பை இழக்கிறது. இதனால், நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள். காலையில் பணிகள் செய்ய துவங்குவதால், உடலுக்கு புரதமும், நார்ச்சத்தும் அவசியம். எனவே, கொழுப்பு குறைந்த முட்டை, பீன்ஸ், பால், முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும், காலையில் சாப்பிட ஏற்றது.
 
அந்த வகையில், காலை எழுந்தவுடன் பால் குடிப்பது, மிகவும் நல்லது. உடல் வளர்ச்சிக்கு, புரதச்சத்து மிக அவசியம். எனவே, காலை உணவில், புரதச் சத்து அதிகம் உள்ள பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இட்லிக்கு, சட்னியுடன் சாம்பாரும் சேர்க்கப்பட வேண்டும். சாம்பாரில் புரதச் சத்து கிடைக்கும். சட்னியை பொறுத்தவரை, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, தக்காளி சட்னிகளில், வைட்டமின் சத்து உள்ளது.
 
சாம்பாரில் பருப்பு இருப்பதோடு, காய்கறிகளும் சேர்க்கப்பட்டால், இன்னும் நல்லது. இட்லி, பொங்கல், தோசை போன்றவற்றில், ஏற்கனவே பருப்பு சேர்க்கப்பட்டாலும் சாம்பாரும் அவசியம். சப்பாத்திக்கு, தால் சேர்த்துக் கொள்ளலாம். வெறும் ரொட்டி மட்டும் சாப்பிடாமல், வெஜ் சான்ட்விச்சாக சாப்பிடலாம்.
 
காலை, 11:00 மணிக்கு, மோர், இளநீர், சூப் அல்லது பழச்சாறு என, ஏதாவது ஒன்றை அருந்தலாம். ஆனால், காபி, டீ கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. தினமும் ஏதாவது ஒரு வேளை, அந்தந்த சீசனுக்கு ஏற்ற பழங்களை, சிறிது அளவாவது சாப்பிடலாம். நோய் ஏதும் இல்லாதவர்கள், தினமும் வாழைப்பழம் சாப்பிடலாம். ஏனெனில், நார்ச்சத்து, தாதுச்சத்து, வைட்டமின்கள் என, நோய் எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கிய இயற்கை, 'டானிக்' காய்கனிகள். கேழ்வரகு கூழ், கோதுமை கஞ்சி, அரிசிக் கஞ்சி மற்றும் இட்லி ஆகியவற்றை, காலை உணவாகசாப்பிடுவது சிறந்தது.
 
வெள்ளை பூண்டு, இதய நோய் வராமல் தடுக்கவும், வாழைத்தண்டு, சிறுநீரக நோய் வராமல் தடுக்கவும், முருங்கை கீரை, உயர் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தவும், வெந்தயம், ஓட்ஸ் போன்றவை, ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகின்றன.
காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு, தொப்பை, உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, சர்க்கரை நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். காலை முதல், இரவு வரை நன்கு வேலை செய்ய, உடலுக்கு சக்தி தேவை. எனவே, ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை உண்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் கூடாது.
 
உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும், தேவையான விகிதத்தில் கிடைக்கும் வகையில், நம் அன்றாட சாப்பாடு அமைய வேண்டும். அப்போது தான், பூரணமான உடல்நலம் அமையும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.