Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்போதும் 'ஆக்டிவ்'வாக இருங்க; மறதி நெருங்காது

Featured Replies

E_1415493976.jpeg

 

'என் உறவினர் மறதி நோயால் பாதிக்கப்பட்டு 
உள்ளார். இந்த பாதிப்பு ஏன் வருகிறது; தவிர்க்க வேண்டிய வழிமுறைகள் என்ன?' என, ஆனைமலையைச் சேர்ந்த, வசந்தராஜ்; சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த ராஜசேகர் என, இரண்டு பேர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
 
இந்த கேள்வியை, சென்னை அரசு பொது மருத்துவமனை நரம்பியல் துறைத் தலைவர் பானுவிடம் ஒப்படைத் தோம். 'ஆக்டிவ் ஆக இருங்கள்; போதும்' என்கிறார் அவர். என்னதான் சொல்றார்... அவர் சொல்றதை படிங்க...
 
மறதி நோய் என்பது, பொதுவாக வயதான காலத்தில் ஏற்படும் நோய். 65 வயதுக்கு மேல் வரலாம்; 90 வயதுக்கு மேல், இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதை, 
'அல்சீமர்' என்கிறோம். வயதாகிவிட்டது என, பலர் வீடுகளில் முடங்கி விடுகின்றனர். இது, மறதி நோயை அதிகரிக்கும். அதனால், வீட்டிற்குள் முடங்கி விட வேண்டாம்.
 
வயதானாலும், புத்தகங்கள் படித்தல், மற்றவர்களுடன் கலந்து பேசுதல், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வருதல், அன்றாட நிகழ்வுகள் குறித்து விவாதித்தல்; பூங்கா, கடைகளுக்கு சென்று வருதல்; இன்னும் சொல்வது என்றால், நடைபயிற்சி மேற்கொள்தல் என, எப்போதும், 'ஆக்டிவ்' ஆக இருந்தால், வயதானாலும், மறதி நோய் பாதிப்பு வருவதை தள்ளிப் போடலாம். வருவதை முற்றிலும் தடுக்க முடியாது; 
 
வயதான எல்லாருக்கும் வரும் என்றும் கூற முடியாது.
 
இதுதவிர, தைராய்டு பாதிப்பு, வைட்டமின் பி - 12 பாதிப்பு, மூளையில் கட்டி ஏற்படுதல், மூளையில் ரத்த ஓட்டம் தடைபடுதல், மன அழுத்தம் போன்ற காரணங்களாலும், மறதி நோய் வரலாம். இதுபோன்ற பாதிப்பு உள்ளோர், திரும்பி வர வழி தெரியாமல் தவிப்பர். 
 
சட்டையில் பட்டன் சரியாக போடாமல் வருவர்; கையில் கொண்டு வந்த பொருட்களை ஆங்காங்கே விட்டு விட்டு சென்று விடுவர். எங்கு விட்டோம் என, மறந்துவிடுவர்.
 
இரவுநேரங்களில் குழப்பம், உறவுகளை மறந்து போதல் போன்ற பாதிப்புகள், பொதுவாக அவர்களின் வழக்கமான நடவடிக்கைகளில் மாற்ற இருப்பது போன்றவை இதன் அறிகுறிகள்.
 
மறதி உள்ளது, சம்பந்தப்பட்டோருக்கு தெரிந்தும் இருக்கலாம்; தெரியாமலும் இருக்கலாம். ஆனால், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெளிவாக தெரியும். 
அவர்களிடம் நிலைமையை தெரிவித்து, டாக்டரிடம் அழைத்துச் செல்வது நல்லது. ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் பாதிப்பை தள்ளிப் போடலாம்.
 
இப்படி நீண்ட விளக்கம் அளித்தார் பானு. 
 
வயதாகிவிட்டது என, இனி வீடுகளில் 
முடங்க மாட்டீங்க தானே...?
 
  • தொடங்கியவர்

எப்பவும் முகத்தை உம்முன்னு வெச்சுக்காதீங்க!

 

எந்த ஒரு கோளாறும், ரொம்ப நாள் நீடிக்கக் கூடாது; அப்படிபோனால் பெரிய சிக்கலுக்கு காரணமாகி விடும். அதேபோல், மனத்தளர்ச்சி (டிப்ரஷன்) பிரச்னையையும் உடனே கவனிக்க வேண்டும்.

 

l டிப்ரஷன் என்றால், சோர்வு, வருத்தம், வேதனை என்று கூறலாம். மனதளவில் எந்த விதமான உணர்ச்சிகளும், இவற்றுக்கு வழி வகுத்தால் அது தான் டிப்ரஷன். சில சூழ்நிலைகள், சம்பவங்களால் டிப்ரஷன் வரலாம்.
 
l எப்போதும் முகத்தை உம்மென்று வைத்திருந்தால், மனத்தளர்வு நோய் ஏற்படும். உம்மனாமூஞ்சியாக இருக்காமல், சிரித்த முகமாக இருக்க வேண்டும். தனக்கு நேர்ந்த நிலைமையால், எப்போதும் யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் இருப்பது, சிரிக்கக்கூட யோசிப்பது, எந்த ஒரு விஷயத்திலும் மனம் ஒப்பாமை மனத் தளர்ச்சியை ஏற்படுத்தும்.
 
l இதனால், முகத்தில் புன்முறுவல் வராது; அப்படியே வந்தாலும், அதை அடக்கிக்
கொண்டு விடுவர். அர்த்தமில்லாத 
கோபம் வரும்; தேவையில்லாத 
குழப்பம் வரும்; அதுவே டிப்ரஷனில் விட்டு விடும்; அதன்பின் கேட்கவே வேண்டாம்... ரத்த அழுத்தம்; சர்க்கரை நோய், கதவை தட்ட ஆரம்பித்து விடும்.
 
l எல்லா நோய்களுக்கும் இருப்பது போல, இதற்கும் பரம்பரை பாதிப்பும் ஒரு காரணம். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் அடுத்த காரணம்.
 
l மூளையில் உள்ள ஒருவித ரசாயன மாற்றம் தான் டிப்ரஷனை அதிகப்படுத்துகிறது.
 
l ஆண்களை விட, பெண்களிடம் தான் அதிகமாக இந்த பாதிப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
l பரம்பரையில் யாருக்காவது இருந்தால், வாரிசு வழியில் அது தொடர வாய்ப்பு உண்டு. மூன்று தலைமுறைக்கு முன் இப்படி ஒருவருக்கு இருந்தால், இந்த தலைமுறையில் ஒருவருக்கு நேரலாம்.
 
l பெற்றோர், உறவினர் உட்பட நெருங்கியவர்கள் மரணம், டிப்ரஷனுக்கு காரணமாகிறது.
 
l சில மருந்துகளின் பக்க விளைவுகளாலும் கூட இந்த பாதிப்பு வரும்.
 
l கோபம், ஆத்திரம், தோல்வி மனப்பான்மை போன்றவையும் டிப்ரஷனில் விட்டு விடும்.
 
l துாக்கம் வராது; சோர்வு ஏற்படும்; அடிக்கடி தலைவலி வரும். சிறிய விஷயங்களுக்கு கூட அழுகை வரும்; எப்போதும் ஒரு வித எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். 
 
பசி அறவே இருக்காது; சாப்பிட பிடிக்காது. படிப்பிலும், வேலையிலும் ஈடுபாடு காட்ட முடியாது; உடலில் ஒருவித வலி இருந்துகொண்டே இருக்கும். டாக்டர் பரிசோதித்து, டிப்ரஷனுக்கு எது முக்கிய காரணமாக 
உள்ளது என்பதை கண்டுபிடிப்பார். 
 
'ஆன்டி டிப்ரஷன்' மாத்திரைகள் உள்ளன; அவற்றை சில நாள் சாப்பிட்டு வந்தால், டிப்ரஷன் அளவு கட்டுப்படும். இரண்டு வாரத்தில் குணம் தெரியும்; முதலில், நல்ல துாக்கம் வரும்; மன திடத்தை ஏற்படுத்த உடல், மனது பயிற்சிகள் உள்ளன. 
 
தாழ்வு மனப்பான்மை, கோபம் எல்லாம் பறந்து விடும். கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.