Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எள் இல்லாமல் எதுவும் இல்லை...

Featured Replies

Tamil_News_large_1118276.jpg

 

உலகில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே அவனோடு தொன்று தொட்டு உறவாடிக்கொண்டிருக்கும் மிகப்பழமையான எண்ணெய் வித்து எள் மட்டுமே. நம் அன்றாட வாழ்வில் நம்மை அறியாமல், ஜனனம் முதல் மரணம் வரை அது பின்னிப்பிணைந்து உள்ளது.
 
குணங்கள் :
 
கருப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, காவி, சாம்பல் மற்றும் பொன்நிறம் என எள் பல வகைகளில் உள்ளது. உஷ்ணகுணமுடையது. தோல், முடி, உடலுக்கு நல்ல உறுதி, மென்மை கொடுக்கக் கூடியது. நினைவாற்றலை பெருக்கி, ஜீரண சக்தியை அதிகரிக்கக்கூடியது. உடல் மெலிய எள் கலந்த மருந்து தயாரித்து வழங்குகின்றனர். உடல் பருமன் அதிகரிக்கவும், எள் கலந்தே மருந்து தயாரித்து தருகின்றனர். எள் இளைக்கவும், பருக்கவும் வைக்கும் திறன் கொண்டது.
 
என்னென்ன சத்துக்கள் :
 
அதிகளவு தாமிரச்சத்து, மக்னீசியம், சுண்ணாம்புசத்து, இரும்பு, ஜிங்க், வைட்டமின் பி1, மற்றும் அதிக நார்ச்சத்து உள்ள உணவு. இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்திற்கு உறுதி அளிக்க கூடியது. தவிர அரை கப் எள்ளானது ஒரு கப்பில் உள்ள கால்சியத்திற்கு சமமானது.
 
ஆன்மிகத்தில் எள் :
 
காலம் காலமாக நாம் செய்து வரும் பித்ரு பூஜையில் படைக்கும் எள்பிண்டம், எள் அன்னபிண்டம் சிறப்பு குணம் உடையது. இப்பிண்டத்தில் வேக வைத்த அரிசி சாதத்தில் வேக வைக்காத எள் கலந்து பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் படைத்து ஆற்றில் விடுகிறோம். இவ்வாறு செய்யும் போது, மற்ற உயிர்களுக்கு உணவாக பயன்படுவது மட்டுமின்றி, நீரில் அடித்துச் செல்லப்பட்டு வெவ்வேறு இடங்களில் முளைக்கிறது.
 
இதன் மூலம் நம் முன்னோர் மீண்டும் உயிர்பிக்கின்றனர் என்ற நம்பிக்கை நம் வழக்கத்தில் உள்ளது.எல்லாவித தெய்வ வழிபாட்டிலும் குறிப்பாக சனிபகவானுக்கும் எள் தீபம், நல்லெண்ணெய் அபிஷேகம், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி காலம் காலமாக வழிபாடு செய்து கொண்டிருக்கிறோம். இதில் விசேஷம் என்னவென்றால், எள் தீபம் மனஅமைதி உண்டாக்க கூடிய சாத்வீக குணம் கொண்ட கதிர்வீச்சினை அதிகம் வெளியிடுகிறது. இதனால் வழிபடுவோரின் குழப்பங்கள் நீங்கி, உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.
 
காப்பரிசி பிரசாதம் :
 
புதிதாக நாற்று நடும் போதும், காதுகுத்தும் விழாவிலும் காப்பு அரிசி பிரசாதம், (எள் + பச்சரிசி + வெல்லம்) எல்லோருக்கும் வழங்கப்படும். இந்த கலவை உடலுக்கு தேவையான புரதம், கால்சியம், இரும்புசத்தை வழங்கி அதிக நேரம் வேலை செய்யும் களைப்பை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தரும்.
 
பழைய காலத்தில் சுயம்வரம் நிகழ்ச்சியில் மாப்பிள்ளையின் ஆரோக்கியத்தை பரிசோதிக்க, சிறிதளவு எள் கொடுத்து உள்ளங்கையில் கசக்கி எண்ணெய் எடுக்க வேண்டும் என்பார்கள். அவ்வாறு எண்ணெய் எடுக்கும் மணமகனுக்கே பெண் தருவார்கள்.ஆயுர்வேதம், சித்தமருத்துவத்தில் எள்ளானது உணவு தானியங்களின் வகைகளுக்கு கீழ் விளக்கப்பட்டுள்ளது. எள்ளில் இருந்து உருவாகும் நல்லெண்ணெய் இச்சிகிச்சை முறைகளின் ஆதாரமாக உள்ளது.
 
எள்ளில் இருந்து கிடைக்கும் மருந்துகள், எலும்பு முறிவு, வலி மற்றும் மாதவிடாய் தொல்லைகளுக்கு தீர்வாகிறது.உடல், தலை, காது, மூக்கு, பாதங்களில் எண்ணெய் விட்டு தேய்த்து குளிக்க வேண்டும் என ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. அவ்வாறு செய்யும் போது நோய் நொடிகள் நீங்கி நெடுங்காலம் ஆரோக்கியமாக வாழலாம். நல்லெண்ணெய்யை இளஞ்சூடாக்கி தலைக்கும், உடலுக்கும் மிகவும் அழுத்தம் இன்றி 5 முதல் 10 நிமிடங்கள் தேய்த்து சிறிது நேரம் கழித்து இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வேண்டும்.இதனால் உடல் அசதி நீங்கும். முதிர்ச்சி தடுக்கப்படும். கண்களுக்கு தெளிவு பிறக்கும். உடலுக்கு புஷ்டி கிடைக்கும். ஆயுளை வளர்க்கும். தூக்கம் உண்டாகும். சருமத்தை மென்மையாக்கும்.
 
காதுகளுக்கு எண்ணெய் :
 
இளஞ்சூடான நல்லெண்ணெய்யை குளிப்பதற்கு 30 நிமிடம் முன்பு ஒரு புறமாக சாய்ந்து படுத்துக் கொண்டு வலது பக்கம் காது நிரம்பும் வரை விட்டு (6 சொட்டு வரை) செவியின் அடிப்பகுதியை தடவிக்கொண்டே இருக்க வேண்டும். பின் எண்ணெய்யை நன்கு துடைத்து விட்டு இடது செவியிலும் இதேபோல் செய்ய வேண்டும்.
 
பயன்கள் :
 
தாடை, கழுத்து, தலை, காது இவைகளில் நோய் வராமல் தடுத்து, ஐம்புலன்களை மேம்படுத்தும். அதிக படபடப்பு, தலைச்சுற்று, காதில் இரைச்சல், ஆகியவற்றை குறைக்கும். மனதை சாந்தப்படுத்தி நல்ல தூக்கத்தை கொடுக்கும்.இரவு தூக்கத்திற்கு முன், கால்களை சுத்தமான வெந்நீரில் கழுவி இளஞ்சூடான நல்லெண்ணெய்யை மென்மையாக உள்ளங்கால் இரண்டிலும் 10 நிமிடம் தேய்த்து விட்டு படுக்கைக்கு சென்றால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். கால் மறத்துப்போதல், வெடிப்பு, சுருக்கம் நீங்கும்.
 
ஆயில்புல்லிங் :
 
சமீபத்தில் இந்த முறை பிரபலம் ஆனாலும், ஆயுர்வேதத்தில் இது விளக்கப்பட்டுள்ளது. மருந்து காய்ச்சிய எண்ணெய்யை வாயில் வைத்து மூடி கொப்பளிக்க வேண்டும். எச்சில்சுரந்து வாய் நிரம்பும் வரை கண், மூக்கில் இருந்து நீர் சொரியும் வரை இப்படி கொப்பளிக்க வேண்டும். இதன் மூலம் கழுத்துமேல் உண்டாகும் நோய்கள், தலைவலி, கழுத்துவலி, வாய்ப்புண், கண்தொடர்பான நோய்கள் தீரும்.உமிழ்நீர் அதிகம் சுரக்கும். தொண்டை நோய், நாவறட்சி நீங்கும். சோம்பல், ருசியின்மை, சளிதொந்தரவு நீங்கும். எள்ளினை பசைபோல் அரைத்து வென்னீர் கலந்து வாய் கொப்பளிக்கும் போது பல்கூச்சம், பல் அசைவு, வாய்ப்புண் குணமாகும்.
 
அன்றாட உணவில் எள்:
 
எள்ளினை நேரடியாகவே, எண்ணெய் மூலமோ தினமும் உணவில் பயன்படுத்துகிறோம். எள் துவையல், எள் பொடி, சீடை, முறுக்கு, எள்சட்டினி, கொழுக்கட்டை பயன்படுத்துகிறோம். எள் உணவில் கால்சியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் உடலில் உள்ள எலும்புகளுக்கு வலு கொடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. ரத்தசோகையை மாற்றுகிறது.
 
எள்பொடி :
 
எள், கடலை பருப்பு, வத்தல், கறிவேப்பிலை, பெருங்காயம், தோலுடன் பூண்டு இவற்றை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்து சாப்பிட்டால் சுவையுடன் ஆரோக்கியம் உண்டாகும்.
 
எள்துவையல் :
 
எள், புளி, வத்தல், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை வறுத்து பசைபோல் அரைத்து துவையலாக பயன்படுத்தலாம். பச்சரிசி, நிலக்கடலை, எள் வறுத்து, கருப்பட்டி கலந்து உருண்டையாக உருட்டி சாப்பிட்டால் எலும்பு சம்பந்தமான நோய்கள் நீங்கும்.இவ்வளவு பாரம்பரிய பெருமை கொண்டது எள். இதை ஒதுக்காமல் தினசரி வாழ்வில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.
---டாக்டர் எம்.ரமேஷ்குமார், 
 
ஆயுர்வேத மருத்துவர்,
தேனி.-- -99942- 22032
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.