Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் பற்றிய நினைவு கொள்ளல் கலாநிதி. சி. ஜெயசங்கர்

Featured Replies

வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் பற்றிய நினைவு கொள்ளல் கலாநிதி. சி. ஜெயசங்கர் -
 
Varnam%20Master%201_CI.jpg
வர்ணகுலசிங்கம் மாஸ்ரர்என்றபெயர் மிக இளவயதிலிருந்தேஎனக்குப் பரிச்சயமானது. எனது சகோதரிகள் இருவர் இசைக் கலைஞர்களாகவும், எனதுதந்தையார் இசைஆர்வலராகவும் இருந்தமை இந்தவாய்ப்பைத் தந்திருக்கின்றது.
 
ந. சண்முகரத்தினம் மாஸ்ரர், திலகநாயகம் போல் மாஸ்ரர், பொன் புஸ்பரத்தினம் அவர்கள், ச. சண்முகராகவன் அவர்கள் எனதலை சிறந்த  இசைக் கலைஞர்கள் வகுப்பெடுப்பதும்;, இசைச் கச்சேரிகளுக்கென பயிற்சிகள் நடப்பதும் எனது வீட்டுச் சூழல்.
 
மிருதங்கவித்துவான் இ. பாக்கியநாதன் அவர்களிடம் எனதுசகோதரன் மிருதங்கம் பழகியமை, சர்வேசரசர்மா அவர்களது வீட்டில் வருடாவருடம் நிகழும் நவராத்திரி இசைக் கச்சேரிகள், இசைக் கலைஞர்களின் கலந்துரையாடல்கள் என இந்தஅனுபவம்; விரியும்.
 
இவை காரணமாகபல்வேறு இசைக் கலைஞர்கள் பற்றிய பதிவுகள் என்னில் ஏற்பட்டிருக்கிறது. இந்தவகையில் வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் பற்றியபதிவு முக்கியமானது. இசைக்கலையின் நுண்மான் நுழைபுலம் அறிந்த வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் அவர்கள் நிகழும் இசைக் கச்சேரிகள் பற்றிய குற்றங் குறைகளை நெற்றிக்கு நேராகவே சொல்லிவிடும் இயல்பு கொண்டிருக்கிறார். இதன் காரணமாக அவர் பற்றிய மனக்கசப்பும் ஏனைய கலைஞர்கள் மத்தியில் இருந்ததைஅவர்கள் உரையாடல்கள் உணர்த்திற்று.
 
இது ஒரு முக்கியமான விடயத்தை உணர்த்திற்று அதாவது 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' இயல்பு கொண்ட கலை மதிப்பீட்டாளர்களின் இருப்பு எந்தவகையில் கவனமும், கற்கையும் நிறைந்தகலைச் சூழலை உருவாக்கும் என்பதாகும்.
 
வர்ண இராமேஸ்வரனும் நானும் நண்பர்களாவதற்கு முன்பு வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் பற்றியமனப் பதிவு இதுவாகத்தான் இருந்தது. வெளிப்படையாக சொல்வதானால் ஒருகுறைகாணும் மனிதனாகவே அந்த மனப்பதிவு இருந்தது.
 
 
வர்ண இராமேஸ்வரன், சு. கோபிதாஸ், க. கண்ணதாசன் ஆகியோருடனான நட்பும், கூடிப்பயிலும் காலங்களும் வர்ணகுலசிங்கம் மாஸ்ரருடன் நேரடித் தொடர்பைஏற்படுத்தியது.
 
 இசை, கூத்து கலை என அவருடனான எனது உரையாடல்கள் குறிப்பாக சாந்தினி சிவனேசன் அவர்களுடன் இணைந்து குற்றாலக்குறவஞ்சி நடன நாடக உருவாக்கத்தின் போது வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் அவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்கள், தலையைக் கெளித்து அதிமெதுவாகச் சைக்கிளை மிதித்து சுரங்களை முணுமுணுத்;துத் திரியும் கண்கண்ட மனிதனின் ஆளுமையை அறியவும் உணரவும் வைத்தது.
 
வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் போன்ற ஆளுமைகள் எவ்வாறு உருவாகினார்கள்? அவர்கள் உருவாகிய களம் அல்லது நிறுவனம் எது? தொடர்ச்சியான தேடலும், பயில்வும், மதிப்பீடுகளை வெளிப்படுத்தும் பண்பாடும் கொண்ட ஆளுமைகளின் கலைமரபின் பின்னனியை விளங்கிக் கொள்வதுமிகவும் அவசியமான இன்றைய தேவையாகி இருக்கிறது.
 
வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் பற்றிய நினைவு கொள்ளல் என்பது மேற்கூறிய விடயம் தொடர்பான என் உள்ளும் வெளியும் நான் நிகழத்தும் உரையாடலை வலுவாக்கும் உந்துதலை தந்திருக்கின்றது.
 
ஏனெனில் அரச நிறுவனங்களாக உருவாக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான கலை நிறுவனங்கள் விருப்பமும் விளக்கமும் அற்றமரபினரின் பெரும் கூடாரமாகவே ஆகியிருக்கிறது. தொழிலுக்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் அலுவலகமாகவே அது இயங்கிவருகிறது.
 
இந்நிலையில் வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் போன்ற தன்னார்வ ஆளுமை உருவாக்க மரபினூடு உருவாகி அரசநிறுவன முறைமையுள் இயங்கிவரும் எனது தலைமுறையினரின் நிலைசவால்கள் நிறைந்தது.
 
பயில்முறைத் திறமும் அறிமுறைத் திறமும் அற்றஅதற்கும் மேலாகவிருப்பமும் தேடலும் அற்றகளச் சூழலே நடைமுறையாகி இருக்கிறது.
 
வாழ்க்கைப் போராட்டத்தின் சவால்களுக்கு முகங் கொடுத்து சாதனையாளர்களாக பரிணமித்த ஒரு கலைமரபு என்பது பெருங்கனவாக சிலருக்கும், இது பற்றி எதுவுமே அறியாத பலருக்கும் உரியதாக நடைமுறையிலுள்ள அரசுமயப்பட்ட கலைமரபு இயங்கிவருகிறது.
 
இங்கு வாழ்க்கைக்கான வரும்படி உண்டு ஆனால் வித்தைக்கான வேண்டுதல் இல்லை.
 
வர்ணகுலசிங்கம் மாஸ்ரரைநினைவு கூருவது என்பது அவர் போன்ற மரபில் அவருக்கு முன்பும் அவரது காலத்திலும் பின்பும் கலைமரபுக்கும் தேசத்துக்கும் பெருமை சேர்த்த ஆளுமைகளை நினைவு கூருவதும் மாண்பு செய்வதும்;;; அவல நிலைக்குள்ளாகிசீரழிந்திருக்கின்ற இன்றைய நிலையான வரும்படி கொண்ட அரசமயக் கலை மரபினை எதிர் கொள்வதும் அவசியத் தேவையாகி இருக்கிறது.
 
கலாநிதி. சி. ஜெயசங்கர்,
நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.