Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி கையில் வாள் விஜய்காந்த்: அதிமுக

Featured Replies

சென்னை: எம்.ஜி.ஆர். ரசிகன் என்று கூறிக் கொள்ளும் விஜயகாந்த், கடந்த கால எம்.ஜி.ஆர். ஆட்சியையும் சேர்த்து குறை கூறி கடந்த சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்தது ஏன் என்று அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை:

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் குண்டர் பலம், பண பலம், அதிகார பலம் ஆகியவற்றையும் தாண்டி, இதுவரை நடந்திராத மோசடித் தேர்தலை திமுக நடத்தி முடித்துள்ள நிலையில், கழகம் தனது நிலையை உறுதிப்படுத்தி 21 சதவீத இடங்களைப் பிடித்துள்ளது.

நம்மை சிறுமைப்படுத்த வேண்டும் என்று கருணாநிதியும், அவரது காவல்துறையின் உளவுப் பிரிவும், அதிமுக, தேமுதிகவை விட பின் தங்கியுள்ளதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி அதனை பத்திரிகைகளிலும் வரச் செய்வதில் முழு மூச்சுடன் ஈடுபட்டு இதன் மூலம் ஒரு அற்ப சந்தோஷத்தை அனுபவித்து வருகின்றனர்.

நேற்று தோன்றிய தேமுதிக முன்னுக்கு வந்து விட்டதாகவும், தனக்னெ தனி வாக்கு வங்கியை உருவாக்கி விட்டதாகவும், முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு கருத்து விதைக்கப்பட்டு வருகிறது. தேமுதிக வெறும் 3 சதவீத இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதை வெற்றியை மதிமுகவும் பெற்றிருக்கிறது என ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் தேமுதிக 100 சதவீத இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது 3 சதவீதம் ஆகும். ஆனால் மதிமுகவோ 17.5 சதவீத இடங்களில் மட்டுமே போட்டியிட்டு 3 சதவீத இடங்களைப் பிடித்துள்ளது. 100 சதவீதம் எங்கே? 17.5 சதவீதம் எங்கே? இந்த வகையில் பார்த்தால் மதிமுக பெற்றுள்ள வெற்றிதான் மகத்தான வெற்றி.

விஜயகாந்த் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில், வாய்ப்பு குன்றியதும், அரசியல் பக்கம் வருவது ஜனநாயகத்தில் நடக்கக் கூடியதுதான். ஆனால் அரசியலுக்கு வந்ததும் தனது கடந்த கால வாழ்வை அப்படியே புறந்தள்ளி விட்டு எல்லோரையும் ஒட்டுமொத்தமாக விமர்சனம் செய்வது சரியல்ல.

விஜயகாந்த் மூத்தவர்களுக்கு மரியாதை தர வேண்டும். பேசும்போது யோசித்துப் பேச வேண்டும். நாவை அடக்கிப் பேச வேண்டும்.

எம்.ஜி.ஆர். ரசிகன், அவர் எனது ஆசான் என்று கூறிக் கொள்ளும் விஜயகாந்த், தேர்தல் சமயத்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது, அதிமுகவும், திமுகவும் சேர்ந்து நாட்டையே கெடுத்து விட்டன என்று குறிப்பிட்டு திராவிட ஆட்சிகள் மக்களை ஏமாற்றி விட்ட என்று பேசியுள்ளார்.

எம்.ஜி.ஆர். 11 ஆண்டு காலம், மொத்தம் 3 முறை ஆட்சி செய்தார். அவரது ஆட்சி மோசடி ஆட்சியா? அவர் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையா? எம்.ஜி.ஆர். ரசிகன் என்று சொல்லிக் கொண்டு விஜயகாந்த் இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசி மக்களை ஏமாற்றக் கூடாது.

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது எம்.ஜி.ஆர். ஆட்சியைக் குறை கூறி விட்டு இப்போது எம்.ஜ.ஆர். ரசிகன் என்று கூறிக் கொள்வது எந்த வகையில் நியாயம்?

கருணாநிதி நம்மை சிறுமைப்படுத்த முன்பு எடுத்துக் கொண்ட ஆயுதம் கோப்பு. இப்போது தேமுதிக என்பதைப் பார்க்கும்போது நமது எதிரிகளின் கையில் வாளாக இருப்பவர்களின் உண்மைத் தன்மை என்ன என்பது மக்களுக்குப் புரிய ஆரம்பித்து விட்டது என்று கூறியுள்ளார் பன்னீர் செல்வம்.

http://thatstamil.oneindia.in/news/2006/10.../26/panner.html

  • தொடங்கியவர்

எம்.ஜி.ஆர். ரசிகன், அவர் எனது ஆசான் என்று கூறிக் கொள்ளும் விஜயகாந்த், தேர்தல் சமயத்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது, அதிமுகவும், திமுகவும் சேர்ந்து நாட்டையே கெடுத்து விட்டன என்று குறிப்பிட்டு திராவிட ஆட்சிகள் மக்களை ஏமாற்றி விட்ட என்று பேசியுள்ளார்.

ரசிகன் எண்டால் பிழைகளை சுட்டிக்காட்ட முடியாதா பனீர்செல்வம் அம்மாவின் காலில் அதாவ்து சொந்த அம்மாவின் காலில் விழுந்தாரோ தெரியாது ஆனால் ஜெயலலிதாவின் காலில் விழுந்து கும்பிடுகிறார் ஆட்டு மந்தை போல இருக்கும் இப்படியாணவர்களுக்கு எப்படி உரிமையை பற்றி தெரியும் என்னை ஒறுத்தவரை என் அறிவுக்குட்பட்ட வகையில் சொல்கிறேன் ஜெயலலிதாவின் ஆட்ச்சியை விட கலைஞ்சர் ஆட்ச்சி தமிழகத்துக்கு சிறந்தது ஈழத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை அல்லது எந்த நல்லதுமில்லை

ஜெ தன் சுயநலத்துக்காக புலிகளை இழுப்பார் இவரை ஒரு மனுசனாகவே கணக்கெடுக்கமாட்டாங்கள் புலிகள் அதுக்குள்ள இவாவை கொல்ல புலிகள் சதி என அறிக்கை :lol: :P

அடப்போங்கப்பா.... நடக்குற கூத்துலே நாங்களே நொந்துப் போயிருக்கோம்.... :lol:

  • தொடங்கியவர்

அடப்போங்கப்பா.... நடக்குற கூத்துலே நாங்களே நொந்துப் போயிருக்கோம்.... :lol:

எனக்கும் சொல்லுங்கோவன் அந்த கூத்தை பற்றி :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.