Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையை வந்தடைந்தார் குமார் குணரட்னம்

Featured Replies

Kumaran.jpg

 

முன்னிலை சோஷலிச கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் குமார் குணரட்னம் இன்று வியாழக்கிழமை காலை இலங்கைக்கு திரும்பியுள்ளதாக  அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. -

 

 http://www.tamilmirror.lk/136807#sthash.zNhLItv3.dpuf

சிறிலங்கா வந்தார் குமார் குணரத்தினம் JAN 01, 2015 | 5:20by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

gunaratnam-300x200.jpgமுன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவரான குமார் மஹத்தயா என்று அழைக்கப்படும்  குமார் குணரத்தினம் இன்று  அதிகாலை சிறிலங்கா வந்தடைந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேவிபியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான குமார் குணரத்தினம், அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு, போலி பெயருடன் அவுஸ்ரேலிய கடவுச்சீட்டில் சிறிலங்கா வந்த அவர், ஜேவிபியின் முக்கிய உறுப்பினர்களை இணைத்து, முன்னிலை சோசலிசக் கட்சியை உருவாக்கியிருந்தார்.

எனினும், 2012ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடுகடத்தப்பட்ட அவர் இன்று காலை 12.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக சிறிலங்கா வந்து சேர்ந்துள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இவர் இன்று முதல்முறையாக ராஜகிரியவில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளார்

எதிரணியின் வாக்குகளை சிதறடிக்கும் திட்டத்துடனேயே சிறிலங்கா அரசாங்கம் குமார் குணரத்தினத்துக்கு நுழைவிசைவு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.puthinappalakai.net/2015/01/01/news/2284

 

  • தொடங்கியவர்

மைத்திரிக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் குமார் குணரட்னம் இலங்கையில் என்கிறது கொழும்பு ஊடகம்

 

Kumar%20Kunaratnam_CI.jpg

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.


இன்றைய தினம் அதிகாலை குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.


கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய தகவல்களும் குமார் குணரட்னத்தின் வருகையை உறுதி செய்துள்ளன.


அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாக தெரிவித்து கடத்திச் செல்லப்பட்டதாக குமார் குணரட்னம் குற்றம் சுமத்தியிருந்தார்.


புலனாய்வுப் பிரிவினர் தம்மையும் சக பெண் செயற்பாட்டாளர் ஒருவரையும் கடத்தித் தாக்கியதாக குமார் குணரட்னம் குற்றம் சுமத்தியிருந்தார்.


நாட்டின் குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிச் செயற்பட்டதாகத் தெரிவித்து குமார் குணரட்னத்தை இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தியதுடன், குடிவரவு சட்டங்களை மீறியதற்காக அபராதம் ஒன்றையும் விதித்திருந்தது.


இந்த அபராதத் தொகை அண்மையில் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஜே.வி.பிக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக முன்னணி சோசலிச கட்சி குற்றம் சுமத்தி வருகின்றது.


இந்த இரகசிய உடன்படிக்கை பற்றி அம்பலப்படுத்தும் நோக்கில் குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம் செய்வார் என கட்சி முன்னதாக அறிவித்திருந்தது.


இதுவரை காலமும் இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்காத அரசாங்கம், மைத்திரிபாலவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து உடனடியாக வீசா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முன்னணி சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுவவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் குமார் குணரட்னம் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115021/language/ta-IN/article.aspx

இவரை டொரொன்டோவில் நடந்த நிகழ்வு ஒன்றில் பார்த்திருக்கின்றேன்.தமிழருக்கு நடந்தது இனப்படுகொலையே என்பதை ஏற்றுக்கொண்டவரும் கூட. நான் முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் இவரின் வருகையையும் சிங்கள மக்களின் அதிகாரத்தில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக்கூடிய தமிழரென்று எழுதிய போது.இதற்கு இந்த இணையத்தில் அளிக்கப்பட்ட பதில் இவர் ஒரு போதை மருந்து வியாபாரி என்ற தொனியில் இருந்தது.இனிமேல் பொறுத்திருந்து பார்ப்போம்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவரான குமார் மஹத்தயா என்று அழைக்கப்படும்  குமார் குணரத்தினம் இன்று  அதிகாலை சிறிலங்கா வந்தடைந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேவிபியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான குமார் குணரத்தினம், அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு, போலி பெயருடன் அவுஸ்ரேலிய கடவுச்சீட்டில் சிறிலங்கா வந்த அவர், ஜேவிபியின் முக்கிய உறுப்பினர்களை இணைத்து, முன்னிலை சோசலிசக் கட்சியை உருவாக்கியிருந்தார்.

எனினும், 2012ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடுகடத்தப்பட்ட அவர் இன்று காலை 12.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக சிறிலங்கா வந்து சேர்ந்துள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இவர் இன்று முதல்முறையாக ராஜகிரியவில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளார்

எதிரணியின் வாக்குகளை சிதறடிக்கும் திட்டத்துடனேயே சிறிலங்கா அரசாங்கம் குமார் குணரத்தினத்துக்கு நுழைவிசைவு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழரா?
அப்படி என்றால்... இவரை தலைவராக சிங்களவர் எப்படி ஏற்றுக் கொண்டார்கள்.
100 பேர் உள்ள கட்சி என்றாலும், தமிழனை.... சிங்களவர் தலைமை தாங்க, அனுமதிக்க மாட்டார்களே.....

வணக்கம் சிறி அண்ணா! புதுவருட வாழ்த்துக்களுடன்: இவரின் அப்பா தமிழ் என்று தெரியும்.இவர் ஜே வி பியின் முக்கிய மற்றும் பெரும் புள்ளி.ஏதோ சிங்களவனுக்கு சங்கூதவும் தமிழன் தான் தமிழனுக்கு சங்கூதுவதும் தமிழன் தான்.

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமார் மஹாத்தயா ஒரு காலத்தில் ஜே.வி.பி.யில் பெரிய ஆள். ஜே.வி.வி.க்கு இரு முகங்கள் உண்டு ஒன்று வெகுஜன அரசியல். மற்றது தீவிரவாதம். கிட்டத்தட்ட PLO வும் PFLPயும் போல. அல்லது PLO வும்  Force 17ம் போல. PLOவுக்குள் இருந்துகொண்டு  Force 17ஐ அலி ஹசன் சலாமி தொடங்கியதுபோல இவர் ஜே.வி.பி.க்குள் தொடங்கிய தீவிரவாத பிரிவுதான் பிரேமதாச காலத்தில் தேடித்தேடி அழிக்கப்பட்டது. சோமவன்ச அமரசிங்ககூட இந்த பிரிவின் ஆள்தான். சோமவன்ச அமரசிங்க இந்தியாவுக்கு தப்பிச் சென்று, பிரிட்டனுக்கு போய் வசித்துவிட்டு, அரசியல் பிரிவினராக மீண்டும் இலங்கை வந்தார். இது பழைய கதை. இப்போது குமார் மஹாத்தையாவின் பிரிவினர் மிகக் குறைவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.