Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய எல்லையில் 13 முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் விடிய, விடிய தாக்குதல் இந்தியா கடும் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
201501020601345390_Pakistan-army-continu

புதுடெல்லி,

 

இந்திய எல்லையில் 13 முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் விடிய, விடிய தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

போர்நிறுத்த ஒப்பந்தம் மீறல்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2002–ம் ஆண்டில் இருந்து போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்து வருகிறது. என்றாலும் அந்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக்கு அப்பால் இருந்தபடி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு வசதியாக பல சமயங்களில் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

562 முறை தாக்குதல்

2013–ம் ஆண்டில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் 550 முறை தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த 2014–ம் ஆண்டில் 562 முறை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் எண்ணிக்கை 410. எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் எண்ணிக்கை 152. கடந்த ஆண்டில்தான் பாகிஸ்தான் ராணுவம் அதிக முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக பாகிஸ்தான் சிப்பாய்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சம்பா மாவட்டம் சச்டெகார் என்ற இடத்தில் ரோந்து சென்ற இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி பாகிஸ்தான் சிப்பாய்கள் துப்பாக்கியால் சுட்டதில் இந்திய வீரர் ஒருவர் உயிர் இழந்தார். இதைத்தொடர்ந்து இந்திய வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் சிப்பாய்கள் 4 பேர் பலி ஆனார்கள்.

துப்பாக்கி சண்டை

சம்பா பகுதியில் சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள 13 இந்திய ராணுவ சாவடிகள் மீது நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் சிப்பாய்கள் துப்பாக்கியாலும், சிறியரக பீரங்கியாலும் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரும், அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவரும் காயம் அடைந்தனர்.

பதிலுக்கு இந்திய வீரர்களும் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இருதரப்பினருக்கும் இடையேயான இந்த துப்பாக்கி சண்டை நேற்று காலை 6 மணி வரை நீடித்தது.

ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தானுக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதான் எல்லையில் இயல்பு நிலை திரும்பும் என்றும் தெரிவித்தார்.

கெட்ட நோக்கத்துடன் யாரும் இந்தியாவுக்கு எதிரான செயலில் ஈடுபடவேண்டாம் என்றும் அப்படிப்பட்ட முயற்சியில் யாராவது ஈடுபட்டால் எல்லை பாதுகாப்பு படையினரும், நமது பிற பாதுகாப்பு படையினரும் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றும் அப்போது அவர் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார். போர்நிறுத்த ஒப்பந்த மீறல் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் அவர் கூறினார்.

ஜம்மு பகுதி எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. ராகேஷ் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:–

உள்நாட்டு பிரச்சினை

பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்சினை தலைதூக்கும் போதெல்லாம், அதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக அந்த நாட்டு ராணுவத்தினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக்கு அப்பால் இருந்து தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

தற்போது அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக பிரச்சினை இருந்து வருகிறது. அதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதாக தெரிகிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ராணுவம் மீறுவது குறித்து அந்த நாட்டிடம் இந்தியாவின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

கடுமையான பதிலடி

இந்திய ராணுவ வீரர்கள் ஒருபோதும் முதலில் பாகிஸ்தான் சிப்பாய்கள் மீது தாக்குதல் நடத்தியது கிடையாது. அவர்கள் தாக்குதல் நடத்தினால் மட்டும் பதில் தாக்குதல் நடத்துகிறார்கள். இதுதொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே உரிய அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினால், நம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. நமது வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அவர்கள் கொடுக்கும் பதிலடி மிகவும் கடுமையாக இருக்கும். அதனால் ஏற்படும் இழப்பை தாங்கிக் கொள்ள பாகிஸ்தான் ராணுவம் தயாராக இருக்க வேண்டும்.

ஊடுருவ தயாராக தீவிரவாதிகள்

தற்போது நிலவும் கடுமையான குளிரை பயன்படுத்தி காஷ்மீருக்குள் ஊடுருவ எல்லைப்பகுதியில் 50 முதல் 60 தீவிரவாதிகள் காத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்கள் ஊடுருவுவதை தடுப்பதற்காக நமது வீரர்கள் இரவும், பகலும் விழிப்புடன் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

 

இவ்வாறு ராகேஷ் சர்மா கூறினார்.

 

 

http://www.dailythanthi.com/News/India/2015/01/02002304/Pakistan-army-continues-attack-still-dawn-on-13-camps.vpf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.