Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடலில் மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின் ‘காக்பிட் வாய்ஸ் ரெகார்டர்’ சாதனம் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
201501131033133011_AirAsia-plane-s-cockp
 
சிங்கப்பூர், 
 
இந்தோனேஷிய கடல் பகுதியில் மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின், ‘காக்பிட் வாய்ஸ் ரெகார்டர்’ சாதனம் மீட்கப்பட்டது.
 
கடந்த மாதம் 28–ந்தேதி இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற ஏர்ஏசியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று ஜாவா கடல் பகுதியில் விழுந்தது. அதில் பயணம் செய்த 155 பயணிகளும் மற்றும் விமான ஊழியர்கள் 7 பேரும் பலியானார்கள்.
 
இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்களையும், விமானத்தின் சிதைந்த பாகங்களையும் இந்தோனேஷியாவின் தேடுதல், மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விமானத்தின் சிதைந்த பெரும் பகுதி மீட்கப்பட்டு விட்டது. எனினும் பலியானவர்களில் இதுவரை 48 பேருடைய உடல்கள் மட்டுமே கிடைத்து உள்ளன.
 
கடந்த 2 நாட்களுக்கு முன்பு விமானத்தின் வால்பகுதி மீட்கப்பட்டது. எனினும் அதில் வைக்கப்பட்டு இருந்த கருப்பு பெட்டியை மட்டும் காணவில்லை. பின்னர் அந்த கருப்பு பெட்டி இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில் கருப்பு பெட்டியை மீட்கும் பணிகள் நேற்று தொடர்ந்து நடந்தன. அப்போது நீர் மூழ்கி வீரர்கள் விமானத்தின் கருப்பு பெட்டியின் முக்கிய பகுதியான விமான தகவல் பதிவு சாதனத்தை மீட்டனர். விமான தகவல் பதிவு சாதனம் கிடைத்து இருப்பது விமான விபத்து குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.
 
இதனிடையே, விமானிகள் அறையில் நடக்கும் உரையாடல்களை பதிவு செய்யும் ‘காக்பிட் வாய்ஸ் ரெகார்டர்’ சாதனம், விமான தகவல் பதிவு சாதனம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து 20 மீட்டர் தொலைவில் இருப்பது அடையாளம் காணப்பட்டது. அதனை மீட்பதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டது. இந்த சாதனம் இருக்கும் இடத்தை கண்டறிய ரேடியோ அலைகளை செலுத்தி அது எதிரொலிக்கும் சமிக்ஞையை பெறுவதற்கும் முயற்சி நடைபெற்றுவந்தது. 
 
விமானிகள் அறையில் நடக்கும் உரையாடல்களை பதிவு செய்யும் ‘காக்பிட் வாய்ஸ் ரெகார்டர்’ சாதனம், இன்று மீட்கப்பட்டது. இச்சாதனம் இந்தோனேஷியா கடற்படைக்கு சொந்தமான கப்பலில் தற்போது உள்ளதாகவும், ஆய்வுக்காக ஜாகார்த்தா அனுப்பப்படும் என்றும் போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
 
விமானத்தின் கருப்பு பெட்டி என்பது விமான தகவல் பதிவு சாதனம்(பிளைட் டேடா ரெகார்டர்) மற்றும் விமானிகள் அறையின் உரையாடல்களை பதிவு செய்யும் காக்பிட் வாய்ஸ் ரெகார்டர் என்னும் 2 விதமான சாதனங்களைக் கொண்டதாகும். இந்த 2 பதிவு சாதனங்களுமே மிக முக்கியமானவை. இவற்றில்தான் விமானிகள் கடைசியாக என்ன பேசினார்கள் என்பதும், அந்த விமானம் பற்றிய பல்வேறு புள்ளி விவர தகவல்களும் தெரியவரும். எந்த இடத்தில் கிடந்தாலும் கருப்பு பெட்டி 30 நாட்கள் வரை செயல்பாட்டில் இருக்கும் என்பதும் அதில் பதிவான தகவல்கள் அதுவரை அழியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
 

ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தை தீவிரவாதிகள் தாக்கவில்லை என கருப்பு பெட்டி தகவலில் தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பர் 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் இதுவரை விமான விபத்திலிருந்து 40க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விபத்து எப்படி நடந்தது, இது தீவிரவாதிகளின் சதியா? என்ற பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்துள்ளது.

எனவே விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் தான் விபத்துக்கான மர்மம் தெரியவரும் என கருதப்பட்டது.

அதன்படி விமானத்தின் உடைந்த பாகங்களுடன் கருப்பு பெட்டிகளும் மீட்கப்பட்டதுடன், அதில் உள்ள ‘வாய்ஸ் ரெக்கார்டர்’ (ஒலி இழை) பரிசோதிக்கப்பட்டது

ஆனால் அதில் விமானிகளின் குரல் தவிர வேறு நபர்களின் குரல்கள் எதுவும் பதிவாகததால், ஏர் ஏசியா விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி தாக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.  இத்தகவலை இந்தோனேஷிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணைய அதிகாரி ஹனான்டோ (Hananto)தெரிவித்துள்ளார்.

 
 

 

 
 

 

- See more at: http://www.canadamirror.com/canada/37005.html#sthash.BPSZclQy.dpuf

கடலில் விழுவதற்கு முன்பு ஓயாமல் அடித்த ஏர்ஏசியாவின் எச்சரிக்கை அலாரம்கள்
 

 

ஜகர்தா: இந்தோனேசிய கடலில் விழுவதற்கு முன்பு ஏர்ஏசியா விமானத்தின் எச்சரிக்கை அலாரம்கள் ஒரேநேரத்தில் ஒலித்துள்ளது கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி சிங்கப்பூரூக்கு 168 பேருடன் கிளம்பிய ஏர்ஏசியா விமானம் க்யூஇசட் 8501 ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் இந்தோனேசியாவின் ஜாவா கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்று அறிவிக்கப்பட்டது. கடலில் இருந்து விமானத்தின் பாகங்கள் மற்றும் கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

Read more at: http://tamil.oneindia.com/news/international/airasia-8501-stall-warnings-screaming-before-crash-reports-219397.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.