Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்தியின்றி, ரத்தமின்றி உலகில் நடக்கும் பொருளாதாரப் போர் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு பீப்பாய் 20 டாலராகக் குறையுமா?
ச.ஸ்ரீராம்
 

முன்பெல்லாம் ஒரு நாட்டை அழிக்க ஆயுதங்களையும், குண்டுகளையும் வீசித் தாக்கினர். அதற்குப் பதிலாக தற்போது புதிதாகக் கண்டுபிடித்திருக்கும் வழிதான், பொருளாதாரப் போர். ஒரு நாட்டுக்கு வருமானத்தைத் தரக்கூடிய பொருளை அதிகமாக உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் எதிரிநாட்டை கத்தியின்றி, ரத்தமின்றி ஒழித்துக்கட்டுவதுதான் இந்தப் பொருளாதாரப் போரின் நோக்கம். அப்படியொரு பொருளாதாரப் போர்தான் தற்போது சர்வதேச அளவில் நடந்து வருகிறது. இந்தப் போரின் முக்கிய ஆயுதமாக மாறியிருக்கிறது கச்சா எண்ணெய். இதனை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்வதன் மூலம் வல்லரசாக விளங்கும் ரஷ்யாவையும், ஈரானையும் ஆட்டுவிக்க, அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள் கமாடிட்டி துறை வல்லுநர்கள். கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் பின்னணியில் நடக்கும் இந்த கச்சா எண்ணெய் அரசியலின் சதுரங்க ஆட்டம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று இனி பார்ப்போம்! 

ஏன் குறைகிறது?

சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 115 டாலராக இருந்தது. தற்போது குறைந்து 51.15 டாலராக வர்த்தகம் ஆகிறது. கடந்த ஆறு மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 50 சதவிகிதம் குறைந்துள்ளது. இதற்குக் காரணம், அமெரிக்கா ஷேல் உற்பத்தியை அதிகப்படுத்துவதும், கச்சா எண்ணெய் இருப்பை அதிகரிப்பதும்தான். ஒரு நாளைக்கு 10 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் அமெரிக்கா, ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி, சவுதி அரேபியாவும், ஓபிஇசி (ஆயில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள்) உறுப்பு நாடுகளும் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்காமல், அதே அளவில் வைத்துள்ளன. சீனா உள்பட உலக நாடுகளில் பொருளாதார வேகம் குறைந்ததால், கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளது. ஆனால், உற்பத்தி குறைந்தபாடில்லை.

p27a.jpg

இந்த நிலையில், கச்சா எண்ணெய் தரும் வருமானத்தைப் பெரிய அளவில் நம்பியுள்ள ரஷ்யாவும், ஈரானும் தாங்கள் உற்பத்தி செய்து வைத்திருக்கும் எண்ணெய்யை எவ்வளவு விலை குறைந் தாலும் விற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய சுமார் 20  25 டாலர்களே செலவு செய்யும் நிலையில், விலை இறங்கினாலும் கவலை இல்லை என்கிற நிலையில் இருக்கின்றன. ஆனால், நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் ரஷ்யாவோ, கச்சா எண்ணெய்யின் விலை குறையக் குறைய அதன் லாபத்தைப் பெருமளவில் இழக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை தற்போது இறக்கம் கண்டுவருவதைப்போல தொடர்ந்து இறங்கும்பட்சத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 20 டாலர்களைக்கூட (இந்திய மதிப்பில் சுமார் 1300 ரூபாய்) தொட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர் சில நிபுணர்கள்.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 20 டாலராகக் குறைந்தால், அதனை நம்பி இருக்கும் நாடுகள் பெரிய அளவில் பொருளாதாரச் சரிவைச் சந்திக்கும். அதனால் உலக அளவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என பேராசிரியரும்  கமாடிட்டி ஆலோசகருமான பாபி ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்.

p27b.jpg

''கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தைகளில் எதிர்பாராத அளவுக்கு குறைந்து வருகிறது. இதற்கு அதிக உற்பத்தியும், குறைந்த தேவையும் உள்ளதே காரணமாகும். தேவை இல்லையெனில் உற்பத்தியைக் குறைக்கலாம் என்ற விதிக்கு மாறாக, அமெரிக்க மற்றும் அரபு நாடுகள் உற்பத்தியைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போது மார்க்கெட்டில் விற்கும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 51 டாலர். ஆனால், கள்ளச் சந்தையில் 40 டாலர் வரைகூட விற்கப்படுகிறது. அதாவது, கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்றப்பட்ட பின்னர் விலை பேசப்படுகிறது என்ற அளவில் உள்ளது. கச்சா எண்ணெய் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு அதனைக் குறிப்பிட்ட நாடுகளுக்கு அனுப்பிவிட்டு, பிறகு இவ்வளவு பேரல் கச்சா எண்ணெய் உங்கள் நாட்டுக்கு வருகிறது, அதனை நீங்கள் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

1998ம் ஆண்டு இதேபோல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 10 டாலருக்கு வீழ்ந்தது. அதன்பின் நன்கு விலையேறிய கச்சா எண்ணெய்  தற்போது அதிவேகமாகக் குறைந்து 20 டாலர் வரைகூடச் செல்ல வாய்ப்புள்ளது.

p27c.jpgகச்சா எண்ணெய்யின் விலை குறைந்தால் அனைத்து காமாடிட்டி விலையும் சேர்ந்து குறையும். இது ரஷ்யா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். தற்போது வளர்ச்சியற்று காணப்படும் ஐரோப்பிய சந்தை இன்னமும் சந்தை வீழ்ச்சியைச் சந்திக்கும். அப்படிப் பார்த்தால், அந்த நாட்டில் வட்டி விகிதம் நெகட்டிவாக மாறும் நிலை உருவாகும். அதன்படி பார்த்தால், கடன் வாங்குபவருக்கு கடன் கொடுப்பவர் வட்டி கொடுக்கும் நிலை உருவாகும். இதையெல்லாம்விட சர்வதேச பங்குச் சந்தைகள் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும்'' என்றார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் நம் நாட்டில் அதன் விலை குறையாதபடிக்கு கலால் வரியை உயர்த்தி வருகிறது மத்திய அரசாங்கம். ஆனால், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 40 டாலருக்குக் கீழ் குறைந்தால், நம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசாங்கத்துக்கு நிச்சயம் ஏற்படும். அந்த அளவுக்கு கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறையுமா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

p27g.jpgகச்சா எண்ணெய் விலை சரமாரியாக இறங்கும் இந்த நேரத்தில் ஆயில் நிறுவன பங்குகளை வாங்கலாமா, இந்த நேரத்தில் ஆயில் பங்குகளில் என்ன நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பங்குச் சந்தை நிபுணர் லட்சுமணராமனிடம் கேட்டோம்.

 

''இந்தியாவைப் பொறுத்தமட்டில் கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுp27d.jpgஎன்பதால், நிச்சயம் லாபம்தான். கச்சா எண்ணெய்யைக் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்வதால், அது சார்ந்த தொழில் செய்யும் நிறுவனங்கள் குறைவான விலையில் உற்பத்தியைச் செய்ய முடியும். கச்சா எண்ணெய்யின் உப பொருட்களான பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறையுமா என்றால், அரசின் கலால் வரி விதிப்பால் அது குறையாமலே இருக்கும். இதனால் கச்சா எண்ணெய்யை நம்பி தொழில் செய்யும் நிறுவனங்கள் நல்ல நிலையில் இயங்க வாய்ப்புள்ளது.

அதேசமயம் கச்சா எண்ணெய்யை வைத்து நாட்டின் வருமானத்தை ஈட்டும் நாடுகளுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படலாம். காரணம் என்னவெனில், அந்த நாடு வருமானம் குறைந்ததால் இங்கிருந்து அந்த நாட்டுக்கு ஏற்றுமதியாகும் பொருளுக்குப் பணம் அளிப்பதில் தாமதத்தையோ அல்லது ஏற்றுமதியை நிறுத்திக்கொள்ளும் சூழலோ உருவாகும். எப்போதெல்லாம் ஏற்றுமதி பாதிக்கப்படுகிறதோ, அப்போது நமது ஜிடிபியும் பாதிப்படையும்.

கச்சா எண்ணெய்யின் விலை முன்பு ஒரு பீப்பாய்க்கு 10 டாலர் வரை சென்றுள்ளது. தற்போதைய பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில், 1620 டாலர் வரை செல்லலாம் என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் ஆயில் பங்குகளை வாங்கலாமா எனில், கண்டிப்பாக வாங்கலாம். 20 டாலருக்கு வாங்கி, பின் 40 டாலருக்கு சென்றாலே இரண்டு மடங்கு லாபம் தருவதாக இருக்கும். கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளபோது வாங்கினால், நீண்ட காலத்தில் விலை அதிகமாகும்போது நல்ல லாபம் பெறலாம்'' என்றார்.

 

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.