Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயிட்லி -ஜெயலலிதா சந்திப்பு குறித்து அரசியல் சர்ச்சை (2ம் இணைப்பு)

Featured Replies

ஜெயிட்லி -ஜெயலலிதா சந்திப்பு குறித்து அரசியல் சர்ச்சை

 
141225100812_arun_jaitley_624x351_afp.jpசர்ச்சையில் சிக்கிய ஜெயிட்லி ஜெயா சந்திப்பு

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, தனது பதவியை இழந்த முதல் முதல்வரான ஜெயலலிதாவை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்தது பற்றி தமிழ்நாட்டில் அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தேவை ஏன் ஏற்பட்டது என்று தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

ஜெயலலிதா மற்றும் அருண் ஜெட்லி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். அவரது அதிகாரப்பூர்வ சமுக வலைதளங்களிலும் வெளியாகியுள்ள இந்த விமர்சனத்தில், "மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; கங்கையே சூதகமானால், எங்கே போவது?" என்கிற வாசகத்துடன் அதை அவர் தொடங்கியுள்ளார்.

மேலும் இது சந்தேகத்தை உறுதிப்படுத்தும் சந்திப்பு என்றும் குறிப்பிட்டுள்ள அவர், ஜெயலலிதா மற்றும் அவரது நெருங்கிய தோழி சசிகலா ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வருமான வரி வழக்கு முடிவுக்கு வந்தது தொடர்பில அவருக்கு உள்ள சந்தேகங்களையும் பட்டியலிட்டுள்ளார்.

குறிப்பாக வருமான வரித் துறையிடம் ஜெயலலிதா சமாதானம் செய்து கொள்வதாக நீதிமன்றத்தில் மனு செய்திருந்த நேரத்தில், அந்தத் துறையின் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்ததும், அதன் பின்னர் அந்தத் துறை வழக்கினைத் திரும்பப் பெற்றுக் கொண்டதும், தற்போது அதே மத்திய அமைச்சரே, வேறொரு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, தண்டனைக்கு ஆளாக்கப்பட்டு, மேல் முறையீட்டு வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்ற நிலையில், தண்டிக்கப்பட்டவரின் வீட்டிற்கே சென்று சந்திப்பது என்பது முறைதானா, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிலும் அவர் பிரதமரின் ஒப்புதலோடுதான் ஜெயலலிதாவை சந்திக்க சென்றதாகவும் செய்தி வந்துள்ளது. அதனால் பிரதமரும் இதற்கெல்லாம் உடந்தையோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்துள்ளதாக கருணாநிதி அதில் கூறியுள்ளார்.

இதே சமயம் சேலம் நகரில் செய்தியாளர்களை இன்று சந்தித்த பாமக தலைவர் ராமதாஸ் பேசிய போது, இந்த சந்திப்பின் பின்னணி தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்க அளிக்க வேண்டும் என்றார்.

அதிலும் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் சமயத்தில் நடைபெற்றுள்ள இது போன்ற சந்திப்பு, முறையற்றது என்றும் கூறியிருக்கிறார்.

பாஜகவுடனான கூட்டணியில் தொடரும் கட்சியான பாமகவின் தலைவரே, இத்தகைய விமர்சனங்களை எழுப்பியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் தேதி இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்த சர்ச்சை இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்னமும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து எந்தவிதமான அறிவிப்பையும், பாஜக கூட்டணியினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/india/2015/01/150119_jaitelyjaya?ocid=socialflow_facebook

 

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்

ராஜ்ய சபாவில் ஆதரவுக்கே ஜெயிட்லி ஜெயா சந்திப்பு -- வானதி ஸ்ரீநிவாசன்

 

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவை இந்திய நிதியமைச்சர் அருண் ஜெயிட்லி சந்தித்ததில் உள்நோக்கம் இல்லை, பாஜக அரசு எந்த ஒரு நீதிமன்ற வழக்கிலும் தலையிடாது, இது வரை தலையிட்டதாக சரித்திரமும் இல்லை என்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் வானதி ஸ்ரீநிவாசன்.

இன்று அருண் ஜெயிட்லி ஜெயலலிதாவை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. திமுக தலைவர் மு.கருணாநிதி மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போன்றோர் இது குறித்து விமர்சித்திருக்கின்றனர்.

இந்தப் பிரச்சனை பற்றி பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட , தமிழக பாஜக துணைத்தலைவர் வானதி ஸ்ரீநிவாசன், தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களைப்பெற்றுள்ள கட்சியின் பொதுச்செயலர் என்ற வகையில் ஜெயலலிதாவை ஜெயிட்லி சந்தித்தார், ராஜ்ய சபாவிலும் அக்கட்சிக்கு உறுப்பினர்கள் உண்டு என்ற வகையில், இது போன்ற கட்சிகளோடு சுமுக உறவு தேவை என்ற அடிப்படையிலேயே இந்த சந்திப்பு நடந்தது என்றார்.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரை இந்தியாவின் நிதியமைச்சர் அவரது வீட்டிற்குச் சென்று சந்திப்பது என்பது , வழக்குகளில் ஆளும் பாஜகவின் நிலைப்பாடு குறித்த சந்தேகங்களை எழுப்பலாம் என்ற நிலையில் இதைத் தவிர்த்திருக்கவேண்டாமா என்று கேட்டதற்கு, இதற்கு முன்னரும் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த போது சட்டத்துறை அமைச்சர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்தார், ஆனால் வழக்கு சுயாதீனமாகத்தான் அதன் போக்கில் நடந்தது, என்று கூறிய வானதி, பாஜக இதற்கு முன்னரும் எந்த ஒரு வழக்கின் போக்கிலும் தலையிட்டதாக வரலாறு இல்லை என்றார்.

 

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.