Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது பற்றி இந்தியா-இலங்கை அதிகாரிகள் டெல்லியில் ஆலோசனை:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
eelam-refugees-310115-350-india.jpg

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகள், தானாக முன்வந்து தங்கள் நாடு திரும்பி செல்வதற்கான அம்சங்கள் குறித்து இந்தியா, இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையின்போது, லட்சக்கணக்கானோர் இந்தியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். தற்போது, 34 ஆயிரத்து 524 குடும்பங்களைச் சேர்ந்த, 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 அகதிகள் தமிழகத்தில் உள்ளனர்.

   

இவர்களில், 19 ஆயிரத்து 625 குடும்பங்களை சேர்ந்த 64 ஆயிரத்து 924 பேர் 107 அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றத் துக்கு பிறகு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா தனது முதல் வெளி நாட்டு பயணமாக இந்தியா வந்தார். அப்போது, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் அவர் 3 மணி நேரம் விரிவான ஆலோசனை நடத்தினார். அதில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சொந்த நாடு திரும்ப நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், இதற்கான பேச்சுவார்த்தையை மாத இறுதியில் நடத்துவதெனவும் அறிவிக்கப்பட்டது.

 

இதற்கிடையே, இலங்கை அரசு நம்பத்தகுந்த நடவடிக்கைகளை எடுத்த பின்னரே இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கான நடைமுறை பற்றி ஆலோசிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் கடிதம் எழுதினார். இந்நிலையில், தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகளை, அவர்கள் விருப்பத்துடன் தாயகம் திருப்பி அனுப்புவது குறித்த முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்திய வெளியுறவுத் துறை இணை செயலளர் சுஜிந்திரா துரை தலைமையில் இந்திய அதிகாரிகளும், இலங்கையின் வெளியுறவுத் துறை இணை செயலாளர் தலைமையில் அதிகாரிகளும் பங்கேற்றனர். தமிழக அரசு தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. அகதிகளை தாயகம் அனுப்பும் முன்பாக அவர்களி டம் கருத்து கேட்பது, தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவது, இலங்கையில் அவர்களை எங்கு தங்க வைப்பது, அவர்களுக்கென தனி வீடுகள் கட்டுவதா என பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

http://seithy.com/breifNews.php?newsID=125710&category=IndianNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.