Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

22ஆம் திகதி நடைபெறும் நிகழ்வில் வடக்கு அமைச்சர்கள் பங்கேற்றமாட்டார்கள்: சி.வி

Featured Replies

article_1424269078-CV.jpg

 

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களும் வடமாகாண அமைச்சர்களும் பங்கேற்பதாக சேஞ்ச் என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அந்நிகழ்ச்சியில் வடமாகாண அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள் என முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் சேஞ்ச் அமைப்பின் பொதுச் செயலாளர் ஜியாஉல் ஹசன் ரவூப்புக்கு கடிதமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
சேஞ்ச் நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள நிகழ்வொன்றில், மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மீன்பிடி அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோரும் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
 
சேஞ்ச் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் காலை அமர்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்திலும் மாலை அமர்வு மத்திய, மாகாண அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடலாக அமைச்சு ரீதியாக வெவ்வேறு இடங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
 
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இவ்வாறு அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தமைக்குக் கல்விச் சமூகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறான ஒரு நிகழ்ச்சி தொடர்பாக எவ்விதமான கலந்தாய்வும் இல்லாமலேயே அழைப்பிதழில் தங்களின் பெயர்கள் போடப்பட்டிருப்பதாக வடமாகாண அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
 
இந்நிலையிலேயே இவ்விவகாரம் குறித்து மேற்படி அமைப்புக்கு முதலமைச்சர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 
'இக்கூட்டத்துக்கான திகதி எங்கள் அமைச்சர்களின் ஒப்புதலோ கலந்துரையாடலோ இல்லாமல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. இதன் நோக்கம் மற்றும் வடமாகாண மக்களுக்கு இந்நிகழ்ச்சி எவ்விதத்தில் நன்மை பயக்கும் என்பதனைக் கலந்துரையாடாமல் என்னையும் எமது அமைச்சர்களையும் கூட்டத்துக்கு அழைப்பது பொருத்தமற்றது.
 
 
இது சம்பந்தமாக நீங்கள் மத்திய அரசாங்க அமைச்சர்களுக்கு என்ன கருத்தை கூறியிருக்கின்றீர்கள் என்பதும் தெரியவில்லை. எங்கள் அமைச்சர்கள் எவரும் இக்கூட்டத்தில் பங்குபற்றமாட்டார்கள் என்பதைக் கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.